Skip to main content

'மறப்போம் மன்னிப்போம்'- நான்கு பேரிடமும் நேரம் கேட்டு புகழேந்தி கடிதம்

Published on 14/06/2024 | Edited on 14/06/2024
'Let's forget and forgive'- pugazhendhi letter to the four people asking for time

அதிமுகவில் ஏற்பட்ட பிளவைத் தொடர்ந்து அடுத்தடுத்த தேர்தல்களில் தோல்வியைச் சந்தித்து வருகிறது. இந்நிலையில் அதிமுக மீண்டும் ஒன்று பட வேண்டும் எனப் பல்வேறு தரப்புகளில் இருந்து அக்கட்சியின் நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார். 'ஒற்றைக் குச்சியை உடைப்பது சுலபம்; கத்தை குச்சியை முறிப்பது கடினம். இனியும் தாமதம் சொல்லி தோல்விக்குத் தொண்டர்களைப் பழக்குவது பாவ காரியம். நமது வெற்றியை நாளை சரித்திரமாக்கிட மனமாட்சியம் மறந்து ஒன்றாக வேண்டும். கட்சியை மீட்டெடுக்க எத்தகைய தியாகத்துக்கும் தயாராகுவோம்' என அண்மையில் ஓபிஎஸ் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார். ஆனால் அடுத்த நாளே செய்தியாளர்களைச் சந்தித்த கே.பி.முனுசாமி, 'எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற முன்னாள் தலைவர்களை விமர்சித்தவருடன் தேர்தல் கூட்டணி வைக்கும் ஓபிஎஸ் அதிமுக ஒன்றிணைவது குறித்து பேசத் தகுதியற்றவர். அவர் அறிவுரை சொல்லத் தேவையில்லை' எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஓபிஎஸ் அணியில் இருந்த புகழேந்தி, ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் தங்களுடைய ஆதரவை விலக்கிக் கொண்டு அதிமுக ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். அந்த வகையில் அதிமுக ஒருங்கிணைப்புக் குழு என்ற புதிய குழுவை உருவாக்கி உள்ளனர். இந்த குழுவின் சார்பில் வ.புகழேந்தி தற்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன், சசிகலா ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், ;ஜெயலலிதா மறைவுக்குப் பின்னும் ஒற்றுமை ஏற்பட்டு மீண்டும் பிளவு ஏற்பட்டுள்ளது. மறப்போம் மன்னிப்போம் என்பதை மனதில் கொண்டு அனைவரும் ஒன்றுபட வேண்டும். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சி தமிழகத்தில் மீண்டும் அமைவதே அதிமுக தொண்டர்களின் எண்ணமாக இருக்கிறது. அதிமுக ஒற்றுமை வேண்டி நான்கு பேரையும் சந்திக்க விரும்புகிறோம். ஆலோசனைகள் கருதிப் பகிர நேரம் ஒதுக்கித் தரும்படி கேட்டுக்கொள்கிறோம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

சட்டப்பேரவையில் இருந்து அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றம் (படங்கள்)

Published on 21/06/2024 | Edited on 21/06/2024

 

சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் தமிழக சட்டசபை பேரவைக் கூட்டத் தொடரின் இரண்டாவது நாள் இன்று(20.06.2024) தொடங்கியது. அப்போது, கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாகச் சட்டப்பேரவையில் அ.தி.மு.க, பா.ம.க மற்றும் பா.ஜ.க ஆகிய எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். பேரவைத் தலைவர் இருக்கை முன்பு அ.தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குண்டுக்கட்டாகச் சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

Next Story

கள்ளக்குறிச்சி விவகாரம்; சட்டப்பேரவையில் கடும் அமளி! 

Published on 21/06/2024 | Edited on 21/06/2024
There is a lot of tension in the Legislative Assembly

சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் தமிழக சட்டசபை பேரவைக் கூட்டம் நேற்று (20.06.2024) தொடங்கியது. கூட்டத் தொடரின் முதல் நாளான நேற்று, மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அப்போது பேசிய சபாநாயகர் அப்பாவு, “துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல். கள்ளச்சாராய விவகாரத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்குவதாகத் தமிழ்நாடு முதல்வர் தெரிவித்திருக்கிறார். உடல்நலம் பாதிக்கப்பட்டோருக்கு உடனே சிகிச்சை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்” எனத் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து சட்டப்பேரவை கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான இன்று (21.06.2024) காலை இயற்கை வளங்கள் துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் மீதான மானியக் கோரிக்கைகளின் மீது விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து மாலையில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை (உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை) (சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை), மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை ஆகிய துறையின் மீதான மானியக் கோரிக்கைகளின் மீது விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெற உள்ளது. 

There is a lot of tension in the Legislative Assembly

இந்நிலையில் கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாகச் சட்டப்பேரவையில் அதிமுக, பாமக மற்றும் பாஜக ஆகிய எதிர்க்கட்சிகள் எம்.எல்.ஏ.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். பேரவைத் தலைவர் இருக்கை முன்பு அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குண்டுக்கட்டாகச் சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். தர்ணாவில் ஈடுபட்டவர்கள் ‘பதவி விலகுங்கள் ஸ்டாலின்’ என்று எழுதப்பட்ட காகிதத்தைக் காண்பித்து முழக்கமிட்டனர்.

முன்னதாகக் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்திற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் அதிமுக எம்எல்ஏக்கள் கருப்புச் சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வருகை தந்தனர். அதன்படி சட்டமன்றத்திற்கு கருப்புச் சட்டை அணிந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, துனைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் வருகை தந்தது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் பாமக சட்டமன்ற உறுப்பினர்களும் கருப்பு சட்டை அணிந்து வந்ததும் கவனிக்கத்தக்கது.