Skip to main content

பூ மாலையை வீசிய இளைஞன்... காவல் நிலையம் வரை கொண்டு சென்ற மோதல்! 

Published on 23/07/2021 | Edited on 23/07/2021
The young man who threw the flower garland ... the clash that took him to the police station

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகில் உள்ளது அந்திலி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த கந்தன் என்பவர் இறந்துபோனார். அவரது இறுதி ஊர்வலம் நேற்று மாலை நடைபெற்றது. அப்போது அதே ஊரைச் சேர்ந்த வினோத்குமார் என்ற இளைஞர் இறுதி ஊர்வலத்திற்கு சுடுகாட்டுக்குச் செல்லும் போது இறந்தவருக்கு கொண்டுவந்த போடப்பட்ட மாலைகளை மினி டெம்போவில் ஏற்றிக்கொண்டு செல்லும்போது அந்த மாலைகளை வழிநெடுக மாலைகளை எடுத்து வீசிக்கொண்டு சென்றுள்ளார். அப்படி மாலை வீசி செல்லும்போது ஒரு மாலை அப்பகுதியில் இருந்த மின்சார லைனில் விழுந்து உள்ளது.

 

இதனால் அப்பகுதியில் மின் தடை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இறந்து போன கந்தன் உடலை அடக்கம் செய்து விட்டு அனைவரும் வீட்டுக்கு திரும்பி வரும்போது அதே ஊர் மாரியம்மன் கோயில் அருகில் அதே பகுதியை சேர்ந்த பாரதி அவரது நண்பன் சேவி, செழியன், ராதாகிருஷ்ணன், எழுமலை ஆகிய நான்கு பேர்களும் சவ ஊர்வலத்தில் மாலையை வீசிச் சென்ற வினோத்குமாரிடம் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது வினோத்குமார் கொண்டு வந்த மினி வேனின் முன்பக்க கண்ணாடியை உடைத்தனர். வினோத்குமாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதையடுத்து வினோத்குமார் அரகண்டநல்லூர் காவல் நிலையத்தில் தன்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்துள்ளார்.

 

அவரது புகாரின்பேரில் பாரதி உள்ளிட்ட 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். அதேபோல் ராதாகிருஷ்ணன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் முத்துக்குமரன், வினோத்குமார், ரவிக்குமார், சண்முகம், நாகராஜ், கந்தன், முத்துக்குமரன், வெங்கடேஷ், கோவிந்தசாமி, பாலகுரு, ராயல் குமார், பிரபு உள்ளிட்ட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சவ ஊர்வலத்தின்போது வீசப்பட்ட மாலையால் மின்தடை ஏற்பட்டு, மோதலின் காரணமாக இரு தரப்பிலும் கோஷ்டி மோதல் ஏற்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் திருக்கோவிலூர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kalachetra former teacher arrested on complaint

அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.