Skip to main content

செல்ஃபி எடுக்க முயன்று தடுப்பணையில் விழுந்த இளைஞர் சடலமாக மீட்பு!

Published on 29/12/2021 | Edited on 29/12/2021

 

The young man who took a selfie in the broken block

 

சாத்தனூர் அணையிலிருந்து புறப்பட்டு வருவது தென்பெண்ணை ஆறு. இந்த ஆறு திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களைக் கடந்து கடலில் கலக்கிறது. புதுச்சேரி மாநிலம் சண்முகபுரம் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவரின் மகன் கிருஷ்ணமூர்த்தி (வயது 32). இவர் தனது உறவினர்கள் 3 பேருடன் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள உறவினர் ஊரான அண்ராயநல்லூருக்கு துக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

 

துக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவிட்டு ஊருக்குத் திரும்பும்போது ஏனாதிமங்கலம் அருகே தென்பெண்ணை ஆற்றில் குறுக்கே கட்டப்பட்டிருந்த சேதம் அடைந்த எல்லீஸ் அணைக்கட்டை வேடிக்கை பார்த்துவிட்டு செல்வதற்காக அணை பகுதிக்கு சென்றுள்ளார். அப்பொழுது உடைந்த தடுப்பணையில் ஏறி நின்ற கிருஷ்ணமூர்த்தி செல்ஃபோன் மூலம் செல்ஃபி படம் எடுத்துள்ளார். செல்ஃபி எடுக்கும் ஆர்வத்தில் தவறி ஆற்றுத் தண்ணீரில் விழுந்து மாயமானார் கிருஷ்ணமூர்த்தி.

 

ஆழமான பகுதி என்பதால் அங்கு வந்த அவரது உறவினர்கள் தேடிப்பார்த்தும் கிருஷ்ணமூர்த்தியை கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து தகவல் திருவெண்ணைநல்லூர் தீயணைப்பு நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், அலுவலர் சுந்தரமூர்த்தி தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரர்கள் விரைந்து வந்து எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டு ஆற்றுப்பகுதியில் தீவிரமாக கிருஷ்ணமூர்த்தியை தேடும் பணியில் ஈடுபட்டனர். காவல்துறையினர், திருவெண்ணைநல்லூர் வட்டாட்சியர் பாஸ்கரதாஸ் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். ஆனால் இறுதியில் பலமணிநேர தேடுதலுக்கு பின் தண்ணீரில் விழுந்து மூழ்கிய கிருஷ்ணமூர்த்தி சடலமாக மீட்கப்பட்டார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.