Skip to main content

ஏற்காடு கோடை விழா தொடங்கியது! வழக்கமான உற்சாகம் காணோம்!!

Published on 01/06/2019 | Edited on 01/06/2019

சேலம் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலங்களுள் ஒன்றான ஏற்காட்டில் 44வது கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சி வெள்ளிக்கிழமை (மே 31, 2019) தொடங்கியது.



மூன்று நாள்கள் நடைபெறும் இவ்விழாவை, மாவட்ட ஆட்சியர் ரோகிணி தொடங்கி வைத்தார். தோட்டக்கலைத்துறை இயக்குநர் சுப்பையன், மலர்க்கண்காட்சியை துவக்கி வைத்தார்.

 

YERCAUD



கடந்த ஆண்டு ஐந்து நாள்கள் இவ்விழா நடத்தப்பட்டது. மக்களவை தேர்தல் காரணமாக, வி-ழா தொடங்க தாமதம் ஆனதோடு, விழா நடைபெறும் நாள்களும் குறைக்கப்பட்டது. எனினும், சிறப்பான மலர் அலங்காரங்கள் குறைவின்றி செய்யப்பட்டு இருந்தன.

 




அண்மையில், பாகிஸ்தான் போர் விமானங்கள் மீது தாக்குதல் நடத்திய இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனுக்கு சிறப்பு செய்யும் வகையில், மலர்க்கண்காட்சியில் அவருடைய கட்அவுட் வைக்கப்பட்டு இருந்தது. அதன் அருகே, சிவப்பு மற்றும் வெள்ளை ரோஜா பூக்களால் ஆன மிக்-21 ரக போர் விமானத்தின் சிற்பமும் செய்யப்பட்டு இருந்தது. அது, ஒட்டுமொத்த பார்வையாளர்களின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது.

 

YERCAUD



தற்போது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கியுள்ள நிலையில், அதை நினைவூட்டும் வகையில் உலகக்கோப்பையையும் மலர் சிற்பமாக வடித்திருந்ததும் பலரையும் கவனிக்க வைத்தது.

 




மக்களவை தேர்தலுக்கு முன்னதாக, சென்னையில் உள்ள மத்திய ரயில் நிலையத்திற்கு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ரயில் நிலையம் என்று பெயர் சூட்டப்பட்டது. அதற்கு பெருமை சேர்க்கும் விதமாக, பல்வேறு வகையான மலர்களால் சிற்பமாக ரயில் நிலையம் வடிவமைக்கப்பட்டு இருந்தது. சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் அந்த ரயில் முன்பு நின்று தற்படம் எடுத்து மகிழ்ந்தனர்.


அண்ணா பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் வகையில் மா, பால, வாழை என முக்கனிகள் மட்டுமின்றி, அன்னாசி, பப்பாளி, எலுமிச்சை உள்ளிட்ட பல்வேறு கனிகளைக்கொண்டு அலங்கார வளைவு அமைக்கப்பட்டு இருந்தது.

 

YERCAUD



தோட்டக்கலைத்துறை சார்பில் தமிழ்நாட்டில் விளையும் பழங்கள், காய்கறிகள், மலர்கள், தோட்டப்பயிர்கள், மருத்துவ பயிர்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன. மேலும், பல்வேறு கனிகளால் ஆன விலங்குகள், பறவைகளும் வடிவமைக்கப்பட்டு இருந்தன. 



வழக்கம்போல் ஏற்காடு ஏரியில் சுற்றுலா பயணிகள் படு உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். கிராமிய கலைநிகழ்ச்சிகள், நாடகங்கள், செல்லப்பிராணிகள் போட்டி, புகைப்பட போட்டிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.




கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறப்பதற்கு சில நாள்களே உள்ளதால், உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் கூட்டம் இந்தாண்டு குறைவாக இருந்தது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள டெல்லி சென்றதால், ஏற்காடு கோடை விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. அவர் வராததால் மற்ற அமைச்சர்கள், எம்எல்ஏக்களும் பங்கேற்கவில்லை. இதனாலும் கோடை விழா வழக்கமான உற்சாகமின்றி, களையிழந்து காணப்பட்டது.

 

 

 


.

சார்ந்த செய்திகள்

Next Story

மலைப்பாதையில் சுற்றுலா வாகனம் கவிழ்ந்து விபத்து; 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

Published on 18/02/2024 | Edited on 18/02/2024
Tourist vehicle overturns on mountain road More than 10 people injured

வார விடுமுறை தினத்தை முன்னிட்டு சென்னை பல்லாவரத்தை அடுத்துள்ள திருநீர்மலை பகுதியைச் சேர்ந்த 19 பேர் நேற்று மினி பேருந்தில் ஏற்காட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளனர். இதனையடுத்து ஏற்காட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களை கண்டு ரசித்துவிட்டு ஏற்காட்டில் இருந்து சென்னை திரும்புவதற்காக இன்று மதியம் புறப்பட்டுள்ளனர். இந்த பேருந்தில் ஓட்டுநருடன் சேர்த்து மொத்தம் 20 பேர் பயணித்துள்ளனர்.

இந்நிலையில் ஏற்காடு மலையடிவாரத்தின் முதலாவது கொண்டை ஊசி வளைவு அருகே மினி பேருந்து வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரை உடைத்து அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி மினி பேருந்தில் பயணித்த 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

அப்போது அந்தப் பகுதியில் இருந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் விபத்தில்  சிக்கியவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த விபத்து சம்பவத்தால் ஏற்காடு மலையடிவாரத்தில் சிறிது நேரம் பரபரப்பாகக் காணப்பட்டது. 

Next Story

“திமுக அரசு மீது மக்களுக்கு மதிப்பு இருக்கிறது” - நடிகை ரோகிணி பாராட்டு

Published on 31/01/2024 | Edited on 31/01/2024
"People have respect for the DMK government" - actress Rohini praises

“தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டது போல் வேறெந்த மாநிலத்திலும் நலத்திட்டங்கள் செய்யப்படவில்லை. இதன்மூலம் திமுக அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது” என்று நடிகை ரோகிணி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் மக்கள் ஒற்றுமை, மனிதநேயம் ஆகியவற்றை வலியுறுத்தி சேலத்தில் ஜன. 27ம் தேதி மினி மாரத்தான் போட்டி நடந்தது. மாணவ, மாணவிகள், பெரியவர்கள், பொதுமக்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைப்பின் மாநில புரவலரான நடிகை ரோகிணி, திரைப்பட இயக்குநர் கெளதம்ராஜ், தமுமுக பொதுச்செயலாளர் ஹாஜாகனி, அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் ஆகியோர் பரிசுகள், வெற்றி கோப்பைகளை வழங்கினர். 

அப்போது நடிகை ரோகிணி செய்தியாளர்களிடம் கூறியது; “பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வருகிறார். அவருக்கு தமிழ்நாடு பிடித்திருக்கிறது என்பதற்காக வருவதாக கருதிவிடக்கூடாது. அவ்வாறு அடிக்கடி வருவதன் மூலமாவது தன்னை தமிழர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று பிரதமர் கருதுகிறார். தமிழகத்தின் தேவையை அவர் பூர்த்தி செய்தால் நன்றாக இருக்கும். வெறுமனே வந்துவிட்டுப் போவது மட்டும் போதாது. 

தாய்மொழியில்தான் நம் குழந்தைகள் கற்க வேண்டும். அவரவர் தாய்மொழியை முன்னெடுத்துப் படித்தால் எல்லா மொழிகளும் முக்கியத்துவம் பெறும். நம் மொழியை நாம் உயர்த்திப் பிடிக்க வேண்டும். ஹிந்தி திணிப்புக்கு எதிராக போராடித்தான் திராவிட இயக்கங்கள் வளர்ந்து உள்ளன. எப்போதும் நடக்கிற தாக்குதல் நடந்து கொண்டேதான் இருக்கும், நாமும் அதற்கான எதிர்வினையை ஆற்றிக்கொண்டே இருக்க வேண்டும். 

மாநில உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று முதல்வர் கூறுகிறார். திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் மகளிர் உரிமைத் திட்டம், நூலகங்கள் திறப்பு, புத்தகக் கண்காட்சிகள் நடக்கின்றன. வேறு எந்த மாநிலமும் இந்தளவுக்கு நலத்திட்டங்களைச் செய்யவில்லை. இவற்றின் மூலம் திமுக அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது” என்றார் நடிகை ரோகிணி.