Skip to main content

திருமணத்திற்கு மறுத்த காதலன்; தற்கொலைக்கு முயன்ற பெண்

Published on 04/08/2022 | Edited on 04/08/2022

 

Youth who refuse to marry to woman

 

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் ஆலடி ரோடு, காமராஜர் நகரைச் சேர்ந்த ராயப்பன் என்பவரது மகள் ஆரோக்கியஷாலினி(21). இவரும் விருத்தாசலம் அருகேயுள்ள தொரவளூர் கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகன் அருள்ராஜ்(27) என்பவரும் கடந்த பல வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.

 

இந்நிலையில் அருள்ராஜ் கடந்த 2016ஆம் ஆண்டு வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார். அவர் வரும் வரை ஆரோக்கியஷாலினி காத்திருந்துள்ளார். கடந்த 3 மாதத்திற்கு முன்பு அருள்ராஜ் சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது அவரிடம் சென்ற ஆரோக்கியஷாலினி தன்னை திருமணம் செய்து கொள்ள கேட்டுள்ளார். ஆனால் அவர், அவரை திருமணம் செய்ய மறுத்துள்ளார். அதுமட்டுமின்றி வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளை அருள்ராஜ் பெற்றோர் செய்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஆரோக்கியஷாலினி, தொரவளூரில் உள்ள அருள்ராஜ் வீட்டிற்கு சென்று மீண்டும் கேட்டுள்ளார். ஆனால் அப்போதும் அவர், அவரை திருமணம் செய்து கொள்ள மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்த ஆரோக்கியஷாலினி கையில் வைத்திருந்த எறும்பு மருந்தை சாப்பிட்டு  தற்கொலைக்கு முயன்றார். மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 

 

இதுகுறித்த புகாரின் பேரில் விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அருள்ராஜும், ஆரோக்கியஷாலினியும் காதலித்து வந்ததும், அருள்ராஜ் திருமணம் செய்ய மறுத்ததும் தெரியவந்தது. அதனை தொடர்ந்து அருள்ராஜின் பெற்றோரிடம் காவல்துறையினர் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் ஆரோக்கியஷாலினிக்கும், அருள்ராஜிக்கும் நேற்று விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் எதிரில் உள்ள கோவிலில் போலீசார் மற்றும் இருவரது உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எந்த சின்னத்திற்கு ஓட்டு போட்டேன் என சொன்ன பெண் அடித்து கொலை; 7 பேருக்கு வலை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
nn

நேற்று தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில் எந்த சின்னத்தில் வாக்களித்தேன் என வெளியே சொன்னதால் ஒரு பெண் கொலை செய்யப்பட்டதாக வெளியான தகவல் தமிழகத்தில் பரபரப்பு ஏற்படுத்திருக்கிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்துள்ளது பக்ரிமாணியம் கிராமம். அந்த பகுதியில் வசித்து வந்தவர் கோமதி. நேற்று நடந்த மக்களவைத் தேர்தலில் குறிப்பிட்ட ஒரு சின்னத்திற்கு வாக்களித்ததாக வெளியில் கூறியுள்ளார். இதனைக் கேட்ட அதே ஊரைச் சேர்ந்த அருள், பாண்டியன், அறிவுமணி, ரவிராஜா, கலைமணி, தர்மராஜ் ஆகியோர் அப்பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து 'நீ ஏன் எங்கள் கட்சிக்கு வாக்களிக்கவில்லை' என கூறி ஏழு பேரும் ஒன்றாக சேர்ந்து கோமதியை பலமாக தாக்கியுள்ளனர்.

இதில் கோமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து உடனடியாக ஸ்ரீமுஷ்ணம் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் உடலைக்  கைப்பற்றி விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அவரது உடலை அனுப்பி வைத்தனர். இதில் சம்பந்தப்பட்ட ஏழு பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். இக்கொலைக்கு உடைந்தையாக இருந்ததாக அந்த பகுதியைச் சேர்ந்த மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Next Story

26 மணி நேரம் விமான பயணம்; கடல் கடந்து வந்து ஜனநாயகக் கடமையாற்றிய மருத்துவர்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
doctor who came to Cuddalore from New Zealand and voted

கடலூர் செம்மண்டலத்தை சேர்ந்தவர் வினோத்( 46).  மருத்துவர். இவர் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் நியூசிலாந்தில் வசித்து வருகிறார். அங்கு அவர் கடந்த 10 ஆண்டுகளாக ஒரு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.  இந்த நிலையில் கடலூர் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதும், அவர் தனது ஒற்றை வாக்கை செலுத்த சொந்த ஊருக்கு வந்து வாக்களிக்க விரும்பினார்.

இதையடுத்து அவர் நியூசிலாந்தில் இருந்து சொந்த ஊருக்கு வந்து செல்ல சுமார் ரூ.1.70 லட்சம் செலவு செய்து டிக்கெட் வாங்கினார். பின்னர் அவர் ஓட்டு போட விமானத்தில் 26 மணி நேரம் பயணம் செய்து சொந்த ஊருக்கு( கடலூர்,செம்மண்டலத்துக்கு) 18 ஆம் தேதி இரவு வந்தார்.  நேற்று மதியம் 12 மணிக்கு கடலூர் செம்மண்டலத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று தனது வாக்கைப் பதிவு செய்தார்.

பின்னர் இதுகுறித்து மருத்துவர் வினோத் கூறுகையில், வெளிநாட்டில், தமிழ்நாட்டை சேர்ந்த பலர் வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் பல்வேறு காரணங்களுக்காக சொந்த ஊர்களுக்கு சென்று தங்களது வாக்கை செலுத்தி ஜனநாயக கடமையாற்ற முடியாமல் சிரமப்படுகின்றனர். அதனால் வெளிநாட்டில் வசிக்கும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் தபால் வாக்கு அளிக்க அரசு ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்றார்.