Skip to main content

கூகுள் நிறுவனத்துக்கு 593 மில்லியன் டாலர் அபராதம் விதித்த பிரான்ஸ்!

Published on 14/07/2021 | Edited on 14/07/2021

 

google

 

ஐரோப்பிய ஒன்றியம் கொண்டுவந்த புதிய டிஜிட்டல் பதிப்புரிமை வழிமுறையை, கடந்த 2019ஆம் ஆண்டு பிரான்ஸ் நாடு சட்டமாக்கியது. இந்தச் சட்டத்தின்படி, கூகுள், ஃபேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள், ஊடகங்கள் வெளியிடும் செய்திகளைத் தங்கள் தளங்களில் பயன்படுத்திக்கொள்ள, அந்த செய்தி நிறுவனங்களுக்கு இழப்பீடாக ஒரு தொகையைத் தர வேண்டும்.

 

இந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டதன் தொடர்ச்சியாக, ஊடக செய்திகளைப் பயன்படுத்திக்கொள்ள இழப்பீடு வழங்குவது தொடர்பாக, ஊடகங்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டுமென்று கூகுள் நிறுவனத்துக்கு பிரான்ஸ் உத்தரவிட்டது. இதனையடுத்து கூகுள் நிறுவனம், இழப்பீடு ஒப்பந்தம் தொடர்பாக சில ஊடகங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இருப்பினும் அவை தோல்வியில் முடிந்தது.

 

இதனையடுத்து கூகுள் நிறுவனம், பிரான்ஸ் ஊடகங்கள் தங்கள் செய்திகளை இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்காவிட்டால், அந்தச் செய்திகளைத் தங்கள் தளத்தில் பயன்படுத்துவதில்லை என முடிவெடுத்தது. இதற்கு பிரான்ஸ் நாட்டின் சில முன்னணி ஊடகங்கள் எதிர்ப்பினை தெரிவித்தன. கூகுள் தனது சந்தை அதிகாரத்தை துஷ்ப்ரயோகம் செய்வதுபோல் உள்ளதாக தெரிவித்ததோடு, அந்த ஊடகங்கள் இதுதொடர்பாக புகார் அளித்தன.

 

இதனைத்தொடர்ந்து, கூகுள் நிறுவனத்துக்கு 500 மில்லியன் யூரோக்களை அபராதமாக விதித்து உத்தரவிட்டுள்ளது பிரான்ஸ். இது அமெரிக்க மதிப்பில் 593 மில்லியன் டாலர்களாகும். மேலும், கூகுள் நிறுவனம் உத்தரவை தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை எனவும் குற்றஞ்சாட்டியது. மேலும், தாங்கள் எவ்வாறு செய்திகளைப் பயன்படுத்துவதற்கு ஊடகங்களுக்கு இழப்பீடு அளிக்கப்போகிறோம் என்பதை கூகுள் நிறுவனம் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் தெரிவிக்காவிட்டால் ஒருநளைக்கு 900,000 யூரோக்களை அபராதமாக செலுத்த வேண்டும் எனவும் பிரான்ஸ் உத்தரவிட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

ஊழியர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு தந்த கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை!

Published on 19/01/2024 | Edited on 19/01/2024
Google CEO Sundar Pichai gave a shocking announcement to the employees!

உலகின் முன்னனி பன்னாட்டு இணையதள மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனம் தான் கூகுள் நிறுவனம். கலிபோர்னியாவை தலைமையகமாக கொண்டு இயங்கி வரும் இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இந்தியாவைச் சேர்ந்த சுந்தர் பிச்சை பொறுப்பு வகித்து வருகிறார். 

இதற்கிடையில், கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம், கூகுள் நிறுவனம் சர்வதேச அளவில் தனது ஊழியர்களில் 6 சதவீதம் பேரை பணிநீக்கம் செய்தது. அப்போது, இது பேசுபொருளாக அமைந்தது. இந்த பணிநீக்க நடவடிக்கையை தொடர்ந்து, 2024ஆம் ஆண்டிற்கான திட்டங்கள் குறித்து,  கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தனது ஊழியர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, ‘நிறுவனத்தின் செயல்பாட்டை எளிதாக்குவதற்கான சில அடுக்குகளை நீக்க வேண்டியது காலத்தின் அவசியம். அதனால், இந்த ஆண்டும் பணி நீக்கங்கள் தொடரும். இந்த பணி நீக்க நடவடிக்கைகள் நிறுவனத்தின் செயல்பாட்டை அதிகரிக்கும் வகையில் பல்வேறு துறைகளின் அடுக்குகளை நீக்குவதாக இருக்கும். ஆனால், இந்த பணி நீக்கம் கடந்தாண்டின் அளவிற்கு இருக்காது. அதே போல், இது அனைத்து துறையிலும் இருக்காது” என்று தெரிவித்தார். 

கூகுள் நிறுவனங்களில் கடந்தாண்டு சுமார் 12,000 பேர் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டும் பணிநீக்க நடவடிக்கை தொடரும் என்று கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை கூறியிருப்பது ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.