Skip to main content

எல்லை பிரச்சனை; “சீன அதிபர் இந்தியா வருவார்..” - ஜோ பைடன் நம்பிக்கை

Published on 02/09/2023 | Edited on 02/09/2023

 

 Joe Biden Hopes Chinese president will come to India

 

ஜி 20 அமைப்பின் உறுப்பு நாடுகளாக அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியக் குடியரசு, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை உள்ளன. ஜி20 அமைப்பின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் உச்சி மாநாடு நடைபெறுவது வழக்கம்.

 

அந்த வகையில் இந்த ஆண்டு டெல்லியில் நடைபெறும் ஜி 20 உச்சி மாநாட்டுக்கு இந்தியா தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளது. அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஜி 20 தொடர்புடைய மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன. மேலும் டெல்லியில் செப்டம்பர் 8 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை ஜி - 20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஜி - 20 உறுப்பு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் இந்தியாவிற்கு வருகை தர உள்ளனர். இந்த மாநாட்டை நடத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு ஏற்பாடுகள் செய்து வருகின்றது.

 

அதனைத் தொடர்ந்து, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், ஆஸ்திரேலியா பிரதமர் ஆல்பனேசி, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், ஜப்பான் பிரதமர் கிஷிடா உள்ளிட்டோர் டெல்லியில், நடைபெறும் உள்ள ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதாக உறுதி அளித்துள்ளனர். மேலும், ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் பங்கேற்கவில்லை என்றும் இது தொடர்பாக பிரதமர் மோடியிடம் தொலைபேசி வாயிலாக விளக்கமளித்துள்ளார் என்றும் தகவல் வெளியானது. அவருக்குப் பதிலாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கெய் லாவ் ரோவ் பங்கேற்க இருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி நடத்தும் இந்த மாநாட்டில் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் தலைமையில் சுமார் 25 க்கும் மேற்பட்ட அமெரிக்க பிரதிநிதிகள் பங்கேற்க இருக்கின்றனர்.

 

இந்த நிலையில், சமீப காலமாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லை சம்பந்தமாக உரசல்கள் இருந்து வருகிறது. தென்னாப்பிரிக்காவில் நடந்த ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாட்டில் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் உள்ளிட்ட சில தலைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது,  பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சத்தித்து இது குறித்து உரையாடுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. அதனை உறுதி செய்யும் விதமாக சீன வெளியுறவு அமைச்சகம் தனது அறிக்கையில், “பிரதமர் மோடி வேண்டுகோளின் பேரில் பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் போது அதிபர் ஷி ஜின்பிங் மோடியுடன் பேசினார்” என்று தெரிவித்திருந்தது. அதே போல், இந்திய அதிகாரிகள் தரப்பிலும் தகவல்கள் வந்தன.

 

இதற்கிடையே, சில தினங்களுக்கு முன்பு அருணாச்சல பிரதேசத்தை தங்கள் பகுதியாக அறிவித்து உரிமை கொண்டாடி  சீனா புதிய வரைபடத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து, முக்கியத்துவம் வாய்ந்த ஜி20 மாநாடு இந்தியாவில் நடைபெறுகிறது. இந்த நிலையில், உலகத் தலைவர்கள் கலந்து கொள்ளும் இந்த ஜி20 மாநாட்டில் சீன அதிபர் ஷி ஜின்பிங் பங்கேற்பதை அந்த நாட்டு அரசு இதுவரை உறுதி செய்யவில்லை. எனவே, அவர் பங்கேற்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

 

இந்த நிலையில், அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் வாஷிங்டனில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம்  ‘சீன அதிபர் ஜி20 மாநாட்டில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கிறீர்களா?’ என்று செய்தியாளர்கள் தரப்பில் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “இந்தியாவில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் சீன அதிபர் கலந்துகொள்வார் என நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.

 

 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

சீனாவில் பரவும் நிமோனியா காய்ச்சல்; ‘எதிர்கொள்ள தயார்’ - மத்திய சுகாதார அமைச்சகம்

Published on 24/11/2023 | Edited on 24/11/2023

 

Pneumonia fever spreading in China; 'Ready to face' - Union Ministry of Health

 

கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் இருந்து பரவிய கொரோனா நோய் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பு ஊசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. இந்த நிலையில், சீனாவில் மீண்டும் ஒரு வித மர்ம காய்ச்சல் பரவ தொடங்கியுள்ளது.

 

சீனாவில் நிமோனியா காய்ச்சல் பாதிப்பு குழந்தைகளிடம் அதிகம் பரவுகிறது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், மூச்சு திணறல் போன்ற அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் கூறியுள்ளது. கடந்த 12ஆம் தேதி இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்த நாட்டின் தேசிய சுகாதார ஆணையத்தின் அதிகாரிகள், ‘சீனாவில் வாழும் அதிகப்படியான மக்களிடம் சுவாச பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதே இதற்கு காரணம்’ என்று தெரிவித்தனர்.

 

குழந்தைகளிடையே பரவும் நிமோனியா காய்ச்சல் பாதிப்பு குறித்து சர்வதேச நோய் கண்காணிப்பு அமைப்பான ப்ரோமோட் அமைப்பும் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா பரவுவதற்கு முன்பு இந்த அமைப்பு புது நோய் பாதிப்பு குறித்து எச்சரிக்கை விடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நோய் பாதிப்பு அதிகமாக இருப்பதால் அங்குள்ள பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்த காய்ச்சல் மற்ற நாடுகளுக்கு பரவக்கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

 

இந்த நிலையில், சீனாவில் பரவி வரும் காய்ச்சல் இந்தியாவை தாக்குமா என்பது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சீனாவில் பரவி வரும் இந்த காய்ச்சல் பாதிப்பை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இது கொரோனாவை போல் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு தான். இந்தியாவில், இந்த காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இந்த காய்ச்சல் பரவினால் அதை எதிர்கொள்ள மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளது. சாதாரண காய்ச்சல் ஏற்பட்டாலும் அது எந்தவகை காய்ச்சல் என்பது குறித்து மருத்துவர்களும், மருத்துவமனைகளும் ஆய்வு செய்ய வேண்டும். 

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

குழந்தைகளை குறிவைக்கும் மர்ம காய்ச்சல்; அச்சத்தில் மக்கள்

Published on 23/11/2023 | Edited on 23/11/2023

 

Mystery fever targeting children; People in fear in china

 

கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் இருந்து பரவிய கொரோனா நோய் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பு ஊசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. இந்த நிலையில், சீனாவில் மீண்டும் ஒரு வித மர்ம காய்ச்சல் பரவ தொடங்கியுள்ளது.

 

சீனாவில் ஒரு வித மர்ம காய்ச்சல் போன்ற பாதிப்பு குழந்தைகளிடம் அதிகம் பரவுகிறது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், மூச்சு திணறல் போன்ற அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் கூறியுள்ளது. கடந்த 12ஆம் தேதி இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்த நாட்டின் தேசிய சுகாதார ஆணையத்தின் அதிகாரிகள், ‘சீனாவில் வாழும் அதிகப்படியான மக்களிடம் சுவாச பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதே இதற்கு காரணம்’ என்று தெரிவித்தனர்.

 

குழந்தைகளிடையே பரவும் இந்த திடீர் காய்ச்சல் பாதிப்பு குறித்து சர்வதேச நோய் கண்காணிப்பு அமைப்பான ப்ரோமோட் அமைப்பும் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா பரவுவதற்கு முன்பு இந்த அமைப்பு புது நோய் பாதிப்பு குறித்து எச்சரிக்கை விடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நோய் பாதிப்பு அதிகமாக இருப்பதால் அங்குள்ள பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்