Skip to main content

சந்தைக்கு வருபவர்களை ஏமாற்றி ஏடிஎம் கார்டு பறித்த இளைஞர் கைது

Published on 11/06/2023 | Edited on 11/06/2023

 

Youth arrested for stealing ATM card by deceiving people coming to the market

 

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் ஏடிஎம் மையத்தில் பொதுமக்களிடமிருந்து ஏமாற்றி பறிக்கப்பட்ட ஏடிஎம் கார்டுகள் மூலம் பணம் எடுத்து வந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் சந்தை நாட்களில் ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க தெரியாமல் நிற்கும் முதியவர்களை, பெண்களை ஏமாற்றி அவர்களுக்கு உதவுவதாக தெரிவித்து ஏடிஎம் கார்டுகளை அவர்களிடம் இருந்து வாங்கி, அதற்கு பதிலாக அவர்களிடம் போலி ஏடிஎம் கார்டை கொடுத்து அனுப்பிவிட்டு மீண்டும் அந்த ஏடிஎம் கார்டுகளை வைத்து பணம் பறித்து வந்த நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

இப்படி தொடர்ந்து நூதன முறையில் ஏடிஎம் மையத்தில் திருடப்படுவதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் ஏடிஎம் மையத்திலிருந்த ரகசிய கேமரா மூலம் போலீசார் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். அதில் பெண் ஒருவரை ஏமாற்றி ஏடிஎம் கார்டை பெற்றுக் கொண்ட சரவணகுமார் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். மதுரை பாலமேடு பகுதியைச் சேர்ந்த சரவணகுமாரிடம் இருந்து 18,000 ரொக்க பணமும், ஏடிஎம் கார்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

வேங்கை வயல் சம்பவம்; அவகாசம் கேட்கும் சிபிசிஐடி

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
vengaivayal incident; CBCID seeking time

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் என பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்தச் சம்பவம் நடைபெற்று ஓராண்டுக்கு மேல் ஆகிறது. விசாரணை 545 நாட்களுக்கு மேல் நடைபெற்றுள்ளது. இச்சம்பவத்தில் முதல் தகவல் அறிக்கை மட்டுமே சிபிசிஐடி போலீசாரால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. கடந்த ஆண்டு ஜனவரி 16ம் தேதி முதல் சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை விசாரித்து வரும் நிலையில் மொத்தமாக இதுவரை 221 நபர்களிடம் நேரடி சாட்சியங்களும், குரல் மாதிரி பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அறிவியல்பூர்வமான சாட்சியங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டியிருந்தது.

தொடர்ந்து இந்த வழக்கு இறுதிக் கட்டத்தை எட்டி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. கடந்த நாட்களுக்கு முன்பு இந்த வழக்கு முடியும் நிலையில் இருந்தது. இந்நிலையில் மீண்டும் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய தற்பொழுது இன்னும் ஒரு மாத காலம் அவகாசம் வேண்டும் என சிபிசிஐடி போலீசார் புதுக்கோட்டை வன்கொடுமை திறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். நீதிமன்றமும் அனுமதி வழங்கி இருக்கிறது. வருகின்ற மூன்றாம் தேதிக்குள் (ஜூலை 3) இந்த வழக்கை முடிக்க சென்னை நீதிமன்றம் கால அவகாசம் கொடுத்திருந்தது.  அதனடிப்படையில் ஜூலை மூன்றாம் தேதி இந்த வழக்கின் நிலை குறித்த அறிக்கையை சிபிசிஐடி போலீசார் சென்னை நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறார்கள். இந்த அதில் குற்றவாளிகளை உறுதிப்படுத்துதல்; வழக்கு என்ன நிலையில் இருக்கிறது; வழக்கு முடிவுக்கு வருமா என்பது தெரிய வரும்.

Next Story

அடுத்தகட்டத்திற்கு தயாராகும் பொற்பனைக்கோட்டை; துவக்கி வைக்க இருக்கும் முதல்வர் 

Published on 17/06/2024 | Edited on 17/06/2024

 

தமிழ்நாட்டில் எஞ்சியுள்ள சங்ககால வட்டக்கோட்டை களில் சற்றும் சிதிலமடையாத கோட்டை, கொத்தளம், அகலியுடன் புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் உள்ளது. கோட்டையின் நுழைவாயில்களில் காவல் தெய்வமாக முனீஸ்வரன், காளியம்மன் போன்ற காவல் தெய்வங்கள் கோயில்களாக கட்டி வழிபட்டு வருகின்றனர்.

இந்த கோட்டைக்குள் உள்ள நீர்வாவிக் குளக்கரையில் துணி துவைக்கப் பயன்படுத்தப்பட்ட கல்லில் தமிழி எழுத்துகளில் உள்ள கல்வெட்டு ஒன்று தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக ஆய்வு மாணவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து கோட்டைப் பகுதியில் அகழாய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. தொடர்ந்து தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அகழாய்வு செய்தது. அடுத்தகட்டமாக தமிழ்நாடு தொல்லியல் துறை ஆய்வாளர் தங்கத்துரையை இயக்குநராகக் கொண்டு அவரது ஆய்வுக் குழுவினர் கடந்த ஆண்டு அகழாய்வு செய்தனர்.

அகழாய்வில் சங்ககால மக்கள் பயன்படுத்திய பானை ஓடுகள், மணிகள், வட்டசில், தங்க ஆபரணம், போன்ற ஏராளமான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் வட்ட வடிவில் சுடு செங்கல் கட்டுமானம் நீர்வழித்தடம் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் அடுத்தகட்ட அகழாய்விற்கு அனுமதி கொடுக்கப்பட்டிருந்த நிலையில் (18/06/2024) செவ்வாய்கிழமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக அகழாய்வுப் பணிகளைத் தொடங்கி வைக்க உள்ளார். இந்த நிகழ்வில் பொற்பனைக்கோட்டை அகழாய்வுத்திடலில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா, அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், மக்கள் பிரதிநிதிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தமிழ்நாடு தொல்லியல் துறை அகழாய்வுக் குழுவினர் ஆகியோர்  கலந்து கொள்கின்றனர்.

இந்த அகழாய்வில் சங்ககால மக்கள் வாழ்ந்த வரலாறுகள் சான்றுகளாக வெளிப்படலாம் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் உள்ளது.