Skip to main content

“இது என்ன சார் புதுப்பழக்கம்” - போலீசிடம் அட்ராசிட்டி செய்த இளம்பெண்

Published on 09/01/2023 | Edited on 09/01/2023

 

young woman who argued with police while under influence alcohol

 

நள்ளிரவில் இருசக்கர வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு அழுது கொண்டிருந்த இளம்பெண்ணை நெருங்கிச் சென்று விசாரித்த போக்குவரத்து காவலர்களுக்கு அந்தப் பெண்ணே தலைவலியான வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

 

சென்னை சைதாப்பேட்டை அருகே போக்குவரத்து போலீசார் இரவு நேர வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்திருந்த இளம்பெண் ஒருவர், ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு ஓவென்று அழுதுகொண்டு இருந்துள்ளார். இதைக் கவனித்த போலீசார், ‘யாருயா அந்த பொண்ணு.. இந்த ராத்திரில ஏன் இங்க வந்து உட்காந்து அழுதுட்டு இருக்கு..’ என அந்தப் பெண்ணின் அருகில் சென்றுள்ளனர்.

 

மெதுவாகச் சென்று அந்தப் பெண்ணிடம் நடந்ததை விசாரித்துள்ளனர். அந்தப் பெண் பேச முடியாமல் திணறியுள்ளார். உடனடியாக சுதாரித்த போலீசார், ‘இந்தப் பெண்ணை இப்படியே ஸ்கூட்டியில் செல்ல அனுமதித்தால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படக்கூடும்’ என நினைத்து, அந்தப் பெண்ணிடம் மதுப்பரிசோதனை கருவியில் ஊதுமாறு கூறியுள்ளனர். ஆனால், அதற்கு அந்தப் பெண் மறுத்துள்ளார். ‘சரிம்மா... நீ ஊது.. நாங்க பைன் எல்லாம் போடமாட்டோம்’ என மெதுவாக எடுத்துக் கூறியுள்ளனர். அவரும் ஊதியுள்ளார்.. மதுப்பரிசோதனை கருவி வெடிக்காதது தான் ஆச்சரியம்! அவ்வளவு போதையில் இருந்துள்ளார் அந்த இளம்பெண்.

 

மூச்சுமுட்ட குடித்துவிட்டு முழுபோதையில் அந்த இளம்பெண் இருப்பதை அப்போதுதான் போலீசாரே உணர்ந்துள்ளனர். இதையடுத்து, ‘ஸ்கூட்டியை இங்கேயே விட்டுட்டு வீட்டுக்கு போம்மா.. நாளைக்கு வந்து எடுத்துக்கலாம்..’ என அறிவுரை கூறியுள்ளனர். மேலும், அவருக்கு ஃபைன் போட்டுள்ளனர். அந்த பில்லை வாங்கி பார்த்ததும் கோவமடைந்த இளம்பெண் போக்குவரத்து போலீசாரிடம், “இப்ப எதுக்கு ஃபைன் போட்டீங்க. என்கிட்ட காசு இல்லை. ஃபைன்லாம் கட்டமுடியாது. தினமும் குடிச்சிட்டுத்தான் போறேன். அப்போல்லாம் பிடிக்கல. இப்போ மட்டும் ஏன் ஃபைன் போடுறீங்க?” என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அத்துடன், “நானே ஓசிலதான் குடிச்சிட்டு வரேன். என்னால் எப்படி ஃபைன் கட்டமுடியும்?” எனக் கூறி ஆவேசத்துடன் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

கடைசியில், போலீசார் அந்த இளம்பெண்ணின் வாகனத்தைப் பறிமுதல் செய்ததுடன், அவரை சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர். போக்குவரத்து போலீசாருடன் இளம்பெண் நள்ளிரவில் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வேதனையாக இருக்கிறது' - ஏமாற்றத்துடன் வீடியோ வெளியிட்ட நடிகர் சூரி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'It's painful' - Suri who came to vote and returned disappointed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் வாக்களிக்க வந்த நடிகர் சூரியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அவர் வாக்களிக்காமலேயே திரும்பிச் சென்றார். வெளியே வந்த அவர் வாக்குச்சாவடி முன்பு நின்று பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ''கடந்த எல்லா தேர்தலிலும் கரெக்டா என்னோட உரிமையை செலுத்தி கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த தடவை இந்த பூத்தில் என்னுடைய பெயர் விடுபட்டு போய்விட்டது என்கிறார்கள். என்னுடைய மனைவியின் ஓட்டு இருக்கிறது. ஆனால் என்னுடைய ஓட்டு இல்லை. என்னுடைய ஓட்டு விடுபட்டுப் போச்சு என்கிறார்கள். இருந்தாலும் 100% ஜனநாயக உரிமையை ஆற்றுவதற்காக வந்தேன். அது நடக்கவில்லை என்பது மன வேதனையாக இருக்கிறது. நினைக்கும் போது மனசு கஷ்டமாக இருக்கிறது. இது எங்கு யாருடைய தவறு என்று தெரியவில்லை. இருந்தாலும் ஓட்டு போட்டுவிட்டு ஓட்டு போட்டேன் என்று சொல்வதை விட ஓட்டு போடவில்லை என்ற வேதனையை நான் சொல்கிறேன். எல்லாருமே 100% ஓட்டு போட வேண்டும். அது நம்ம நாட்டுக்கு நல்லது. தவறாமல் எல்லாரும் வாக்கை செலுத்தி விடுங்கள். நான் அடுத்த எலெக்ஷனில் என்னுடைய வாக்கை செலுத்துவேன் என்று நம்புகிறேன்'' என்றார்.

Next Story

சென்னையில் வாக்குப்பதிவு மந்தம்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. நாமக்கல் தொகுதியில் பகல் 3 மணி நிலவரப்படி 59.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. நாகையில் 54.07 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மயிலாடுதுறையில் 50.91% வாக்குகள் பதிவாகியுள்ளது. திருச்சி மக்களவைத் தொகுதியில் 49.27% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக சேலம் தொகுதியில் 60.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. கரூரில் 59.56 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 53.02 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வேலூர் மக்களவைத் தொகுதியில் 51.19 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. புதுச்சேரியில் 58.97 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இவை அனைத்தும் பிற்பகல் 3 மணி அளவில் வாக்குப்பதிவு நிலவரங்கள் ஆகும்.

சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளிலும் வாக்குப்பதிவு மந்தமாகவே நடைபெற்று வருகிறது. மத்திய சென்னையில் 37.62% வாக்குகள் பதிவாகியுள்ளது. வடசென்னையில் 39.67 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. தென் சென்னையில் 40.98 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் சராசரியாக  வாக்குப்பதிவு  50 சதவீதத்தை தாண்டிய நிலையில் சென்னையில் சராசரி வாக்குப்பதிவு 40 சதவிகிதத்திற்கும் குறைவாகவே உள்ளது.