Skip to main content

"கடந்த 10 ஆண்டுகள் என்ன ஆட்சி நடத்தினார்கள் என கேட்கும் அளவிற்கான பணிகள் தான் நடைபெற்றுள்ளன" - அமைச்சர் மா.சு பேச்சு

Published on 06/10/2022 | Edited on 06/10/2022

 

"Works have been done to the extent of asking what the government has been doing for the last 10 years" - Minister M. Su's speech

 

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த கார்மாங்குடி கிராமத்தில் ரூ 80 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட, புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிட திறப்பு விழா கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது. சுகாதாரத்துறை துணை இயக்குனர் மீரா வரவேற்றார்.

 

தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இருவரும்  ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினர்.

 

அதனைத் தொடர்ந்து கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 15 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் தேசிய நல வாழ்வு குழும நிதி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட சித்தா மருத்துவ பிரிவு கட்டிடம், காட்டுமன்னார்கோவில் வட்டம் செட்டித்தாங்கல் கிராமத்தில் 25 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட துணை சுகாதார நிலைய கட்டிடம், ரெட்டியூர் கிராமத்தில் 25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலைய கட்டிடம், சிறுகாட்டூர் கிராமத்தில் 25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலைய கட்டிடம், நத்தமலை கிராமத்தில் 25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலைய கட்டிடம், முட்டம் கிராமத்தில் 25 லட்சம் மதிப்பீட்டில்  கட்டப்பட்ட துணை சுகாதார நிலைய கட்டிடம், ராஜேந்திரசோழகன் கிராமத்தில் 25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலைய கட்டிடம் உள்ளிட்ட ஆரம்ப துணை சுகாதார நிலையங்களையும் திறந்து வைத்தனர்.

 

நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், "மருத்துவத்துறை வரலாற்றில் ஒரே மாவட்டத்தில், ஒரே நாளில் 11 புதிய கட்டிடங்கள் திறந்து வைக்கப்படுவது அநேகமாக கடலூரில் மட்டுமே நடந்திருக்கிற ஒரு சிறப்பான நிகழ்வு. இவ்வளவு கட்டிடங்கள் திறந்து வைத்த பிறகும் கூட இன்னும் 70-க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், 200-க்கும் மேற்பட்ட துணை சுகாதார நிலையங்கள் கட்டிடங்கள் எல்லாம் சிதிலமடைந்து கிடக்கிறது. இந்த கட்டிடங்களை எல்லாம் சீரமைப்பதற்கு ஏற்கனவே சி.எஸ்.ஆர் நிதியுடன் முடிந்த அளவுக்கு செய்து கொண்டு இருந்தாலும், இந்த 15 வது நிதி ஆணையின் கீழ் இன்னமும் சரி செய்ய வேண்டிய கட்டிடங்களை கடலூர் மாவட்ட ஆட்சியர் பட்டியல் போட்டு காட்டினார். அப்படிஎன்றால் கடந்த 10 ஆண்டுகள் என்னதான் ஆட்சி நடத்தினார்கள் என்று கேட்கும் அளவிற்கான பணிகள் தான் இங்கு நடைபெற்றிருக்கிறது.

 

ஒரே மாவட்டத்தில் 19 கட்டிடங்களை கட்டியதற்கு பிறகும், இன்னமும் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டிடங்களை கட்ட வேண்டி இருக்கிற இந்த சூழல் இந்த மாவட்டத்தில் இருக்கிறது என்றால், மருத்துவ கட்டமைப்பு கடந்த 10 ஆண்டுகளில் எப்படி இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். மத்திய ஆயுஷ் அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்ததனால் 100 சித்த மருத்துவமனை கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் ஒரு சித்த மருத்துவமனை தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ளது. 13 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படுகின்ற இந்த மருத்துவமனைகள் 100 தமிழகத்தில் அமைய இருக்கின்றன" என்றார்.

 

அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசுகையில் "கம்மாபுரம் ஒன்றியத்தில் இருந்து பிரித்து ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்தில் சேர்க்கப்பட்டுள்ள இப்பகுதி மக்கள் மருத்துவமனைக்கு சுமார் 17 கிலோமீட்டர் தூரமுள்ள விருத்தாசலத்திற்கு செல்ல வேண்டியுள்ளது. இப்பகுதியை ஸ்ரீமுஷ்ணம் பகுதியுடன் சேர்க்க கள்ளிப்பாடி - காவனூர் இடையே வெள்ளாற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டப்படும். கீரமங்கலம் -தேவங்குடி இடையே சிறு பாலம் கட்டும் பணி விரைவில் தொடங்கப்படும்" என்றார்.

 

இவ்விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு 54 லட்சம் மதிப்பில் வேளாண்துறை மற்றும் மருத்துவ துறை மூலம் கர்ப்பிணி பெண்களுக்கான  பெட்டகம், விவசாயிகளுக்கான மருந்து தெளிப்பான், முதியோர் உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

 

முன்னதாக அப்பகுதியில் சுகாதாரத் துறை சார்பில் பன்றி காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் பரவும் முறை குறித்தும், தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட கண்காட்சியை அமைச்சர்கள் பார்வையிட்டு, சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் நிறைகுறைகளை கேட்டறிந்தனர். விழாவில் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன், விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.ஆர்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

வாக்கு இயந்திரத்தில் கோளாறு; இன்னும் தொடங்கப்படாத வாக்குப்பதிவு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Voting machines malfunction in 10 polling stations in Cuddalore
கோப்புப்படம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூரில்  உள்ள 10  வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதனால் கடந்த ஒரு மணி நேரத்திக்கும் மேலாக அப்பகுதியில் வாக்குப் பதிவு  தொடங்கப்படாமல் இருக்கிறது. தேர்தல் அதிகாரிகள் மாற்று வாக்குப் பதிவு எந்திரம் மூலம் வாக்குப் பதிவு தொடங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தாமதமாகும் வாக்குச்சாவடியில் மக்கள் தங்களது ஜனநாயக கடமையாற்ற நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு தொடங்கப்படாமல் இருப்பதால் மாலை ஒரு மணி நேரம் கூடுதலாக ஒதுக்கப்படுமா என்பது குறித்து தேர்தல் தலைமை அதிகாரி தெரிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.