Published on 29/03/2020 | Edited on 29/03/2020
கரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளில் 190 நாடுகளின் இயல்பு நிலையை பாதித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,

தற்போது உலக அளவில் கரோனா தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 31 ஆயிரத்தை தொட்டுள்ளது. தற்பொழுது உயிரிழப்பு எண்ணிக்கை 31,020 ஆக உள்ளது. இத்தாலியில் அதிகபட்சமாக 10 ஆயிரத்து 23 பேரும், ஸ்பெயினில் 5,983 பேரும் கரோனாவிற்கு பலியாகியுள்ளனர். உலக அளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,66,351 என்ற அளவிலும், குணமடைந்தோர் எண்ணிக்கை 1,42,785 என்ற அளவிலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.