Skip to main content

காதலிக்க சொல்லி டார்ச்சர்! பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை! 

Published on 11/08/2022 | Edited on 11/08/2022

 

Young girl passed away in kanniyakumari

 

குமரி மாவட்டம், மார்த்தாண்டம் மருதங்கோடு இலங்கவிளை பகுதியை சேர்ந்தவர் காவியா (20 பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், மார்த்தாண்டத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் பி.ஏ. படித்து விட்டு எம்.ஏ. படிக்க விண்ணப்பித்து இருந்தார். இதே போல் காவியாவின் பக்கத்து ஊரான இலுப்பைவிளையைச் சேர்ந்த ரகு என்பவரின் மகன் ரஞ்சித் (20) காவியா படித்த அதே கல்லூரியில் படித்து வந்தார்.

 

ஒரே கல்லூரியில் படித்து வருவதால் அவர்கள் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். மேலும் கலலூரிக்கு சென்றுவரும்போது ஒன்றாகவே பயணித்துள்ளனர். அதே போல், ஊரில் சந்திக்கும் போதெல்லாம் நெருங்கி பேசி வந்துள்ளனர். அதேபோல், ரஞ்சித்தும், காவியாவும் சேர்ந்து நின்று ஏராளமான போட்டோக்களும் செல்பிகளும் எடுத்துள்ளனர்.

 

இந்த நிலையில், கடந்த ஓராண்டாக ரஞ்சித், தன்னை காதலிக்கும்படி காவியாவை வற்புறுத்தி வந்துள்ளார். இதற்கு காவியா மறுத்துள்ளார். மேலும் ரஞ்சித், “என்னை காதலிக்கவில்லை என்றால் உன்னை நிம்மதியாக இருக்க விடமாட்டேன் உன் பெற்றோரையும் நிம்மதியாக வாழ விட மாட்டேன்” என மிரட்டியுள்ளார்.

 

இந்த விஷயத்தை காவியா பெற்றோரிடம் சொல்லி அழுதுள்ளார். இதனால் பெற்றோர்கள், மார்த்தாண்டம் போலீசில் புகார் கொடுக்க முடிவு செய்தனர். இதையறிந்த ரஞ்சித் காவியாவை தொடர்புகொண்டு, “போலீசில் புகார் கொடுத்தால் நீயும் நானும் சேர்ந்து இருக்கும் போட்டோவை போலீசிடம் கொடுப்பேன். மேலும் அந்த போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் பரவ விட்டு உன்னை அசிங்கப்படுத்துவதோடு உன்னை வெளியில் நடக்க விடாமல் செய்து விடுவேன்” என மிரட்டியுள்ளார்.

 

இந்த நிலையில், காவியாவை பெற்றோர், அவர்களது உறவினர் வீட்டில் கொண்டு விட்டுள்ளனர். அங்கு சென்ற காவியா அதே பகுதியைச் சேர்ந்த டிப்ளமோ முடித்த ஷெர்லின் புரூஸ் (20) என்பவருடன் பழகியுள்ளார். இதனால் உறவினர்கள் காவியாவை பெற்றோர் வீட்டில் கொண்டு விட்டனர். இந்நிலையில் ரஞ்சித், காவியாவுடன் தான் நெருக்கமாக இருக்கும் படத்தை சமூக வலைத்தளத்தில் பரவச் செய்துள்ளார். இதனால் மனமுடைந்த காவியா 10-ம்  தேதி மாலை வீட்டில் மின் விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப் பார்த்த அவரின் பெற்றோர்கள் கதறி அழுதனர். இதையடுத்து போலீசார், ரஞ்சித் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளதையடுத்து ரஞ்சித் தலைமறைவாகியுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.