Skip to main content

அதிபர் ரணில் கேள்விக்கு முதல்வர் மம்தா அளித்த பதில்! - வைரலாகும் வீடியோ

Published on 13/09/2023 | Edited on 13/09/2023

 

Chief Minister Mamata's answer to President Ranil's question! A viral video

 

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெளிநாடுகளின் முதலீட்டை ஈர்க்கும் வகையில் 12 நாள் அரசுமுறைப் பயணமாக துபாய் மற்றும் ஸ்பெயினுக்கு சென்றுள்ளார். செப்டம்பர் 23 வரை இந்த பயணத்தை மேற்கொள்ளவிருக்கிறார் எனவும் தகவல்கள் வந்துள்ளன. மேலும், ஸ்பெயினில், மாட்ரிட் மற்றும் பார்சிலோனாவுக்கும் பயணப்பட்டு தொடர்ச்சியான வணிகக் கூட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, நவம்பர் 21-22 தேதிகளில் கொல்கத்தாவில் 7வது வங்காள உலக வணிக உச்சி மாநாடும் (பிஜிபிஎஸ்) நடக்கவிருக்கிறது.

 

இந்த நிலையில், மம்தா பானர்ஜி துபாய் விமான நிலையத்தில் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கவை தற்செயலாக சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க, மம்தா பானர்ஜியிடம், “எதிர்க்கட்சி கூட்டணிக்கு (இந்தியா) தலைமை வகிக்க போகிறீர்களா” என்று கேட்டுள்ளார். அதற்குப் பதிலளித்த மம்தா, “இது மக்களை சார்ந்தது தான். அவர்கள் ஆதரித்தால் எதிர்க்கட்சிகள் ஆட்சிக்கு வரலாம்” எனப் பதிலளித்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

 

இது குறித்து ட்விட்டரில் மம்தா பானர்ஜி, “இலங்கையின் திறன்மிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, துபாய் சர்வதேச விமான நிலைய வளாகத்தில் என்னை சந்தித்தார். அப்போது என்னிடம் சில கலந்தாய்வு நிகழ்வுகளில் கலந்துகொள்ளுமாறும் அழைத்தார். அவர் அழைப்பு விடுத்தது என்னை நெகிழ வைத்தது. மேலும், கொல்கத்தாவில் நடைபெறும் 'பெங்கால் உலகளாவிய வணிக உச்சி மாநாடு 2023' இல் பங்குபெற அவரை அழைத்தேன். தொடர்ந்து அவர், என்னை இலங்கைக்கு பயணம் செய்யவும் கேட்டுக் கொண்டார். இந்த கலந்துரையாடல் இனிமையாகவும் அதேசமயம் ஆழமான சிந்தனையையும் ஏற்படுத்தியது” எனப் பதிவிட்டிருக்கிறார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘இந்தியா’ கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்திற்கான தேதி அறிவிப்பு

Published on 10/12/2023 | Edited on 10/12/2023
Notification of date for consultative meeting of 'India' alliance
கோப்புப்படம்

2024ஆம் ஆண்டு நடைபெறவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகள் சார்பில் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஜனதா தளம், திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உட்பட 25க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கி தங்களது ஆதரவைப் பெருக்கி வருகின்றனர். அதில்,  பீகார் மாநிலம் பாட்னாவில் இந்தியா கூட்டணியின் முதல் கூட்டம் கடந்த ஜூன் மாதம் 23 ஆம் தேதி பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. இதையடுத்து, பெங்களூர், மும்பை என அடுத்தடுத்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதே சமயம் தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலையொட்டி இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. மேலும், இந்த சட்டமன்றத் தேர்தலில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க பெருமளவு வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. தெலங்கானாவில் மட்டும் காங்கிரஸ் முதன் முறையாக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. அதேபோல், மிசோரம் மாநிலத்தில் மிஸோரம் மக்கள் இயக்கம் அபார வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.

இந்நிலையில் இந்தியா கூட்டணியின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் டிசம்பர் 19 ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். இந்தியா கூட்டணி கட்சிகளின் 4 வது ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் 19 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், பிரதிநிதிகள் கலந்துகொள்ள உள்ளனர். 

Next Story

“தேநீர், சமோசாக்களுக்காக மட்டுமே இந்தியா கூட்டணியின் சந்திப்புகள் இருக்கும்...” - ஜனதா தள எம்.பி. பரபரப்பு பேச்சு

Published on 07/12/2023 | Edited on 07/12/2023

 

 Janata Dal MP says India Alliance meetings are only for tea and samosas" -

 

அடுத்தாண்டு நடைபெறவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகள் சார்பில் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஜனதா தளம், திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உட்பட 25க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கி தங்களது ஆதரவைப் பெருக்கி வருகின்றனர். அதில்,  பீகார் மாநிலம் பாட்னாவில் இந்தியா கூட்டணியின் முதல் கூட்டம் கடந்த ஜூன் மாதம் 23 ஆம் தேதி பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. இதையடுத்து, பெங்களூர், மும்பை என அடுத்தடுத்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

 

இதற்கிடையே, தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலையொட்டி இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் தள்ளிப்போடப்பட்டது. மேலும், இந்த சட்டமன்றத் தேர்தலில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க பெருமளவு வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. தெலங்கானாவில் மட்டும் காங்கிரஸ் முதன் முறையாக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. அதேபோல், மிசோரம் மாநிலத்தில் ஸோரம் மக்கள் இயக்கம் அபார வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. 

 

இதனையடுத்து, 4 மாதங்களாக நடைபெறாமல் இருந்த இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நேற்று (06-12-23) டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் அவரது வீட்டில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மேற்கு வங்க முதல்வரான மம்தா பானர்ஜி, உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வரான அகிலேஷ் யாதவ் ஆகியோர் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே, பீகார் முதல்வர் நிதிஷ்குமார் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பதால் தன்னால் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாது என்று தெரிவித்துவிட்டார். 

 

அதில் 17 கட்சி பிரதிநிதிகள் மட்டும் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டத்தில் டிசம்பர் 3வது வாரத்தில் மீண்டும் ஆலோசனை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அதில் அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நிதிஷ்குமாரின் ஜனதா தளம் கட்சியின் எம்.பி.யான சுனில் குமார் பிண்டு, இந்தியா கூட்டணி சார்பாக கூடிய கூட்டங்கள் எல்லாம் ‘தேநீர், சமோசாக்களுக்கு’ மட்டுமே நடக்கும் என்று விமர்சனம் செய்துள்ளார்.

 

இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய எம்.பி. சுனில் குமார் பிண்டு, “மோடி மீது பொதுமக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். அதனைத்தான் இந்த ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. மூன்று மாநிலங்களில் பெரும்பான்மை மற்றும் மோடியின் உத்தரவாதத்தில் பொதுமக்கள் முழு நம்பிக்கை வைத்திருப்பதை இந்த வெற்றி நிரூபித்துள்ளது. நாம் மக்களின் விருப்பங்களை புரிந்துகொண்டு பரீசிலிக்க வேண்டும். மேலும், பீகார் முதல்வர் நிதிஷ்குமார், என்னை எப்போது வேண்டுமானாலும் பதவி நீக்கம் செய்யலாம். 

 

மாநிலங்களில் யாருடைய பலத்தில் நிற்கிறதோ அந்த மக்களை புறக்கணிப்பதுதான் காங்கிரஸின் வேலை. பீகாரின் ஜே.டி.யூ, உத்தரப் பிரதேசத்தில் எஸ்.பி. கட்சி, ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரன் ஆகிய அனைவரும் காங்கிரஸால் புறக்கணிக்கப்பட்டனர். அதன் விளைவாகத்தான் 3 மாநிலங்களிலும் காங்கிரஸ் தோல்வி அடைந்துள்ளது. காங்கிரஸ் பிராந்திய கட்சிகளை முன்னிலைப்படுத்த வேண்டும். அப்போதுதான் இந்தியாவுக்கு எதிர்காலம் இருக்கும். நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாக தொகுதி பங்கீடு குறித்த விவாதம் நடைபெறும் வரை எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியின் கூட்டங்கள் அனைத்தும் தேநீர் மற்றும் சமோசாக்களுக்கு மட்டுமே நடக்கும்” என்று கூறியுள்ளார். கட்சியில் இருந்து கொண்டு மோடியை பாராட்டி பேசிய சுனில் குமார் பிண்டுவை ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஜனதா தள கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.