Skip to main content

இலங்கையில் மண்ணை கவ்வும் மகிந்த குடும்பத்தினர்! 

Published on 10/05/2022 | Edited on 10/05/2022

 

Mahinda family digs soil in Sri Lanka!

 

'ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை நிச்சயம் உண்டு' இது இப்போது இலங்கையின் அரசு குடும்பத்தை உணர செய்திருப்பதாக சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றன. 

 

இலங்கையில் கரோனாவால் பொருளாதாரம் முடங்கியது, அதைத் தொடர்ந்து, சிறிய அளவிலான போராட்டம், விஸ்வரூபம் எடுத்தது உலகறிந்த விசயம். ஜல்லிக்கட்டுக்கான மெரினா போராட்டங்கள் போல, சில மாதங்கள் அமைதியாக நடந்த நிலையில், தேன் கூட்டில் கை வைத்தது போல, மக்கள் மீது ராஜபக்சே குடும்ப ஆதரவாளர்கள், தாக்குதல் நடத்தியது வினை. 

 

அதன் எதிர்வினை பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே இழக்கச் செய்தது. மக்களின் போராட்டத்தை எதிர்கொள்ள முடியாமல், ஊரடங்கு, அவசரநிலை பிரகடனம் என முயற்சித்துப் பார்க்கும் அதிபர் கோத்தபய இறுதியில் ராணுவத்தைக் களமிறங்கியது அடுத்த வினை. எதிர்காலத்தைத் தொலைத்து போராடுவோரை அடக்கும் ராணுவத்தின் முயற்சி வன்முறையில் முடிந்திருக்கிறது. 

 

Mahinda family digs soil in Sri Lanka!

 

குடும்ப உறுப்பினர்கள் பலர் பதவி விலக, பிரதமராக தம்பியும் பக்கத்தில் இல்லாமல் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தத்தளிப்பது இதன் எதிர்வினை. கடந்த 2009- ஆம் ஆண்டு கொத்துக் குண்டுகளால் தமிழர்களை கொத்து கொத்தாகக் கொன்று புதைத்தபோது, ஆட்சியில் இருந்தவர்கள் இதே ராஜபக்சே குடும்பத்தினரே. 

 

அப்போது, அவர்களது வினைக்கு பாலுக்கு ஏங்கிய பச்சிளங் குழந்தைகள் முதல் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மகன் வரை இறையாகின. அது அன்று மகிந்த குடும்பத்தினர் செய்த வினை. 

 

Mahinda family digs soil in Sri Lanka!

 

தமிழர்கள் மட்டுமல்ல சிங்கள மக்களே ராஜபக்சே குடும்பத்தினரைப் பதவியில் இருந்து விரட்ட தொடர் போராட்டத்தில் கை கோர்த்திருப்பது எதிர்வினை. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மீனவர்களின் பிரச்சினையில் தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டும்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Decisive action should be taken on the problem of fishermen CM MK Stalin

தமிழ்நாட்டைச் சேர்ந்த 32 மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி நேற்று (21.03.2024) இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட வேண்டும். மேலும் அவர்களுக்குத் தேவையான சட்ட உதவிகளைச் செய்திடவும் வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு இன்று (22.03.2024) கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் அண்மைக் காலமாக தொடர்ந்து கைது செய்யப்படுவது ஆழ்ந்த வேதனையை அளிக்கிறது. கடந்த சில வாரங்களாக பல்வேறு சம்பவங்களில் இந்திய மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது. அவர்களது குடும்பத்தினரிடையேயும், மீனவ சமூகத்தினரிடையேயும் பெருத்த மன உளைச்சலையும் நிச்சயமற்ற சூழலையும் ஏற்படுத்தியுள்ளது. 21.03.2024 அன்று (நேற்று) தமிழ்நாட்டைச் சேர்ந்த 32 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களது 5 விசைப்படகுகள் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளன.

கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 76 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, இப்பிரச்சினையில் தாமதம் ஏதுமின்றி தீர்வு காண, தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வலியுறுத்திகிறேன். இலங்கை நீதிமன்றங்களில் தண்டனை பெற்று, இலங்கை சிறைகளில் வாடும் மீனவர்களுக்கு தேவையான சட்ட உதவிகளை வழங்கிடவும் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

ராமேஸ்வரம் மீனவர்கள் 20 பேர் கைது?

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
20 Rameswaram fishermen incident

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. இத்தகைய சூழலில் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து இன்று (20.03.2024) காலை ஏராளமான விசைப் படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்றிருந்தனர். அவ்வாறு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர். மேலும் மீனவர்கள் 20 பேரை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகச் சிறைபிடித்து கைது செய்தனர். அதோடு மீனவர்களின் 3 படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

இதனையடுத்து ராமேஸ்வரம் மீனவர்களை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். ராமேஸ்வரம் மீனவர்கள் 20 பேர் கைது செய்யப்பட்டதுடன் இரண்டு விசைப் படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ள சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் விசாரணைக்கு பின்னர் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள்  20 பேரும் விடுவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.