Skip to main content

சங்ககால பொற்பனைக்கோட்டை கடந்து வந்த ஆய்வுப் பாதை... குவியும் பெண்கள்!

Published on 05/08/2021 | Edited on 05/08/2021

 

Women who cut down the juniper trees that occupied the wall of Porpanaikottai and come to see the excavation site with interest!


புதுக்கோட்டை மாவட்டம் வேப்பங்குடி ஊராட்சி பொற்பனைக்கோட்டை கிராமத்தில் உள்ள சங்ககால கோட்டை என கருதப்படும் 1.62 கி.மீ சுற்றளவுள்ள கோட்டையில் தொல்லியல் ஆய்வறிஞர் குடவாயில் பாலசுப்பிரமணியன் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாய்வு செய்து அங்கு கிடைத்த மண் பானை ஓடுகள் உள்ளிட்ட பொருட்களையும் செங்கல் அளவுகளையும் ஆய்வு செய்து இது சங்ககால கோட்டை என்பதை ஆவணப்படுத்தினார்.

 

அதன் பிறகு 2013 ம் ஆண்டு தஞ்சை தமிழ் பல்கலைக்கழக தொல்லறிஞர் பேராசிரியர் ராஜவேலுவின் அப்போதைய ஆய்வு மாணவரான புதுகை பாண்டியன் தகவலின் பேரில் நீர்வாவி குளத்தில் கிடந்த கல்லை ஆய்வு மாணவர் தங்கதுரை, மற்றும் முதுகலை மாணவர் மோசஸ் ஆகியோர் ஆய்வு செய்த போது 5 வரிகள் கொண்ட தமிழி கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டு மறுநாளே ஆவணத்தில் மாணவர்களின் பெயருடன் பதிவு செய்யப்பட்டது. அந்த கல்வெட்டில் கால்நடைகளை கவர வந்தவர்களை எதிர்த்து போரிட்டு மடிந்த கணம் குமரனுக்காக நடப்பட்ட நடுகல் என்பது தெரிய வந்தது. பிறகு அந்த கல்லை தேடி பலர் வந்தாலும் கூட பாதுகாப்பாக தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.

 

Women who cut down the juniper trees that occupied the wall of Porpanaikottai and come to see the excavation site with interest!

 

இந்த கல்வெட்டின் அடிப்படையிலும் சங்ககாலம் என்பதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து 2015 ம் ஆண்டு புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகம் நிறுவனர் ஆசிரியர்மங்கனூர் மணிகண்டன் தலைமையிலான குழுவினர் கோட்டைக்குள்ளும் வெளியிடங்களிலும் மேலாய்வு செய்த போது இரும்பு உருக்கி ஆயுதங்கள் செய்தமைக்கான இரும்பு உருக்கு கழிவுகளும், இரும்பு உருக்கு உலைகளான சென்னாக்குழிகளும், சுடுமண் அச்சுகளும் கண்டெடுத்தனர். மேலும் பலவகையான பானை ஓடுகளும் கண்டெடுத்தனர். தொடர்ந்து தமிழகத்தில் எஞ்சியுள்ள சங்ககால கோட்டையை அகழாய்வு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கறிஞர் கணபதி சுப்பிரமணியம் மூலம் புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் தலைவர் கரு.ராஜேந்திரன் 2019 ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.

 

வழக்கு விசாரனையின் போதே தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் முனைவர் இனியன் பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு செய்ய அனுமதி கேட்டு மத்திய தொல்லியல்துறைக்கு விண்ணப்பம் செய்திருந்தார். பலகட்ட பரிசீலனைக்கு பிறகு தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் அகழாய்வு செய்ய அனுமதி அளித்துள்ளது. தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக் கழகத்திற்கு முதன் முதலில் அகழாய்வு செய்ய அனுமதி கிடைத்ததால் முனைவர் இனியனை அகழாய்வு செய்ய பல்கலைக்கழக துணைவேந்தர் பார்த்தசாரதி வாழ்த்து கூறி அனுப்பி வைத்தார். அதன் பிறகு பாரதிதாசன் பல்கலைக்கழக புவியியல் துறை மூலம் அகழாய்வு செய்ய தேர்வு செய்யப்பட்ட இடங்களை ஸ்கேன் மூலம் ஆய்வு செய்யப்பட்டு வேப்பங்குடி கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா என்பவரின் நிலம் தேர்வு செய்யப்பட்டது.

 

Women who cut down the juniper trees that occupied the wall of Porpanaikottai and come to see the excavation site with interest!

 

அகழாய்வுப் பணிகளை கடந்த ஜூலை 30 ந் தேதி அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து அகழாய்வுப் பணிகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் பல்வேறு வகையான ஓடுகள், இரும்பு ஆணி, மணிகள் கிடைத்திருக்கிறது. அகழாய்வுப் பணிகள் நடப்பதை அறிந்து தினசரி ஏராளமானவர்கள் வந்து பார்க்கிறார்கள்.

 

இந்தநிலையில் தான் சங்ககால கோட்டை முழுமையாக சுமார் 25 அடி உயரத்தில் 30 அடி அகலத்தில் கொத்தளம் அகழியுடன் இருப்பதை சீமை கருவேல மரங்கள் வளர்ந்து மூடியுள்ளதால் கோட்டை மதில் சுவர் வெளியே தெரியவில்லை என்பதால் அகழாய்வுக் குழுவினர் மதில் சுவரில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றினால் கோட்டை முழுமையாக தெரியும் பார்வையாளர்களையும் கவரும் என்று அமைச்சர் மெய்யநாதன் மூலம் கோரிக்கை வந்ததையடுத்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உத்தரவில் திருவரங்குளம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரின் அனுமதி பெற்று ஊராட்சி மன்றத் தலைவர் ராஜாங்கம் வேப்பங்குடி ஊராட்சி 100 நாள் பணியாளர்கள் மூலம் கோட்டை மதில் சுவர் மேல் அடர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை வெட்டி அகற்றும் பணிகள் தொடங்கியுள்ளது. இந்தப் பணிகள் முடியும் போது முழுமையான சங்ககால கோட்டையை காணமுடியும். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'ஐயம் களையப்பட வேண்டும்'- ஆசிரியர் மன்ற மாநில பொதுச்செயலாளர் கோரிக்கை

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
nn

'மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களின் வாக்குரிமை பாதுகாக்கப்படவேண்டும். எனவே அஞ்சல் வாக்கு மற்றும் தேர்தல் பணிச்சான்று கிடைக்கப்பெறாத ஆசிரியர், அரசு அலுவலர்களின் ஐயம் களையப்படவேண்டும்' என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொதுச் செயலாளர் மன்றம் நா.சண்முகநாதன் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது, 'தமிழ்நாட்டில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் எதிர்வரும் 19.04.2024 அன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கு மக்களவைத் தேர்தல் பணிகளில் தமிழ்நாட்டின் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்கள் வாக்குச்சாவடி அலுவலர் பொறுப்புகள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். இவ்வாறு வாக்குச்சாவடி அலுவலர்களாக பணியமர்த்தப்பட்டுள்ள ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்கள் அஞ்சல் வாக்கு(postal vote) உரிமையின் மூலமாகவும் , தேர்தல் பணிச் சான்று(election duty certificate) கிடைக்கப்பெற்று பணியாற்றும் வாக்குச்சாவடிகளில் வாக்கினை செலுத்துவது மூலமாகவும் தங்களது ஜனநாயக கடமையை செவ்வனே ஆற்றி வந்துள்ளனர் என்பது காலம் காலமாக இருந்து வரும் நடைமுறை மரபாகும்.

ஆனால் தற்போதைய மக்களவைத் தேர்தலுக்கான இவ்வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இதுவரையிலும் மூன்று கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையிலும் அஞ்சல் வாக்குகள் கோரியவருக்கு அஞ்சல் வாக்குகளும் வழங்கப்படவில்லை.தேர்தல் பணிச்சான்று கோரியவருக்கும் தேர்தல் பணிச்சான்றும் வழங்கப்படவில்லை. மாநிலத்தின் பெரும்பாலான மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களின் இதற்கு மெத்தனப்போக்கு காரணமாகும்.  வாக்குரிமை பறிப்புக்கு இணையானதாகும் என்று வலுவாகப் பேசப்படுகிறது.

nn

தமிழ்நாட்டின் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களிடம் பரவலாக பரவி வரும் பேரச்சம் மற்றும் பெரும் ஐயம், மனப்பதற்றம், மனக்கொந்தளிப்பினை அதிகரித்துள்ளது. புதுக்கோட்டை  மாவட்டத்தில் மறியல் போராட்டம் வரை சென்றுள்ளது. நூறு சதவிகிதம் வாக்குப் பதிவினை முதன்மை நோக்கங்களில் ஒன்றாக கொண்டுள்ள தேர்தல் ஆணையத்தின் இலக்கினை நிறைவேற்றும் வகையில் தேர்தல் பணிகளில் பணியமர்த்தப்படும் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களுக்கு அஞ்சல் வாக்குச்சீட்டும், தேர்தல் பணிசான்றும் உடன் கிடைக்கப் பெறச்செய்து வாக்கு உரிமையை பாதுகாத்துத் தந்திட வேண்டுமாய் தமிழ்நாடு தலைமைத்தேர்தல் அலுவலரிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது' என தெரிவித்துள்ளார்.

Next Story

தேர்தல் பணியில் உள்ள ஆசிரியர்களின் தபால் ஓட்டுகளில் குளறுபடி - 50% வாக்குகள் தேக்கம்? திட்டமிட்டு நடக்கிறதா?

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Confusion in the postal ballots of teachers on election duty- 50% of votes stagnated? Is it going as planned?


தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு அரசியல் கட்சிகள், சுயேட்சை வேட்பாளர்கள் பரபரப்பான தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டுள்ளனர். மற்றொரு பக்கம் வாக்குப் பதிவிற்கான ஆயத்தப்பணிகளைத் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. அதேபோல 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் கோடிக்கணக்கில் செலவழித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. வாக்குப்பதிவு மையங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு தேவையான 3 கட்ட பயிற்சி வகுப்புகளும் இன்றோடு முடிந்துவிட்டது.

இந்தநிலையில் தேர்தல் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு தேவையான வாக்குச் சீட்டுகள் வழங்கப்பட்டு பயிற்சி மையத்திலேயே வாக்களிக்கவும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஏற்கெனவே தேர்தல் பணி பயிற்சியில் இருந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.

இன்று 3 வது கட்ட பயிற்சி வகுப்புகள் நடந்தபோது அஞ்சல் வாக்குப்பதிவும் நடந்துள்ளது. பயிற்சியில் இருந்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தங்களின் வாக்கைச் செலுத்த சனிக்கிழமை மாலை 3 மணிக்கே கடைசி நாள் என்பதால் அஞ்சல் வாக்குச் சீட்டுகளை பெறச் சென்றபோது ஒவ்வொரு பயிற்சி மையத்திலும் சுமார் 50% பேருக்கு வாக்குச் சீட்டுகள் இல்லை. மேலும் தனித்தனி அறைகளில் வாக்குப்பதிவுகள் நடத்தாமல் ஒரே அறையில் வாக்குப்பதிவு செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

இதனால் கொதிப்படைந்த ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் இலுப்பூர், திருமயம், ஆலங்குடி உட்பட பல இடங்களில் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். அதன் பின்னர், அங்கு வந்த அதிகாரிகள் தமிழ்நாடு முழுவதும் இந்தக் குழப்பம் உள்ளது. மாநில தேர்தல் ஆணையத்திற்கு தகவல் தெரிவித்து அனைவரும் வாக்களிக்கும் வாய்ப்பை பெற்றுக் கொடுப்பதாக உறுதி அளித்த பிறகே கலைந்து சென்றனர்.

இதுகுறித்து பயிற்சியில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்கள் கூறும் போது, தபால் வாக்குகளில் புதுமையைப் புகுத்துவதாக நினைத்து பல மையங்களில் 50% முதல் 70% பேருக்கு வாக்குரிமையை இல்லாமல் பறித்துள்ளனர். இன்றே கடைசி நாள் என்று சொல்லிவிட்டு 27% பேருக்கு மட்டும் வாக்குச்சீட்டு கொடுத்துள்ளனர். தேர்தல் ஆணையம் 100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு செய்கிறது ஆனால் தேர்தல் பணியில் உள்ள எங்கள் வாக்கு உரிமையைப் பறிப்பது சரியா? நாங்கள் 18 ஆம் தேதியே தேர்தல் பணிக்கு போக வேண்டும் ஆனால், வாக்களிக்காமல் எப்படி நாங்கள் நிம்மதியாக வாக்குச்சாவடிக்குள் பணி செய்ய முடியும். பலரும் பல வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கிறோம். எங்களுக்கான வாக்குரிமை பறிக்கப்பட்டால் நாங்கள் எங்களுக்கான வாக்குச் சாவடிக்கு வாக்களிக்கத் தான் போவோமே தவிர தேர்தல் பணிக்கு போகமாட்டோம். இது தமிழ்நாடு முழுவதும் உள்ளது.

இதில் ஏதோ சூழ்ச்சி இருக்குமோ என்று நினைக்கிறோம். அதாவது ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் சுமார் 12 முதல் 15 ஆயிரம் பேர் தேர்தல் வாக்குப்பதிவு மையங்களில் பணியில் ஈடுபடுகிறோம் இத்தனை ஓட்டுகளும் வேட்பாளர்களின் வெற்றியைத் தீர்மானிக்கும் ஓட்டுகளாக உள்ளதால் வேண்டுமென்றே இந்தச் சதி நடக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. மேலும் , புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று நடந்த 3 ஆம் கட்ட பயிற்சியில் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதி வாரியாக 6 இடங்களில் பயிற்சிகள் நடந்தது. ஒவ்வொரு தொகுதிக்கும் 25 முதல் 30 அறைகளில் பயிற்சி அளிக்கப்பட்ட நிலையில் 5 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மட்டுமே பயிற்சிக்கு அனுப்பி இருந்தார்கள். அந்த இயந்திரங்களை எப்படி கையாளுவது என்று கூட பயிற்சி அளிக்கப்படவில்லை. பிறகு எப்படி வாக்குப்பதிவு மையங்களில் நாங்கள் இயந்திரங்களைக் கையாளுவது என்று தெரியவில்லை. மதிய உணவும் கூட தரவில்லை என்றனர்.

தபால் வாக்கு கிடைக்கவில்லை என்றால், பணி புறக்கணிப்பு போராட்டங்களில் ஈடுபட சங்கங்கள் மூலம் பேசி வருகின்றனர். தபால் வாக்குப் பதிவில் ஏன் இந்தக் குளறுபடி? மாநில கட்சிகளுக்கு வாக்குகள் பதிவாகி விடும் என்பதால் இப்படி குளறுபடி செய்கிறார்களா என்ற அச்சம் பொதுமக்களிடமும் எழுந்துள்ளது.