Skip to main content

பெண் தொழிலதிபரிடம் ரூ. 36 லட்சம் மோசடி! வழக்கறிஞர் உட்பட இருவர் மீது வழக்கு!!

Published on 15/07/2022 | Edited on 15/07/2022

 

A woman entrepreneur victim fraud case against two including the lawyer!!
குரு இராதாகிருஷ்ணன்

 

நீதிமன்றத்தை ஏமாற்றி போலி ஆவணம் மூலம் வழக்கை வாபஸ் பெற்ற வழக்கறிஞர் உள்பட இருவர் மீது மாவட்டக் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

மதுரை பைபாஸ் ரோட்டைச் சேர்ந்த தொழிலதிபர் அன்பரசி. இவருக்கு மதுரையைச் சேர்ந்த முரளி, குணசேகரன், சரவணன் ஆகிய மூன்று பேர் நிலத்தை ரூ. 25 இலட்சம் மதிப்பீட்டில் பெறுவதற்காக கடந்த 1999ஆம் ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ம் தேதி கிரைய உடன்படிக்கை ஏற்பட்டது. அதன் பின் நில உரிமையாளர்கள் மூவரும் நிலத்தை வேறு நபருக்கு திடீரென விற்றுவிட்டனர். 

 

இதனால் அன்பரசி, பணத்தை திருப்பித் தர வலியுறுத்தி மதுரை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதனடிப்படையில் நீதிமன்றமும் ரூ. 28 லட்சத்து 66 ஆயிரத்து 660 ரூபாயை மற்றும் அந்தப் பணத்திற்கான 6 சதவீத வட்டியுடன் வழங்க உத்தரவிட்டது. அப்படி இருந்தும் பணம் தராததால் உத்தமபாளையத்தில் உள்ள பங்குதாரர்களின் சொத்துக்கள் மீது நடவடிக்கை எடுக்க அன்பரசி தேனி மாவட்ட கூடுதல் விரைவு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதனால் பங்குதாரர்கள் பல்வேறு தவணைகளில் நீதிமன்றத்தில் 44.75 லட்சத்தை திருப்பி செலுத்தினார்கள். 

 

அதேசமயம், இந்த விவகாரம் குறித்து தொழிலதிபர் அன்பரசியின் கணவர் பாக்கியராஜ், தனது நண்பர் திண்டுக்கல்லில் உள்ள ஆடிட்டர்(CA) சீனிவாசனிடம் தெரிவித்துள்ளார். அவரின் ஏற்பாட்டின் பெயரில், இந்த வழக்கை நடத்த தேனியைச் சேர்ந்த வழக்கறிஞரான குரு இராதாகிருஷ்ணனை (ஓ.பி.எஸ்.சின் உறவினர். கடந்த அதிமுக ஆட்சியின்போது அரசு வழக்கறிஞராகவும் இருந்திருக்கிறார்)  நியமித்துள்ளனர்.

 

A woman entrepreneur victim fraud case against two including the lawyer!!
ஆடிட்டர் சீனிவாசன்

 

ஆனால், 44.75 லட்சத்தை முரளி, சரவணன் மற்றும் குணசேகரன் ஆகியோரிடம் இருந்து அன்பரசி பெற்றுக்கொண்டதாக போலி ஆணவத்தை தயார் செய்து அதில் அன்பரசியின் கையெழுத்தை போட்டு அந்தப் போலி ஆவணத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து வழக்கை வாபஸ் பெற்றனர். 

 

இந்த மோசடி விவகாரத்தை அறிந்த அன்பரசி, ஆடிட்டர் சீனிவாசன், வழக்கறிஞர் குரு இராதாகிருஷ்ணன் ஆகியோரிடம் தனக்கு வரவேண்டிய பணத்தை கேட்டுள்ளார். அப்போது இவர்கள், ரூ.8.50 லட்சத்தை மட்டும் அன்பரசியிடம் கொடுத்துள்ளனர். மேலும் மீதி பணம் 36.25 லட்சத்தை கொடுக்காமல் தொடர்ந்து இழுத்தடித்து வந்துள்ளனர். அதுமட்டுமின்றி அன்பரசிக்கு கொலை மிரட்டலும் விடுத்து வந்ததாக சொல்லப்படுகிறது. 

 

இதனால் அன்பரசி, தனது பணத்தை மீட்டுத் தரக்கோரி திண்டுக்கல் தேனி சரக டி.ஐ.ஜி.யாக இருந்த விஜயக்குமாரியிடம் கடந்த 29.9.2021 அன்று புகார் மனு கொடுத்தார். அதைத் தொடர்ந்து தேனி மாவட்டக் குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுக்க டி.ஐ.ஜி. பரிந்துரையும் செய்திருந்தார். ஆனால், தேனி மாவட்டக் குற்றப்பிரிவு காவல்துறையினர் அன்பரசி புகாரின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்துள்ளனர். 

 

இதனால் அன்பரசி, தேனி மாஜிஸ்த்ரேட் நீதிமன்றத்தில் பணத்தை மீட்டு தரக்கோரி மனு கொடுத்தார். இந்த மனுவை விசாரித்த தேனி மாஜிஸ்த்ரேட் நீதிமன்றம், ஆடிட்டர் சீனிவாசன் மற்றும் வழக்கறிஞர் குரு இராதாகிருஷ்ணன் மீது மோசடி மற்றும் கொலை மிரட்டல் உள்பட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய தேனி மாவட்டக் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சீமைராஜ் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் உமாதேவி ஆகியோருக்கு உத்தரவிட்டது. அதனடிப்படையில் ஆடிட்டர் சீனிவாசன் மற்றும் வழக்கறிஞர் குரு இராதாகிருஷ்ணன் மீது வழக்குப் பதிவு செய்து அது தொடர்பான விசாரணை நடைபெற்றுவருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அதிமுகவின் பொய் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது'-ஐ.பி.செந்தில்குமார் பேச்சு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'AIADMK's false propaganda will not be accepted by the people' - IP Senthilkumar's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப் படுத்தியுள்ளன.

இந்நிலையில், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். பிரச்சாரத்திற்கு ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான சிவகுருசாமி தலைமை தாங்கினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி முத்துகிருஷ்ணன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய சிபிஎம் செயலாளர் சக்திவேல் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் பேசுகையில், ''மலைவாழ் மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்தது போல் பொய்யான பிரச்சாரத்தை அதிமுகவினர், பாஜகவினர் பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் மோசடியான பிரச்சாரம் இது பொதுமக்கள் மத்தியில் எடுபடாது. கடந்த ஆண்டு 5.8.22 ஆம் தேதி அன்று, நமது திமுக பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி அவர்கள் ஆடலூர் மற்றும் பன்றி மலைப் பகுதியில் வசிக்கும் பொலையர் இன மக்களைப் பழங்குடியின மக்களாக மாற்றி அவர்களுக்கான உரியச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மத்திய பழங்குடியின துறை அமைச்சர் அர்ஜீன் முன்டாவிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

இதோ அந்தக் கோரிக்கை மனு என்று மனுவைத் தூக்கி காண்பித்து பிரச்சாரம் செய்தார். எதையும் ஆதாரத்துடன்தான் நாங்கள் பேசுவோம். ஆத்தூர் தொகுதியின் செல்லப் பிள்ளையாக இருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆடலூர் ஊராட்சிக்கு மட்டும் எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். இங்குள்ள மக்கள் மருத்துவ வசதிக்காக தாண்டிக்குடி, கொடைக்கானல் செல்ல வேண்டிய நிலையை மாற்றி ஆடலூருக்கும் பன்றி மலைக்கும் இடையே மிகப்பெரிய மருத்துவமனையைக் கொண்டு வந்துள்ளார். தேர்தல் முடிந்த பின்பு மருத்துவமனை திறக்கப்படும். ஆம்புலன்ஸ் வசதியுடன் மலையில் உள்ள எந்தக் கிராம மக்களும் இங்கு வந்து சிகிச்சை பெறலாம், விரைவில் மலைக் கிராமத்தில் வசிக்கும் பெண்களும் இலவசமாகப் பேருந்தில் பயணம் செய்ய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் விரைவில் உத்தரவிட உள்ளார். அதன்பின்னர் நீங்கள்(பெண்கள்) திண்டுக்கல்லுக்கு இலவசமாகப் பயணம் செய்யலாம்'' என்று கூறினார்.

Next Story

திண்டுக்கல்லில் காவி நிறத்தில் வந்தே பாரத்?

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் மதுரையில் இருந்து பெங்களூருக்கு காவி நிறத்தில் வந்தே பாரத் ரயில் சேவை விரைவில் தொடங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மக்களவை தேர்தல் முடிந்தவுடன் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வந்தே பாரத் ரயில் திண்டுக்கல், கரூர், சேலம், தர்மபுரி, ஓசூர் உள்ளிட்ட இடங்களில் நின்று செல்லும் எனவும் கூறப்படுகிறது. மதுரை பெங்களூரு இடையே 435 கிலோமீட்டர் தூரத்தையும் 5.30 மணி நேரத்தில் வந்தே பாரத் கடக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.