Skip to main content

சினிமாவில் வாய்ப்பு; இளம்பெண்ணை ஆசை காட்டி மோசம் செய்த இளைஞர்

Published on 02/12/2022 | Edited on 02/12/2022

 

young man who cheated young girl by pretending act cinema

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகில் சிறு கிராமத்தைச் சேர்ந்தவர் 25 வயதான இளம்பெண். இவரது கணவர் டிரைவராக வெளியூரில் தங்கி வேலை செய்து வருகிறார். அந்தப் பெண் தனது மாமனார் மாமியார் உடன் ஒரே குடும்பமாக வசித்து வருகிறார்.

 

இவர் பயன்படுத்தி வந்த செல்போனில் பேஸ்புக் மூலம் சபரி என்பவருக்கு அறிமுகமாகியுள்ளார். அவர் அந்தப் பெண்ணை பல வாட்சப் குழுக்களில் சேர்த்து விட்டுள்ளார். அந்த குரூப்பின் வழியாக மதுரையைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவர் அந்தப் பெண்ணுக்கு அறிமுகமாகியுள்ளார். இவர்கள்  வாட்சப்  மூலம் ஒருவருக்கு ஒருவர் கருத்துப் பரிமாற்றங்களை செய்து நண்பர்களாகியுள்ளனர்.

 

இந்த நட்பை பயன்படுத்திக்கொண்ட ரவிக்குமார் அந்தப் பெண்ணிடம் நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள்; உங்கள் குரல் வளம் நன்றாக உள்ளது. உங்களை நான் சினிமாவில் நடிக்க வைக்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார். அதை உண்மை என்று நம்பிய அந்தப் பெண் தன் வீட்டிற்கு கடந்த நவம்பர் மாதம் ரவிக்குமாரை வரவழைத்துள்ளார். அப்போது ரவிக்குமார் அந்தப் பெண்ணிடம் நீங்கள் சினிமாவில் நடிக்க வேண்டும் என்றால், அதற்கு முன் உங்களை அழகான உடைகளில் புகைப்படங்கள் எடுக்க வேண்டும். அதை திரைப்பட தயாரிப்பாளர், இயக்குநர்களிடம் காட்டி உங்களுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருகிறேன் என்று கூறியுள்ளார்.

 

இதையடுத்து  புகைப்படம் எடுப்பதற்காக அந்தப் பெண் தன் அறைக்குச் சென்று ஆடம்பரமான உடை அணிந்து வருவதற்காக அவர் அணிந்திருந்த சுமார் எட்டு பவுன் நகையை கழட்டி வைத்து விட்டு அறைக்குள் சென்று உடைமாற்றி வருவதற்கு சென்றுள்ளார். இதைப் பயன்படுத்திக் கொண்ட ரவிக்குமார் அந்தப் பெண்  கழட்டி வைத்திருந்த நகைகள் மற்றும் அவரின் செல்போன் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு தலைமறைவாகிவிட்டார். அதன் பிறகு அவரிடமிருந்து எந்த தொடர்பும் அந்தப் பெண்ணுக்குக் கிடைக்கவில்லை. இதன்பிறகு தான் மோசடியாக ஏமாற்றப்பட்டதாக உணர்ந்த அந்தப் பெண் சின்னசேலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து சினிமா ஆசை காட்டி நகையை அபகரித்துச் சென்ற ரவிக்குமாரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.  இந்த சம்பவம் சின்னசேலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Case registered against L. Murugan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.