Skip to main content

கரோனா தடுப்பூசி போட்டதால் பெண் இறப்பா? அதிர்ச்சியில் கிராம மக்கள்! 

Published on 04/09/2021 | Edited on 04/09/2021

 

Can a woman die from corona vaccination? Villagers in shock

 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ளது மகாதேவி மங்கலம். இந்த ஊரைச் சேர்ந்தவர் விவசாயக் கூலி வேலை செய்துவரும் சண்முகம். சண்முகம் - விஜயா (37) தம்பதிக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர். மத்திய அரசின் ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின்படி மகாதேவி மங்கலத்தில் 100 நாட்கள் பணிகள் நடந்துவந்தது. அங்கு விஜயா வேலைக்குச் சென்றுகொண்டிருந்தார். அங்கு மேல்சித்தாமூர் ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள், மகாதேவி மங்கலத்தில் நடைபெற்றுவந்த 100 நாள் வேலை திட்ட பணியிடத்தில் தடுப்பூசி முகாம் நடத்தினர்.

 

அங்கு பணியில் ஈடுபட்டிருந்த பலருக்கும் கிராம சுகாதார செவிலியர்கள் தடுப்பூசி போட்டுள்ளனர். அப்போது விஜயாவையும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு கூறியுள்ளனர். தனக்கு குறைந்த இரத்த அழுத்தம் உள்ளது, அதனால் மயக்கம் வரும் எனவே தனக்கு தடுப்பூசி போட வேண்டாம் என விஜயா கூறியுள்ளார். ஆனால் ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலைக்கு வருபவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என ஊராட்சி செயலாளர் தனலட்சுமி வலியுறுத்தி கூறியுள்ளார். இதையடுத்து மருத்துவ குழுவினர் விஜயாவிற்கு ரத்த அழுத்த பரிசோதனை எதுவும் செய்யாமல் கரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். அதன் பிறகு வீட்டுக்குச் சென்ற விஜயாவுக்கு அன்று நள்ளிரவு கடும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

 

Can a woman die from corona vaccination? Villagers in shock

 

இதையடுத்து நேற்று அதிகாலை 6 மணியளவில் அவரை செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அவரது குடும்பத்தினர் அழைத்துச் சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு கொண்டு சென்ற விஜயாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்தத் தகவல் அறிந்த மகாதேவி மங்கலம் கிராம மக்கள் ஆத்திரமடைந்து நேற்று காலை 11 மணியளவில் செஞ்சி - சேத்துப்பட்டு சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

 

மறியல் நடைபெற்ற இடத்திற்கு விரைந்து சென்ற செஞ்சி வட்டாட்சியர் ராஜன், டி.எஸ்.பி. இளங்கோவன், ஊராட்சி ஒன்றிய ஆணையர் சிவகாமி ஆகியோர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் விஜயாவின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கிடைக்க பரிந்துரை செய்ய வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர். அதை செய்து தருவதாக அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து மகாதேவிமங்கலம் கிராம மக்கள் சாலை மறியலைக் கைவிட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணமான பெண்ணுக்கு கத்தி குத்து; முன்னாள் காதலன் வெறிச்செயல்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 married woman has been stabbed by her ex-boyfriend

திருப்பத்தூர் எல்ஐசி பில்டிங் பின்புறம் உள்ள ராஜீவ் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த குமார் மகள் இந்துமதி. அதே பகுதியைச் சேர்ந்த அனுமுத்து மகன் ஆட்டோ ஓட்டுநரான அஜித்குமார்.

இந்துமதி - அஜித்குமார் இருவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது. எனவே இந்த காதல் விவகாரம் வீட்டிற்கு தெரிய வர ‌ இதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனால் கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவருடன் இந்துமதியை திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்த தம்பதிக்கு தற்போது ஐந்து வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்துமதிக்கும் கணவர் கார்த்திக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வாணியம்பாடியை விட்டு திருப்பத்தூர்  ராஜீவ்காந்தி நகர் பகுதியில் உள்ள அம்மா வீட்டிற்கு வந்துள்ளார் இந்துமதி. இந்த நிலையில் மீண்டும் இந்துமதி மற்றும் அஜித்குமார் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. பின்னர் இருவரும் நன்றாக பேசி வந்த நிலையில் திடீரென இந்துமதி  அஜித் குமாரிடம் பேச மறுத்து விலகியதாக தெரிகிறது.

 married woman has been stabbed by her ex-boyfriend

அதனைத் தொடர்ந்து விரக்தியில் இருந்த அஜித்குமார்  திருப்பத்தூர்   பழைய பேருந்து நிலையம் அருகே அஜித்குமார் ஆட்டோ ஓட்டிச் சென்றபோது இந்துமதி அவ்வழியாக  சென்றுள்ளார். அப்போது அஜித்குமார் இந்துமதியை பார்த்து பேசி உள்ளார். அங்கே இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் அஜித்குமார் ஆத்திரமடைந்து திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து இந்துமதியின் முகம் மற்றும்  உடம்பின் பல்வேறு பகுதிகளில் குத்தியும்,வெட்டியும் விட்டு  தப்பியுள்ளார். அப்போது அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் இந்துமதியை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆட்டோவில் அழைத்துச் சென்றனர். இந்துமதி திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து திருப்பத்தூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அஜித்குமார் திருப்பத்தூர் நகரகாவல் நிலையத்தில் தானாக  சரணடைந்தார்.

Next Story

லாரி ஏறியதால் பெண் தலைமை காவலர் பரிதாபமாக உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Female head constable passed away in lorry collision

வேலூர் மாவட்டம் அகரம் பகுதியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி மனைவி பரிமளா (42) இவர் ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் ஏப்ரல் 17 ஆம் தேதி தேர்தல் பணிக்காக திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப்படையில் நடைபெற்ற கலந்தாய்வில் கலந்து கொண்டு மாலை வீட்டுக்கு புறப்பட்டார்.

திருப்பத்தூரில் இருந்து மாதனூர் வரை பேருந்தில் சென்றுள்ளார். மாதனூரில் இருந்து தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, மாதனூர்- ஒடுகத்தூர் சாலையில் தாகூர் பள்ளி அருகில் ஆட்டோ ஒன்று குறுக்கே வந்ததால் சட்டென்று பிரேக் அடித்துள்ளார். அப்போது பின்னால் உட்கார்ந்து இருந்த பெண் தலைமை காவலர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஒடுகத்தூரில் இருந்து மாதனூர் நோக்கி வந்த லாரி தலைமை காவலர் பரிமளா மீது ஏறி இறங்கியதில் தலை நசுங்கிய நிலையில்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். படுகாயமடைந்த பெண் தலைமை காவலரின் கணவர் தட்சிணாமூர்த்தி மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்து ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பழுதான லோடு ஆட்டோவை சாலையோரம் நிறுத்தி விபத்து ஏற்பட காரணமாக இருந்த ஒர்க் ஷாப் உரிமையாளரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அரசு மருத்துவமனையில் விபத்து குறித்து நேரில் விசாரணை மேற்கொண்டு உயிரிழந்த தலைமை காவலர் பரிமளாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இது காவல்துறையினர் மற்றும் அப்பகுதி மக்கள்  மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.