Skip to main content

சொத்துக்காக கூலிப்படையை ஏவி தந்தையைக் கொன்ற கொடூர மகள்!

Published on 11/05/2022 | Edited on 11/05/2022

 

Woman arrested in her father death case

 

தென்காசி மாவட்டத்தின் இலஞ்சியைச் சேர்ந்தவர் கோட்டைமாடன் (82). கடந்த 4ம் தேதியன்று இவர், தனக்குச் சொந்தமான தோப்பில் கொலை செய்யப்பட்டுக் கிடந்திருக்கிறார். இது குறித்து அவரது 2வது மகள் சந்திரா அளித்த புகாரின் அடிப்படையில், குற்றாலம் போலீசார் உடலைக் கைப்பற்றி, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 


முதற்கட்ட விசாரணையின் போது கொலையுண்ட கோட்டைமாடனின் 3வது மகளான ஸ்ரீதேவி, மூத்த மகளின் கணவரான பரமசிவன் (57), கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த வசந்தகுமார், இலஞ்சியைச் சேர்ந்த மகேஷ் ஆகிய 4 பேரைக் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து, போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டதாவது; கொலையான கோட்டைமாடனுக்கு 3 மகள் உள்ளனர். இவர்களில் மூத்த மகள் மைதீன் பாத் கணவர் பரமசிவன், இரண்டாவது மகள் சந்திரா, மூன்றாவது மகள் ஸ்ரீதேவி, ஆனால் கோட்டைமாடன் தனது 2வது மகள் சந்திராவுடன் வசித்து வந்திருக்கிறார். மேலும் அவருக்குச் சொந்தமாக 1.82 ஏக்கரில் தோப்பும் உள்ளது. அதில் மூன்றில் இரண்டு பகுதியை தனது 2வது மகள் சந்திராவின் மகன் விஜயகுமார் பெயரில் எழுதிவைத்திருக்கிறார். இதற்கு மகள் ஸ்ரீதேவி மற்றும் மூத்த மகளின் கணவர் பரமசிவன் ஆகியோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றனர். இது குறித்து வழக்கறிஞர் மூலம் நோட்டீசும் இவர்கள் அனுப்பியுள்ளனர். மேலும் பரமசிவன் வீட்டில் வேலை செய்து வரும் லோடு ஆட்டோ டிரைவர் சேகர் மூலம் பேசியதில் கூலிப்படையை வைத்து கோட்டைமாடனை கொலை செய்து விடலாம் என்று ஸ்ரீதேவியும், பரமசிவனும் திட்டமிட்டுள்ளனர்.

 

Woman arrested in her father death case

 

இதன் பின் கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த வசந்தகுமார், மற்றும் மகேஷ் இருவரிடமும் ஒரு லட்ச ரூபாய் பேசி அட்வான்ஸாக பதினைந்தாயிரம் கொடுத்துள்ளனர். அதன் பிறகு கூலிப்படையாகச் செயல்பட்ட வசந்தகுமார், மகேஷ் இருவரும் கோட்டைமாடனை கொலை செய்ய இரண்டு முறை முயன்றும் முடியாமல் போகவே கோட்டைமாடனிடம் தோப்பில் உள்ள மரத்தை விலை பேசி வாங்குவது போன்று செட்டப் செய்து வசந்தகுமார் மகேஷ், சேகர் மூவரும் அவரை தோப்பிற்கு வரவழைத்தனர். மரத்தை வெட்டுவது போல போக்குக் காட்டியவர்கள், கோட்டைமாடன் எதிர்பாரத நேரத்தில் திடீரென அவரைக் கம்பால் அடித்துக் கொலை செய்தனர். கம்பால் கழுத்தில் அடித்ததால் வாயிலிருந்து ரத்தம் வருவதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. தடயமின்றி இயற்கையாக இறந்தது போன்று காண்பிப்பதற்காகவே கம்பால் தாக்கியுள்ளனர். ஆனால் ரத்தம் வழிந்ததால் கொலை என்பது தெரிந்துவிட்டது. இது குறித்து அந்தப் பகுதியின் சி.சி.டி.வி. மற்றும் செல் அழைப்புகள் ஆய்வு செய்யப்பட்டன. இந்த சம்பவத்தில் 5 பேரும் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவரவே மூன்றாவது மகள், மூத்த மருமகன், கூலிப்படையாகச் செயல்பட்டு மீதிக் கூலிப்பணத்தைப் பெறவந்த இருவர் உட்பட 4 பேர் கைது செய்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவித்தனர். ஒருவரைப் போலீசார் தேடி வருகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.