Skip to main content

பாரதம் விவகாரம்; சீன ஊடகக் கட்டுரையால் சலசலப்பு! 

Published on 07/09/2023 | Edited on 07/09/2023

 

The Bharat Affair; A stir by the Chinese media!

 

ஜி20 உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள ஜி20 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் இந்தியாவிற்கு வருகை தர உள்ளனர். ஜி20 மாநாடு துவங்க இரண்டே நாட்கள் இருக்கும் தருணத்தில், சீனாவின் அதிகாரப்பூர்வ ஊடகம், குளோபல் டைம்ஸ், " நாட்டின் பெயரை மாற்ற யோசிப்பதை விட முக்கியமான விசயங்கள் இருக்கிறது" என அறிவுறுத்தி பரப்பரப்பை கிளப்பியுள்ளது.

 

இந்தியாவின் பெயரை பாரதம் என மாற்ற பாஜக அரசு முனைவதாகக் கூறி பல கருத்துகள், கண்டனங்கள் எழுந்தன. ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ என்ற கூற்றைப் பல வருடங்களாகவே ஒன்றிய பா.ஜ.க. அரசு வெளிப்படுத்தி வருகிறது. நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் இம்மாதம் 18ல் இருந்து 22 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில், ‘ஒரே நாடு ஒரு தேர்தல்’ என்பதற்கான சட்டத் திருத்தங்களைக் கொண்டு வர உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் இந்தியா என்ற நாட்டின் பெயரைப் பாரதம் என மாற்றி பாஜக அரசு தீர்மானம் நிறைவேற்ற இருப்பதாகப் பரவலாகப் பேசப்பட்டது. இந்நிலையில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் இந்தியா எனும் பெயர் மாற்றப்படாது என தெரிவித்தார். 

 

இந்நிலையில், ஜி20 மாநாடு துவங்க இரண்டே நாட்கள் இருக்கும் தருணத்தில், சீனாவின் அதிகாரப்பூர்வ ஊடகம், குளோபல் டைம்ஸ் வெளியிட்டிருக்கும் கட்டுரை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில், "இந்தியாவில் சமீபமாக பாரதம் பெயர் மாற்றம் விவகாரம் பேசப்பட்டு வருவது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், வரவிருக்கும் ஜி 20 உச்சிமாநாடு உலகளவில் கவனம் பெற்றிருக்கும் நேரத்தில், டெல்லி உலகிற்கு எதனை வெளிப்படுத்த விரும்புகிறது?.

 

தொடர்ந்து, 2022 டிசம்பரில் இந்தியா ஜி 20 தலைவர் பதவியை பெற்றபோது, ‘இந்தியா வகித்த ஒரு வருட ஜி 20 தலைவர் பதவி உள்ளடக்கமான, லட்சியமான, தீர்க்கமான மற்றும் செயல் சார்ந்ததாக இருக்கும்’ என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியதாக ஊடக அறிக்கைகள் வெளிவந்தன. இந்தியா தனது ஜி20 தலைவர் பதவியை நாட்டின் சர்வதேச செல்வாக்கை அதிகரிக்க பயன்படுத்த விரும்புகிறது என்று தெளிவாக தெரிந்தது.

 

சமீபத்தில் நாட்டின் பெயர் மாற்ற பிரச்சனையும் எழுந்தது. இந்திய மக்கள் தங்கள் நாட்டை எப்படி வேண்டுமானால் அழைக்கும் சுதந்திரம் உள்ளது. இருப்பினும், பெயர் மிக முக்கியமான விஷயம் இல்லை. மாறாக, இந்தியா சுதந்திரம் அடைந்த 1947க்கு முன்பு இருந்த அதன் பொருளாதார அமைப்பு மறுபடியும் இந்தியாவால் முழுமையாகச் சீர்திருத்த முடியுமா என்பதுதான் முக்கியமே. இதுவே இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும், சர்வதேச அரங்கில் இந்தியாவின் செல்வாக்கை மேம்படுத்துவதற்கும் முக்கியமாகும். 

 

மேலும், புரட்சிகர சீர்திருத்தம் இல்லாமல், இந்தியா புரட்சிகர வளர்ச்சியை அடைய முடியாது. இதனையடுத்து, இந்தியா 1991ல் பொருளாதாரத்தை தாராளமயமாக்கியது. அதுமுதல், பொருளாதார சீர்திருத்தங்களின் அடிப்படையில் பார்த்தால் இந்தியாவில் மோடி நிர்வாகம் லட்சிய நோக்குள்ள அரசாங்கமாக இருந்து வருகிறது. ஆனால், வர்த்தக பாதுகாப்புவாதத்தை நோக்கி இந்தியா அதிகளவில் மாறி வருகிறது. அதன் முந்தைய சில சீர்திருத்த நடவடிக்கைகளும் இதனால் முடங்கியுள்ளன. அடுத்து, 2014 ஆம் ஆண்டு மோடியின் ‘மேக் இன் இந்தியா’ திட்டம் தொடங்கப்பட்டது. பின்னர், இந்தியாவை எப்படி உற்பத்தி வல்லரசாக மாற்றுவது என்பது குறித்து  நிறைய விவாதங்கள் நடந்தன. இதற்கான வழி என்பது, இந்தியா அதன் அன்னிய நேரடி முதலீட்டு விதிகளை மேலும் தாராளமயமாக்க வேண்டும். சீனா உட்பட உலகம் முழுவதும் உள்ள நிறைய நிறுவனங்களுக்கு திறந்த, நியாயமான மற்றும் பாரபட்சமற்ற முதலீட்டு சூழலை ஏற்படுத்த வேண்டும். சமீபத்தில் இந்தியா சில சீன நிறுவனங்களின் மீது கடுமையாக நடந்து கொண்டது. இதுவே, முதலீட்டாளர்களின் நம்பிகையை குறைத்துவிடும்.

 

இந்தியா டிசம்பர் 2022ல் இந்தோனேசியாவில் ஜி 20 தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டது. சில நாட்களிலே இந்தியா தனது முதல் ஜி 20 தலைவர்கள் உச்சி மாநாட்டைக் கூட்டவுள்ளது. இந்த நிலையில், இந்தியா ஜி20 தலைவர் பதவியைப் பயன்படுத்தி தனது பொருளாதாரத்தை சீர்திருத்துவதற்கும், அதன் வெளிப்படை தன்மையை விரிவுபடுத்துவதற்கும், வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதற்கும், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு நியாயமான வணிகச் சூழலை உருவாக்க வேண்டும். மேலும் படிப்படியாக இதனை செயல்படுத்த வேண்டும். நாட்டின் பெயரை மாற்ற வேண்டுமா என்பதை சிந்திப்பதை விட மேல் சொல்லப்பட்ட இவை அனைத்தும் முக்கியம்" என குளோபல் டைம்ஸ் கட்டுரை வெளியிட்டுள்ளது.

 

2020 ஏப்ரல்,மே-ல்  சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம் கிழக்கு லடாக்கின் கட்டுப்பாட்டுக் கோடு (எல்.எ.சி) விவகாரத்தில் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டதாக கூறப்பட்டது. அதுமுதல், இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மோசமடைந்தன. சமீபத்தில் நடந்த பிரிக்ஸ் மாநாடு 2023ல் சீன பிரதமரிடம் மோடி எல்லை விவகாரம் குறித்து பேசியதாக செய்திகள் வந்தன. இருந்தும், சீனா வெளியிட்ட புதிய வரைபடத்தின் காரணமாக பெரும் அதிர்வுகள் எழுந்தன. இந்த சிக்கல் காரனமாகத் தான் ஜி20 மாநாட்டில் பங்கேற்க சீன அதிபர் ஜி ஜின்பிங் டெல்லிக்கு வராமல் சீனப் பிரதமர் லீ கியாங் ஜி20 கலந்து கொள்கிறார் என்றும் விமர்சனங்கள் எழுந்தது. 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

''அமலாக்கத்துறையை வைத்து தேர்தலுக்கு பணம் வசூலிக்கும் பாஜக''-முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதி குற்றச்சாட்டு 

Published on 03/12/2023 | Edited on 03/12/2023

 

former MLA Balabharti accused of collecting money for elections using the enforcement department

 

திண்டுக்கல்லை சேர்ந்த மருத்துவரிடம் மதுரை அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் லஞ்சம் பெற்ற புகாரில் கைதுசெய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் திண்டுக்கல்லில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பில் மாவட்டச் செயலாளர் சச்சிதானந்தம், முன்னாள் மாவட்டச் செயலாளர் பாண்டி ஆகியோர் உடனிருந்தனர்.

 

செய்தியாளர்களிடம் பேசுகையில், ''வருகிற 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேவையான பணத்தை வசூலிப்பதற்காக பாஜக அமலாக்கத்துறையை தற்பொழுது பயன்படுத்தி வருகிறது. அமலாக்கத்துறை மத்திய அரசின் அடியாள் துறையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மதுரையில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோதனை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு அனுமதி அளிக்காமல் துணை ராணுவத்தை அலுவலகம் முன்பு கொண்டுவந்து நிறுத்தியது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. காவல்துறையினர் சோதனை செய்ய அனுமதி அளிக்க முடியாது எனக் கூறுவதற்கு இவர்களுக்கு என்ன உரிமை உள்ளது. விசாரணை செய்ய காவல்துறையினர் வருகை தந்தால் அவர்களை அனுமதிப்பது தான் ஜனநாயக முறையாகும். ஆனால் அனுமதிக்க முடியாது என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

 

இது அராஜக போக்காகும். உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படக்கூடிய  அமலாக்கத்துறை, பிரதமர் அலுவலகத்தில் இருந்து வந்த உத்தரவின் பேரில் தான் நான் உங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன் என அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி டாக்டர் சுரேஷ் பாபுவிடம் பேசியுள்ளார். உள்துறை அமைச்சகத்திற்கு சம்பந்தம் இல்லாமல் ஒரு அமலாக்கத்துறை அதிகாரி எப்படி இவ்வாறு பேச முடியும். ஆகவே உள்துறை அமைச்சகத்திற்கும் இந்த சம்பவத்திற்கும் சம்பந்தம் உள்ளது. ஆகவே தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை, தமிழக காவல்துறை இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

இது சாதாரண விஷயம் இதனை அரசியல் ஆக்காதீர்கள் லஞ்சம் வாங்குவது என்பது அனைத்து துறைகளிலும் உள்ளது என பொதுப்படையாகக் கூறி வருகிறார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. மத்திய அரசையும், அமலாக்கத்துறையும் காப்பாற்றும் விதமாக பேசி வருகிறார். மூன்று கோடி ரூபாய் லஞ்சம் கேட்டதை நியாயப்படுத்தும் வகையில் பேசி வருகிறார். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தேர்தல் செலவுக்காக அமலாக்கத்துறையை பாஜக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான் உண்மை. மேலும் மாநில அரசு மருத்துவர் சுரேஷ் பாபுவிற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை வைத்துள்ளது'' என்று கூறினார். 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

தேர்தல் முடிவு எதிரொலி- 'இந்தியா' கூட்டணி வெளியிட்ட திடீர் அறிவிப்பு

Published on 03/12/2023 | Edited on 03/12/2023

 

Election result reverberation - sudden announcement made by 'India' alliance

 

தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் பல கட்டமாக தேர்தல்கள் நடந்து முடிந்தது. தொடர்ந்து தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகி இருந்தது. இந்நிலையில் மிசோரத்தை தவிர்த்து மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.

 

முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் காலை 11 மணி நிலவரப்படி தெலுங்கானாவில் 63 இடங்களில் காங்கிரஸ் முன்னிலையிலும், பிஆர்எஸ் 42 இடங்களிலும், பாஜக  9 இடங்களிலும், மற்றவை 5 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

 

மத்தியப் பிரதேசத்தில் பாஜக 154 இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில், காங்கிரஸ் 72 இடங்களிலும் மற்றவை 4 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. ராஜஸ்தானில் பாஜக 106 இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில், காங்கிரஸ் 76 இடங்களிலும், மற்றவை 12 இடங்களில் முன்னிலையில் உள்ளது. சத்தீஸ்கரில் 45 இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ள நிலையில் காங்கிரஸ் 43 இடங்களில் முன்னிலையில் உள்ளது. நாளை மிசோரம் மாநில வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

 

5 மாநில தேர்தல் முடிவுகள் அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்குமா அல்லது இல்லையா என்பது தொடர்பான கருத்துக்கள் எழுந்து வருகிறது.  5 மாநில சட்டப்பேரவை தேர்தல் காரணமாக 'இந்தியா' கூட்டணியின் ஆலோசனைக் கூட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் வரும் டிசம்பர் 6 ஆம் தேதி 'இந்தியா' கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பை மல்லிகார்ஜுன கார்கே கடிதம் வாயிலாக தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் நடைபெறும் இக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்வார் எனவும் கூறப்படுகிறது.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்