Skip to main content

தேங்காய் உரிக்கும் பெண் தொழிலாளி கொலை!

Published on 02/09/2021 | Edited on 02/09/2021

 

salem district, women incident police investigation


சேலம் அருகே தேங்காய் உரிக்கும் பெண் கூலித்தொழிலாளி ஒருவரின் சடலம் முள் புதரில் இருந்து நிர்வாண நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளது. 

 

சேலம் மாவட்டம், நங்கவள்ளி அருகே உள்ள சூரப்பள்ளி பள்ளக்காரனூர் காட்டுவலவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். தேங்காய் உரிக்கும் கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி பெரியக்காள் (வயது 38). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். 

 

கடந்த செவ்வாய்க்கிழமை (ஆக. 31) மாலை 06.30 மணியளவில் பெரியக்காள், பால் வாங்க அருகில் உள்ள கடைக்குச் சென்றுவருவதாக கூறிவிட்டுச் சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.

 

இந்நிலையில், அதே பகுதியில் உள்ள ஒரு முள்புதரில் பெரியக்காள் நிர்வாண நிலையில், சடலமாகக் கிடப்பதாக காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. மனைவி அலங்கோலமான நிலையில் இறந்து கிடப்பதைப் பார்த்து அவருடைய கணவர் கதறி அழுதார்.

 

காவல்துறையினர் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பெரியக்காளின் உடலில் பல இடங்களில் ரத்தக் காயங்கள் இருந்தன. மர்ம நபர்கள் அவரை பாலியல் வன்புணர்வு செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. 

 

சேலம் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீஅபிநவ், ஓமலூர் டி.எஸ்.பி. சங்கீதா, ஜலகண்டாபுரம் காவல் நிலைய காவல்துறையினர் ஆகியோர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். 

 

முதற்கட்ட விசாரணையில், இந்தக் கொலைக்குத் தவறான தொடர்பு காரணமாக இருக்கலாம் என கருதுகிறார்கள். பெரியக்காள் தனது கணவருடன் தேங்காய் உரிக்கும் மண்டியில் கூலி வேலை செய்துவந்துள்ளார். அதே மண்டியில் சவுரியூரைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் சுரேஷ் (வயது 30) என்பவருடன் நெருங்கிப் பழகியுள்ளார். 

 

அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து நெருக்கமாக இருந்துள்ளனர். இதையறிந்த கணவர், அவரைப் பலமுறை கண்டித்துள்ளார். இந்த நிலையில்தான் அவர் பால் வாங்குவதற்காக வெளியே சென்றிருந்தபோது கொல்லப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. 

 

இது ஒருபுறம் இருக்க, பெரியக்காளுடன் நெருங்கிப் பழகிவந்த ஆண் நண்பர் சுரேஷூம் திடீரென்று மாயமாகிவிட்டார். அதனால் அவர் மீது சந்தேகம் அதிகரித்துள்ளது. 

 

இந்த வழக்கு தொடர்பாக பெரியக்காள் கணவரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்திவருவதோடு, தலைமறைவான சுரேஷையும் தேடிவருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Two people who went to vote fainted and passed way

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோன்று, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். சேலம் மாநகரில் நடந்த இந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.