Skip to main content

பூமிக்கு மிக அருகில் வரும் நிலவு - அறிவிப்பை வெளியிட்ட நாசா

Published on 16/04/2022 | Edited on 16/04/2022

 

 The closest moon to Earth - NASA's announcement!

 

ஒவ்வொரு ஆண்டும் பிங்க் மூன் எனப்படும் பெருநிலவு ஒரு குறிப்பிட்ட நாளில் நிகழும். இந்நிலையில் இந்த ஆண்டிற்கான பிங்க் மூன் நிகழ்வு இன்று நிகழ இருப்பதாக விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அறிவித்துள்ளது.

 

இன்றைக்கு பூமிக்கு மிக அருகில் வரும் நிலவு மிக வெளிச்சமாகவும், பெரியதாகவும் காட்சியளிக்கும். இந்த நிகழ்வுக்குப் பெரு நிலவு என்று பெயரிடப்பட்டுள்ளது. இதே சமயத்தில் வட அமெரிக்க நாட்டில் ஏப்ரல் மாதத்தில் இளஞ்சிவப்பு நிறத்தில் நிலவு தோன்றுவதால் இந்த நிகழ்வை பிங்க் மூன் என்றும், சூப்பர் மூன் என்றும் அழைக்கின்றனர். இன்று நள்ளிரவு சில நிமிடங்கள் பிங்க் மூனை இந்தியாவில் பார்க்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நிலவில் வெற்றிகரமாக கால் பதித்த ஜப்பான் விண்கலம்!

Published on 19/01/2024 | Edited on 19/01/2024
Japanese spaceship successfully set foot on the moon

இந்தியா சார்பில் நிலவின் தென் பகுதியை ஆராயக் கடந்த ஆண்டு ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் பாய்ந்த சந்திரயான் - 3 நிலவின் ஈர்ப்பு விசைக்குள் செலுத்தப்பட்டு கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி மாலை நிலவின் தென் துருவத்தில் இறங்கி சாதனை படைத்தது. இதன் மூலம் உலகில் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவிற்கு பிறகு நிலவில் கால் பதித்த நான்காவது நாடாக இந்தியா மாறியிருந்தது.

அதிலும் குறிப்பாக, நிலவின் தென் துருவத்தில் கால் பதிக்கும் உலகின் முதல் நாடாக இந்தியா தன் சாதனையைப் பதிவு செய்தது. இதனையடுத்து நிலவை ஆய்வு செய்ய ஜப்பான் விண்கலமான‘ஸ்சிலிம்’ விண்ணில் செலுத்தப்பட்டது. இந்நிலையில் நிலவில் வெற்றிகரமாக ஜப்பானின் ஸ்லிம் விண்கலம் தரையிறங்கியதாக ஜப்பானின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஜாக்‌ஷா (JAXA) தெரிவித்துள்ளது.

இதன்மூலம் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியாவுக்கு அடுத்தபடியாக நிலவில் கால் பதித்த 5 வது நாடு என்ற பெருமையை ஜப்பான் பெற்றுள்ளது. ஏற்கெனவே 3 முறை இந்த விண்கலம் விண்ணில் செலுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு மோசமான வானிலை உள்ளிட்ட காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மனைவியின் பிறந்தநாளுக்கு நிலவில் இடம் வாங்கி பரிசு தந்த கணவர் 

Published on 07/09/2023 | Edited on 07/09/2023

 

Husband gifted his wife a place on the moon for her birthday

 

இந்தியா சார்பில் நிலவின் தென் பகுதியை ஆராயக் கடந்த ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் பாய்ந்த சந்திரயான் - 3, நிலவின் ஈர்ப்பு விசைக்குள் செலுத்தப்பட்டு ஆகஸ்ட்  23 மாலை நிலவின் தென் துருவத்தில் இறங்கி சாதனைபடைத்தது. இதனையடுத்து, நிலவில் தென் துருவத்தில் ஆய்வு தொடர்பான ரகசியங்களைத் தேடும் பணியை பிரக்யான் ரோவர் தொடங்கி நகர்ந்து வந்தது. இந்த வெற்றியை உலகமே கொண்டாடி, இந்தியாவை பலர் பாராட்டி வந்தனர்.

 

இந்நிலையில், மேற்கு வங்கம் ஜார்கிராம் மாவட்டத்தில் சஞ்சய் மஹதோ என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவியின் பிறந்தநாளுக்காக நிலவில் நிலம் ஒன்றை பதிவு செய்து பரிசாக அளித்துள்ளார். இவர், திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு நிலவினை கொண்டு வந்து தருவதாக உறுதியளித்ததாகவும் கூறியுள்ளார்.

 

இது குறித்து அவர், "நானும் என் மனைவியும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தோம். பின்னர், கடந்த ஏப்ரல் மாதம் நாங்கள் திருமணம் செய்துகொண்டோம். நான் நிலவை அவளிடம் கொண்டு வருவேன் என்று முன்பு உறுதியளித்திருந்தேன். அந்த வாக்குறுதியை என்னால் நிறைவேற்ற முடியவில்லை. சந்திரயான்-3 வெற்றிக்கு பிறகு நிலவில் இடம் வாங்குவதற்கான உத்வேகம் கூடியது. தற்போது திருமணமாகிய பிறகு மனைவியின் முதல் பிறந்தநாளில், ஏன் நிலவில் இடத்தை வாங்கி பரிசளிக்கக்கூடாது என்று நினைத்தேன். 

 

பின்னர் என் நண்பரின் உதவியுடன், லூனா சொசைட்டி இன்டர்நேஷனல் மூலம் நிலத்தை வாங்கினேன். நிலம் வாங்கும் வழிமுறைகள் முடிய சுமார் ஒரு வருடம் ஆனது. நிலவில் ஒரு ஏக்கர் நிலத்தை  ரூ.10,000க்கு வாங்கியுள்ளேன். அதற்கான பதிவு செய்யப்பட்ட உரிமைகோரல் பத்திரமும் கிடைத்துவிட்டது. அந்த பணத்தில் வேறு பொருள் வாங்கியிருக்க முடியும். ஆனால், நிலவு எங்கள் இருவரின் இதயங்களிலும் பிரத்யேக இடத்தை பிடித்துள்ளது. அதனால், திருமணத்திற்கு பிறகான முதல் பிறந்தநாள் என்பதால், நிலவை விட வேறொன்றை நான் சிந்திக்கவில்லை" என அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

 

சஞ்சய் நிலவில் நிலம் வாங்கியிருக்கலாம். ஆனால், நிஜத்தில் அது சாத்தியமா? தற்போது வரை விண்வெளிகளில் நிலம் வாங்குவது நடைமுறையில் சாத்தியமற்றதே. இருந்தும் சில பரிசு பொருள் விற்கும் இணையதளங்கள், நிலவில் நிலம் வாங்க விரும்புவோருக்கு 'சான்றிதழ்' வழங்கி வருகிறது. சந்திரயான்-3 வெற்றிக்கு முன்பிருந்தே இந்தியர்கள் நிலவில் நிலத்தை வாங்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக, மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங், 2018ல் நிலவின் தொலைதூரப் பகுதியின் மேரே மஸ்கோவியன்ஸில் நிலத்தை பதிவு செய்ததாக கூறினார்.