Skip to main content

சுற்றித்திரிந்த மாடுகளைப் பிடித்து வந்த நகராட்சி ஊழியரைத் தாக்கிய பெண்

Published on 17/11/2022 | Edited on 17/11/2022

 

Woman who made trouble to government employee

 

நாகையில் சாலைகளில் சுற்றித்திரிந்த 40க்கும் மேற்பட்ட மாடுகளைப் பிடித்த நகராட்சி ஊழியர்களை மாட்டின் உரிமையாளர்கள் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு சட்டையைப் பிடித்து இழுத்துத் தாக்கிய சம்பவத்தால் நகராட்சி ஊழியர்கள் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

 

நாகப்பட்டினத்தில் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், வெளிப்பாளையம், ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வாயில் உள்ளிட்ட மக்கள் அதிகம் புழங்கக்கூடிய சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகள் என எங்குப் பார்த்தாலும் மாடுகள் சுற்றித் திரிகிறது. பகல் பொழுதில் கவனமாகச் சென்றாலும் இரவு நேரங்களில் வாகனங்களில் செல்வோர் விபத்துக்கு உள்ளாகின்றனர். அதுவும் ரவுண்டான வளைவுகளில் படுத்திருக்கும் மாடுகளால் இரவு நேரத்தில் டூவீலரில் பயணிப்பவர்கள் பலமுறை விழுந்து பலத்த காயத்தோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளன.

 

Woman who made trouble to government employee

 

தற்போது மழைக்காலம் என்பதால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியும், சாலைகளில் உள்ள குண்டு-குழிகள் தெரியாமலும் வாகன ஓட்டிகள் பெரும் விபத்தைச் சந்திக்கின்றனர். இந்த நிலைமையில் சுற்றித்திரியும் கால்நடைகளால் தினசரி அதிக விபத்து நடக்கிறது. இதனால், விபத்தை ஏற்படுத்தும் கால்நடைகளை அப்புறப்படுத்தி அதன் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

 

இந்நிலையில், இரவு நாகப்பட்டினம் மற்றும் நாகூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் படுத்துக்கொண்டும் குறுக்கும் நெடுக்குமாக சாலைகளில் சுற்றித்திரிந்த 40க்கும் மேற்பட்ட மாடுகளை நகராட்சி ஊழியர்கள் பிடித்து டெம்போ வேனில் ஏற்றி நாகையில் உள்ள நகராட்சி அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். இதையறிந்து அங்கு வந்த மாட்டின் உரிமையாளர்கள் மாடுகளை விடுவிக்க கோரி நகராட்சி அலுவலகம் முன்பு கூச்சலிட்டனர். அப்போது கால்நடைகளை பறிமுதல் செய்த நகராட்சி ஊழியர்களிடம் மாட்டின் உரிமையாளர்கள் ஒருகட்டத்தில் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இதனால் நாகப்பட்டினம் நகராட்சி அலுவலகம் முன்பு பெரும் பரபரப்பு நிலவியது.

 

Woman who made trouble to government employee

 

அப்போது மாட்டின் உரிமையாளரான பெண் ஒருவர், தனது மாட்டை பிடித்து வந்த நகராட்சி ஊழியரை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு அவரது சட்டையைப் பிடித்து இழுத்து தாக்குதலில் ஈடுபட முயன்றதால், அங்கு தள்ளுமுள்ளும் பரபரப்பும் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த போலீசார் மாட்டின் உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கால்நடைகளை சாலைகளில் திரியவிட்ட குற்றத்திற்காக 3000 ரூபாய் அபராதம் கட்டிவிட்டு உரிமையாளர்கள் அவரவர் மாடுகளை அழைத்துச் செல்ல அறிவுறுத்தினர்.

 

சாலைகளில் சுற்றித்திரிந்த மாடுகளை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்ட நகராட்சி ஊழியர்களை, மாட்டின் உரிமையாளர்கள் பணி செய்ய விடாமல் தடுத்து அவர்களின் சட்டையை பிடித்து இழுத்து தாக்குதல் தடுக்க முயன்ற சம்பவம் நாகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

தீ பற்றி எரிந்த குடிசை வீடுகள்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
nagai cottages incident Case against BJP

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இத்தகைய சூழலில் நாகையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பாஜக வேட்பாளர் ரமேஷை வரவேற்பதற்காக கோட்டாட்சியர் அலுவலகத்தின் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பாஜகவினரால் பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பட்டாசு பொறிகள் அருகில் இருந்த குடிசை வீடுகளில் பட்டு இரண்டு வீடுகள் பற்றி எரிந்தது. இதில் பக்கிரிசாமி, சுப்பிரமணியன் ஆகிய இருவரின் குடிசை வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இதனை அறிந்து அந்தப் பகுதியில் இருந்த மக்கள் குடிசை வீட்டை இழந்தவர்களுக்கு ஆதரவாக பாஜக நிர்வாகிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், பாஜக மாவட்டத் தலைவர் கார்த்திகேயனை முற்றுகையிட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இழப்பீடு வழங்கப்படும் என எழுத்துப்பூர்வமாக தெரிவித்தால் மட்டுமே பாஜக மாவட்டத் தலைவரை விடுவிப்போம் எனக்கூறி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலர் வீரமணி ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் பாஜகவினர் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தடைசெய்யப்பட்ட வெடியை விற்பனை செய்த, தம்பிதுரை பூங்கா அருகே உள்ள வெடி கடைக்கும் வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.  

Next Story

பாஜக வெடித்த பட்டாசு; இரண்டு குடிசைகள் எரிந்து நாசம்; மக்கள் போராட்டம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
BJP burst firecrackers; Two huts were destroyed by fire; People's struggle

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்நிலையில் நாகையில் பாஜக வேட்பாளர் பிரச்சாரத்தின்போது வெடிக்கப்பட்ட பட்டாசு இரண்டு குடிசைகள் மீது பட்டு, பற்றி எரிந்துள்ளது. இதனால் குடிசை வீடுகள் இரண்டு முற்றிலும் சேதமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்தப் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பாஜக வேட்பாளர் ரமேஷை வரவேற்பதற்காக கோட்டாட்சியர் அலுவலகத்தின் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பாஜகவினரால் பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது பட்டாசு பொறிகள் அருகில் இருந்த குடிசை வீடுகளில் பட்டு இரண்டு வீடுகள் பற்றி எரிந்தது. இதில் பக்கிரிசாமி, சுப்பிரமணியன் ஆகிய இருவரின் குடிசை வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இந்நிலையில் அந்தப் பகுதியில் இருந்த மக்கள் குடிசை வீட்டை இழந்தவர்களுக்கு ஆதரவாக பாஜக நிர்வாகிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பாஜக மாவட்டத் தலைவர் கார்த்திகேயனை முற்றுகையிட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இழப்பீடு வழங்கப்படும் என எழுத்துபூர்வமாக தெரிவித்தால் மட்டுமே பாஜக மாவட்டத் தலைவரை விடுவிப்போம் எனக்கூறி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.