Skip to main content

பள்ளி மாணவியைக் கடத்திச்சென்று கல்லூரி மாணவர் உள்ளிட்ட இருவர் பாலியல் வன்கொடுமை

Published on 19/11/2022 | Edited on 19/11/2022

 

 

Two men, including a college student, kidnapped and sexually assaulted a schoolgirl!


தர்மபுரி அருகே பள்ளி மாணவியைக் காட்டுக்குள் தூக்கிச்சென்று கல்லூரி மாணவரும், அவருடைய நண்பரும் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள மிட்டாசின்னஅள்ளியைச் சேர்ந்தவர் ராஷ்மிகா (வயது 17, பெயர் மாற்றப்பட்டுள்ளது).  இண்டூர் அருகே தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்து அங்குள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். ராஷ்மிகா தினமும் பள்ளிக்கு சைக்கிளில் சென்று வருவது வழக்கம். நவ. 16 ஆம் தேதி அன்றும் அவர் வழக்கம்போல் பள்ளிக்கு சைக்கிளில் சென்றார். பள்ளி முடிந்து மாலையில் வீட்டிற்குத் திரும்பி வந்து கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் அவரைப் பின்தொடர்ந்து சென்ற இரண்டு இளைஞர்கள் சிறுமியை வழிமறித்து காட்டுப்பகுதிக்குள் தூக்கிச்சென்றனர். அங்கு மறைவான இடத்தில் வைத்து, அவர்கள் இருவரும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

 

நீண்ட நேரமாகியும் மாணவி வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த அவருடைய பாட்டி உறவுக்காரர்களை அழைத்துக்கொண்டு பல இடங்களில் தேடிப்பார்த்தார். ராஷ்மிகா பள்ளி முடிந்து வழக்கமாக ஒரு ஒற்றையடிப் பாதை வழியாகத்தான் வீட்டுக்கு வருவார். அந்த வழியாகச் சென்ற உறவினர் ஒருவர், பாதையிலேயே அவருடைய சைக்கிள் கிடந்ததைப் பார்த்தார். அதையடுத்து, அங்குள்ள காட்டுப்பகுதியில் தேடிப்பார்த்த போது ஒரு முட்புதர் அருகே சிறுமி மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை மீட்டு உடனடியாக பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

 

மருத்துவப் பரிசோதனையில் அந்த மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து இண்டூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர், இந்தப் புகார் பென்னாகரம் மகளிர் காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

முதற்கட்ட விசாரணையில், இண்டூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவரும், அவருடைய நண்பர் ஒருவரும் சேர்ந்துதான் பள்ளி மாணவியை கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்திருப்பது தெரிய வந்தது. அவர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கத்தோடு பள்ளி மீது தாக்குதல்; வெளியான அதிர்ச்சி வீடியோ!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Incident on school chanting Jai Sriram  Shocking video released in telangana

தெலுங்கானா மாநிலம், மன்செரியல் மாவட்டம், கண்ணேபல்லி கிராமத்தில் அன்னை தெரசா உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில், அந்தக் கிராமத்திலும், அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்தும் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று(18-04-24) 50க்கும் மேற்பட்டவர்கள் காவி உடை அணிந்து, இந்தப் பள்ளிக்குள் நுழைந்து, அங்கிருந்த அன்னை தெரசா சிலை உள்ளிட்டவற்றின் மீது கல் வீசி பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், அவர்கள் ஜெய்ஸ்ரீ ராம் என்று முழக்கமிட்டவாறு அந்தப் பள்ளி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதத்ளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதல் தொடர்பான வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து பள்ளியின் முதல்வரான கேரளாவைச் சேர்ந்த ஜெய்மன் ஜோசப்பிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு காவி நிற உடை அணிந்து சில மாணவர்கள் பள்ளிக்கு வந்துள்ளனர். இதனைக் கண்ட அப்பள்ளி முதல்வர், அந்த மாணவர்களை அழைத்து விசாரணை நடத்தியுள்ளார்.

அதற்கு அந்த மாணவர்கள், 21 நாள்கள் அனுமன் தீட்சை சம்பிரதாயத்தைக் கடைபிடிப்பதாக கூறியுள்ளனர். அதனால், பள்ளி முதல்வர், மாணவர்கள் தங்களுடைய பெற்றோர்களைப் பள்ளிக்கு அழைத்து வருமாறு கூறியுள்ளார். இதன் காரணமாக, இன்று காவி உடை அணிந்து வந்த கும்பல் பள்ளி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பது தெரியவந்தது.. .

மேலும், இந்தத் தாக்குதலில் பள்ளி முதல்வர் ஜோசப்பை சுற்றி வளைத்து அடித்து, அவரது நெற்றியில் வலுக்கட்டாயமாக திலகமிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து, மாணவர்களின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில், மத உணர்வுகளைத் தூண்டுதல், மதத்தின் அடிப்படையில் பகைமையை வளர்ப்பது தொடர்பான பிரிவுகளின் கீழ் பள்ளி முதல்வர் உட்பட இரண்டு ஊழியர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.