Skip to main content

9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; இளைஞர் போக்சோவில் கைது

Published on 05/05/2023 | Edited on 05/05/2023

 

Youth arrested in Pocso for misbehaving with 9-year-old girl

 

குடிபோதையில் சுற்றித் திரிந்த இளைஞர் ஒருவர் பக்கத்து வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம், ஸ்ரீபெரும்புதூர் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதிக்கு அருகே உள்ள மேவலூர்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் செல்லமுத்து. இவர், மரத்தை வைத்து உபகரணங்கள் செய்யும் தொழிலை செய்து வருகிறார். இவரது மகன் ராஜேஷ். 23 வயதான இவர், 10 ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு அங்குள்ள தனியார் நிறுவனங்களில் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், குடிபோதைக்கு அடிமையான ராஜேஷ், சரியாக வேலைக்கு செல்லாமல் ஆங்காங்கே சுற்றித் திரிந்து வந்துள்ளார். இதையறிந்த ராஜேஷின் தந்தை, “டேய் எதுக்குடா சரியா வேலைக்கு போக மாட்றா. நீ இப்படியே பண்ணிட்டு இருந்தா உன்னோட வாழ்க்கைதான் நாசமா போகும்” என ராஜேஷை பலமுறை கண்டித்துள்ளனர்.

 

ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாத ராஜேஷ், தொடர்ந்து பெற்றோரிடம் வாக்குவாதம் செய்து வந்துள்ளார். அதே சமயம், ராஜேஷ் மதுபோதையில் இருக்கும்போதெல்லாம் தனது வீட்டின் மொட்டை மாடிக்குச் சென்று பக்கத்துக்கு வீட்டில் இருக்கும் பெண்களை கிண்டல் செய்வார் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், ராஜேஷின் பக்கத்து வீட்டில் 9 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். அந்த சிறுமி அங்குள்ள ஒரு பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். மேலும், அந்த சிறுமி பள்ளிக்குச் செல்லும்போதெல்லாம் ராஜேஷ் அந்த சிறுமியை கிண்டல் செய்வது வழக்கம். இதையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுபோதையில் இருந்த ராஜேஷ் அங்கும் இங்குமாய் சுற்றித் திரிந்துள்ளார். அப்போது, அந்த சிறுமியும் அந்த இடத்தில் விளையாடிக் கொண்டிருந்தார்.

 

இதையடுத்து, அச்சிறுமியிடம் தனது சபல புத்தியை காட்டிய ராஜேஷ், விளையாட்டு பொம்மைகள் தருவதாகக் கூறி, அங்கிருந்து அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி, “இதை பற்றி வெளியே சொன்னால் உன்னை கொலை செய்து விடுவேன்” என மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன அந்த சிறுமி அழுதுகொண்டே வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது, சிறுமியின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த பெற்றோர், என்ன நடந்தது என விசாரித்துள்ளனர். இதையடுத்து அந்த சிறுமி, ராஜேஷ் தன்னிடம் செய்த கொடுமைகள் குறித்து பெற்றோரிடம் அழுதுகொண்டே கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், ஸ்ரீபெரும்புதூர் மகளிர் காவல் நிலையத்தில் தனது மகளுக்கு நேர்ந்த கொடுமையை கூறியுள்ளனர்.

 

அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், ராஜேஷை பிடித்து விசாரணை செய்ததில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததை ஒப்புக் கொண்டார். இதையடுத்து, ராஜேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் ஸ்ரீபெரும்புதூர் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாமியாரை துடிதுடிக்க கொன்ற மருமகன்; சென்னையில் பயங்கரம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Son-in-law incident mother-in-law in Chennai

சென்னை மாதவரம் கண்ணன் நகரில் வசித்து வருபவர்கள் புஷ்பராஜ் - ஜான்சி தம்பதியினர் புஷ்பராஜ் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். மனைவி ஜான்சி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர்களுடன் ஜான்சியின் தாய் வசந்தியும் வசித்து வந்துள்ளார். புஷ்பராஜ் தினமும் மது அருந்திவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்ததால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு புஷ்பராஜ் மீண்டும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததால் மனைவி ஜான்சியுடன் வாக்குவாம் ஏற்பட்டுள்ளது. மாமியார் வசந்தி தங்களுடன் வசித்து வருத்து வருவதால்தான் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவதாக கருதிய புஷ்பராஜ் மனைவி வெளியே சென்ற போது மாமியார் வசந்தியிடம் இதுகுறித்து தகராறு செய்துள்ளார்.

இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த புஷ்பராஜ் மாமியார் வசந்தியை கட்டையால் தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த வசந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார். இதையடுத்து புஷ்பராஜ் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வசந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த  புஷ்பராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

'திமுக காங்கிரஸ் ஆட்சிக்கால சாதனை பட்டியலைச் சொல்லவா?'-தீவிர  பரப்புரையில் மு.க.ஸ்டாலின் 

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'kalaingar himself calls him Balam Balu'- M.K.Stalin in intense lobbying

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத்  தீவிரபடுத்தியுள்ளன.

இந்நிலையில் காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ''பாஜக எதிர்ப்பில் இபிஎஸ் உறுதியாக இல்லை. எடப்பாடி பழனிச்சமியால் பாஜகவை ஒருபோதும் எதிர்க்க முடியாது. இந்தியா கூட்டணிக்கான ஆதரவு அலை இந்தியா முழுவதும் வீசுகிறது. மக்களோடு இருந்து மக்களுக்காக பணியாற்றக் கூடியவர்கள் என்ற நம்பிக்கை எழந்துள்ளது. திமுக காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஒன்றியத்தில் எத்தனை சாதனைகளை செய்திருக்கிறோம் பெரிய பட்டியலே இருக்கிறது.

உதாரணத்திற்கு நம்ம டி.ஆர்.பாலு, மூன்று துறைகளில் ஒன்றியத்தில் அமைச்சராக இருந்த பொழுது செஞ்ச சாதனைகளை மட்டும் சொல்லவா? ஒன்றிய பெட்ரோலியத் துறை அமைச்சராக இருந்த பொழுது தமிழ்நாட்டுக்கு மட்டும் 22,78 கோடி ரூபாய் மதிப்பிலான 15 பெரிய திட்டங்களைக் கொண்டு வந்தார். சுற்றுச்சூழல் வனத்துறை அமைச்சராக தேசிய பல்கலைக்கழக உயிரின வளங்கள் ஆணையத்தை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்தார். கப்பல் தரைவழி போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறையில் இருந்த பொழுது 56,644 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களைத் தமிழகத்திற்கு கொண்டு வந்தார். இது மட்டுமா கிண்டி கத்திப்பாரா  மேம்பாலம், மாடி பாலம், தமிழ்நாட்டு தேசிய நெடுஞ்சாலைகளில் மட்டுமே 335 பாலங்களைக் கட்டி சாதனை பண்ணி இருக்கிறார். அதனால்தான் கலைஞரே பாலம் பாலு என்று அழைத்தார். இதேபோன்ற சாதனைகளை செய்வதற்காகவே ஒன்றியத்தில் நமது கூட்டணி ஆட்சியில் இருக்கும். அதற்காகத்தான் இந்த எலக்சனின் ஹீரோவாக தேர்தல் அறிக்கையை திமுகவும் காங்கிசும் வெளியிட்டு இருக்கிறோம். திமுக தேர்தல் அறிக்கையில் உள்ள சமூக நீதி அம்சங்கள் காங்கிரஸ் கட்சியினுடைய தேர்தல் அறிக்கையில் எதிரொலித்திருக்கிறது'' என்றார்.