Published on 02/05/2019 | Edited on 02/05/2019
தாய்லாந்து நாட்டில் கடந்த 2016ம் ஆண்டு அக்டோபர் மாதம் தாய்லாந்து மன்னர் புமிபோல் அடுல்யாதேஜ் வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார். அதன்பின் மகா வஜிரலங்கோன் (66) அடுத்த மன்னராக அறிவிக்கப்பட்டார்.
![King Vajiralongkorn of Thailand marries his security chief Suthida and makes her queen](http://image.nakkheeran.in/cdn/farfuture/7pmcbv7RfB2DJGQLinXPgjrYxQdCfO-eJOJQhS9jCvQ/1556790027/sites/default/files/inline-images/thailand-mm.jpg)
இவர் வரும் சனிக்கிழமை அன்று அதிகாரப்பூர்வமாக மன்னராக முடிசூடி அறியணை ஏறவுள்ளார். இந்நிலையில் தனது பாதுகாவலராக பணிபுரிந்த சுதிடா என்பவரை இன்று மணமுடித்துள்ளார். ஏற்கனவே 3 முறை திருமணமாகி விவாகரத்தான இவர் தற்போது நான்காவது மனைவியாக சுதிடாவை திருமணம் செய்துள்ளார். தாய் ஏர்வேஸ் நிறுவனத்தில் விமான உதவியாளராக பணியாற்றிய சுதிடா கடந்த 2014 ஆம் ஆண்டு மகா வஜிரலங்கோனின் பாதுகாவலராக பணியமர்த்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.