Skip to main content

சீன அதிபரிடம் லடாக் எல்லை பிரச்சனையை பேசினாரா பிரதமர் மோடி?

Published on 25/08/2023 | Edited on 25/08/2023

 

Did Prime Minister Modi discuss the Ladakh border issue with the Chinese President?
கோப்புப் படம் 

 

தென்னாப்பிரிக்காவில் கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி தொடங்கிய ‘பிரிக்ஸ்’ உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி, தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமஃபோசா, பிரேசில் அதிபர் லூலா டா சில்வா உள்ளிட்ட தலைவர்கள் இதில் ருஷ்ய அதிபர் புதின் காணொளி வாயிலாக பங்கேற்றார். இந்த உச்சிமாநாடு தற்போது நடந்து முடிந்துள்ளது. இதனை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி, தென்னாப்பிரிக்காவில் இருந்து கிரீஸ் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டார்.   

 

இந்த பிரிக்ஸ் கூட்டத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது இந்தியா-சீனா எல்லைப் பிரச்சனை குறித்து பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின் பிங்கைச் சந்தித்து உரையாடுவார் என்பது தான். இந்நிலையில், பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொண்ட நாட்டின் தலைவர்கள் இறுதியில் கூட்டாய் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அதற்காக பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின் பிங்கும் செய்தியாளர் சந்திப்பு மேடையை நோக்கி சென்றபோது இருவரும் பேசிக்கொண்டதாக சொல்லப்படுகிறது. 

 

கடந்த ஆண்டு நவம்பரில் பாலியில் நடந்த ஜி20 உச்சி மாநாட்டின்போது சீன அதிபர் ஜி ஜின் பிங்கை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அதன்பிறகு தற்போது பிரிக்ஸ் மாநாட்டின் இறுதியில் செய்தியாளர்களின் சந்திப்பிற்காக சென்றபோது இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து பேசியுள்ளனர். பொதுவெளியில் பிரதமர் மோடியும், சீன அதிபரும் ஓராண்டு கழித்து தற்போது ஒருவரையொருவர் சந்தித்து பேசிக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

முன்னதாக, சீன வெளியுறவு அமைச்சகம் தனது அறிக்கையில், “பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளின் பேரில் ஆகஸ்ட் 23 அன்று பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் போது அதிபர் ஜி ஜின்பிங் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசினார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இந்திய அதிகாரிகள் தரப்பிலும் தகவல்கள் வந்தன. 

 

இரு தரப்பிலும் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து பிரச்சனைகள் சீரானது போல தெரிந்தாலும், கிழக்கு லடாக்கில் இந்திய மற்றும் சீனா இடையே மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சில உரசல்கள் தொடர்கிறது. சமீபத்தில், இந்தியாவும் சீனாவும் ஆகஸ்ட் 13, 14 ஆகிய தேதிகளில் 19வது சுற்று கார்ப்ஸ் கமாண்டர் அளவிலான பேச்சுவார்த்தையை நடத்தியது. கிழக்கு லடாக்கில் உள்ள டெப்சாங் மற்றும் டெம்சோக் ஆகிய இடங்களில் நிலுவையில் உள்ள சிக்கல்களைத் தீர்ப்பதற்காக இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

IND VS AUS : இறுதிப் போட்டியில் இந்தியா அபார வெற்றி

Published on 03/12/2023 | Edited on 03/12/2023

 

 IND VS AUS : India won the final

 

இந்தியா - ஆஸ்திரேலியா அணிக்கு இடையேயான கடைசி மற்றும் 5வது டி20 போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் மேத்யூ வேட் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

 

அதன்படி இந்திய அணி முதலில் களமிறங்கியது. ஜெய்ஸ்வால் 21 ரன்களும் ருதுராஜ் 10 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். அடுத்தடுத்து வந்த சூரியகுமார் 5 ரன்களிலும், ரிங்கு சிங் 6 ரன்களிலும், ஜித்தேஷ் ஷர்மா 24 ரன்களிலும் அவுட் ஆனார்கள். அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் ஐயர் 37 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார். இவருடன் கூட்டணி சேர்ந்த அக்சர்பட்டேல் 21 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்தது.

 

இதனைத் தொடர்ந்து 161 ரன்கள் என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. ராவிஸ் ஹெட் 28 ரன்களும், ஜோஸ் பிலிப் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலிய அணி தோல்வியடைந்தது. முகேஷ் குமார் 3 விக்கெட்கள் கைப்பற்றினார். இதன்மூலம் 5வது மற்றும் கடைசி டி20 போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியை இந்திய அணி வீழ்த்தியது. மேலும் தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி அசத்தியுள்ளது. 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

கேப்டனாக ஷைன் ஆன சூர்யா! தொடரைக் கைப்பற்றிய இந்தியா!

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

Surya shines as captain! India won the series!

 

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையான நான்காவது டி20 போட்டி ராய்ப்பூரில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களான ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் சிறப்பான துவக்கம் தந்தனர். வழக்கம்போல அதிரடி காட்டிய ஜெய்ஸ்வால் 28 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். பின்னர் வந்த அனுபவ வீரரான ஸ்ரேயாஸ் 8 ரன்களுக்கு ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த கேப்டன் சூரியகுமாரும் 1 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார்.

 

பின்னர் ருதுராஜ் உடன் இணைந்த ரிங்கு சிங் வழக்கம் போல தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் நன்றாக ஆடிக் கொண்டிருந்த ருதுராஜ் 32 ரன்களில் சங்கா பந்தில் ஆட்டம் இழந்தார். பின்பு ரிங்கு சிங்குடன் இணைந்த ஜித்தேஷ் சர்மா அதிரடியாக ஆடத் தொடங்கினார். ரிங்கு சிங் 29 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்க, ஜித்தேஷ் ஷர்மா 19 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த வீரர்களான அக்சர் பட்டேல் மற்றும் தீபக்சகர் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினர். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது. ஆஸி சார்பில் ட்வார்சுயிஸ் 3 விக்கெட்டுகளும், பெஹ்ரெண்டார்ஃப் மற்றும் சங்கா தலா 2 விக்கெட்டுகளும், ஹார்டி 1 விக்கெட்டும் எடுத்தனர்.

 

பின்னர் 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு பிலிப்பே நிதானம் காட்ட, டிராவிஸ் ஹெட் அதிரடி துவக்கம் தந்தார். பந்துகளை பௌண்டரிகளாக பறக்க விட்டார். ஆனால் இவர்கள் இணையை இந்திய சுழற்பந்துவீச்சாளர் ரவி புஷ்னோய் பிரித்தார். இவரது வந்தில் பிலிப்பே 8 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். அடுத்து அதிரடியாக ஆடி வந்த ஹெட்டை அக்சர் பட்டேல் 31 ரன்களில் வெளியேற்றினார். அடுத்து வந்த வீரர்களின் பென் 19 ரன்களிலும், ஹார்டி 8 ரன்களிலும், டிம் டேவிட் 19 ரன்களிலும், ஷார்ட் 22 ரன்களிலும் ஆட்டமிழந்தனர் கேப்டன் வேட் மட்டும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் நின்று 36 ரன்கள் எடுத்தார் இறுதியில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 7விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் அக்சர் பட்டேல் 3 விக்கெட்டுகளும், தீபக் சகர் 2 விக்கெட்டுகளும், பிஷ்னோய் மற்றும் ஆவேஷ் கான் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஒரு போட்டி மீதமுள்ள நிலையில், 3-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது.

 

சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 16 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய அக்சர் பட்டேல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். கேப்டனாக பொறுப்பேற்ற முதல் தொடரிலேயே வெற்றி பெற்று சூரியகுமார், ஒரு சிறந்த கேப்டனாக தன்னை நிரூபித்துள்ளார். ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் வரும் டிசம்பர் 3ஆம் தேதி நடைபெற உள்ளது. 

- வெ.அருண்குமார்  

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்