Skip to main content

காதலர்கள் கண் முன்னே இளம்பெண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
Young girls incident in front of lovers at dindugal

திண்டுக்கல் மாவட்டம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தம்பதி. இந்த தம்பதிக்கு 19,17,13 வயதில் 3 மகள்கள் உள்ளனர். இதில், 19, 17 வயது சகோதரிகளுக்கு அதே பகுதியைச் சேர்ந்த 2 வாலிபர்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்த நிலையில், கடந்த மார்ச் 30ஆம் தேதி 19 மற்றும் 17 வயதுடைய சகோதரிகள், இருவரும் தங்களது காதலர்களுடன் இடையகோட்டையில் நடைபெற்ற ஒரு கோவில் திருவிழாவுக்கு சென்றுள்ளனர்.

இதனையடுத்து, அவர்கள் நான்கு பேரும் அங்குள்ள தனியார் ஹோட்டலில் உணவு அருந்திவிட்டு சாலையோரம் நின்று கொண்டிருந்தனர். அப்போது, அங்கு இரு சக்கர வாகனங்களில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல், காதலர்கள் 4 பேரையும் மிரட்டி, அழைத்து பைக்கில் ஏற்றிக்கொண்டு தாமரைக்குளம் பகுதிக்கு வந்துள்ளனர். அங்கு சென்றவுடன், காதலர்கள் இருவரையும் கட்டிப்போட்டு, அந்த நான்கு பேரும் அந்த பெண்களை காதலர்கள் கண் முன்னே கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதன் பின்னர், அந்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். 

இந்த சம்பவம் குறித்து சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த புகாரை அடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகள் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில், மீனாட்சி நாயக்கன்பட்டியைச் சேர்ந்த சரண்குமார் (21), முத்தழகுபட்டியைச் சேர்ந்த வினோத்குமார் (26), முருகபவனத்தைச் சேர்ந்த சூரியபிரகாஷ் (22), பிரசன்ன குமார் (25) ஆகிய 4 பேரும், அந்த இளம்பெண்களை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர் என்பது தெரியவந்தது. 

அதன்பேரில், சரண்குமார், வினோத்குமார், சூரியபிரகாஷ் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் தலைமறைவாக உள்ள பிரசன்ன குமாரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட 3 பேரும், திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். காதலர்கள் கண் முன்னே இளம்பெண்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்