Skip to main content

''இப்போதே நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையை தொடங்கிவிட்டேன்''-உதயநிதி ஸ்டாலின் பேச்சு

Published on 05/03/2023 | Edited on 05/03/2023

 

 "I have started campaigning for parliamentary elections" - Udhayanidhi Stalin's speech

 

நடைபெற்று முடிந்த ஈரோடு இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து திமுக கூட்டணி வெற்றியின் உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்தநிலையில் கரூருக்கு சென்ற விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2026 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தலுக்கான பரப்புரையைத் தொடங்கி விட்டதாக பேசியுள்ளார்.

 

கரூரில் திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் தமிழக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். 1,170 திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழிகள் வழங்கப்பட்டது. விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின், ''வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சார கூட்டத்தை நான் கரூர் மாவட்டத்தில்தான் துவங்க வேண்டும் என்று நினைத்தேன். தற்பொழுது தேர்தல் பரப்புரையைத் தொடங்கி விட்டேன். இதுதான் பாராளுமன்ற தேர்தலுக்கான முதல் பிரச்சாரக் கூட்டமாக நீங்கள் அமைத்திருக்கக்கூடிய மேடை.

 

நாடாளுமன்ற வளாகத்தை போல் அமைத்திருக்கிறார். எனவே நாம் அத்தனை பேரும் பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராக வேண்டும். கலைஞரும் இதே கரூர் மாவட்டத்தில்தான் அவரது அரசியல் பயணத்தை துவங்கினார். அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்தது மாவட்டம் இந்த கரூர் மாவட்டம். குளித்தலையில் தான் 1957ஆம் ஆண்டு முதல் முதலாக சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டு நீங்கள் எல்லாம் அவரை அனுப்பி வைத்தீர்கள். அதன் பிறகு அவர் 13 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஐந்து முறை தமிழக முதல்வராகவும் அவரை தமிழக மக்கள் தேர்ந்தெடுத்தார்கள்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.