Skip to main content

தாண்டவமாடிய ஒற்றை காட்டு யானை; மூன்று உயிரிழப்புகளால் உறைந்த காட்பாடி

Published on 31/08/2023 | Edited on 31/08/2023

 

A wild elephant  three people; kadpadi in fear

 

ஆந்திர மாநிலம் சித்தூரில் காட்டு யானை தாக்கி நேற்று கணவன் மனைவி உயிரிழந்த நிலையில், காட்பாடி அருகே அதே யானை தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இந்த யானை தாக்கியதில் ஆடுகளும் உயிரிழந்ததாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

 

ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியில் சுற்றித் திரிந்து வந்த ஒற்றைக் காட்டு யானை, வெங்கடேசன்-செல்வி ஆகிய இருவரை மிதித்துக் கொன்றது. அதனைத் தொடர்ந்து சித்தூர் மாவட்ட வனத்துறையினர் கும்கி யானை உதவியுடன் யானையைக் காட்டுக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், இன்று தமிழக எல்லைக்குள் நுழைந்த அந்த காட்டு யானை வேலூரை ஒட்டியுள்ள பெரிய போடிநத்தம் பகுதியில் புகுந்தது.

 

இந்நிலையில், வசந்தா மற்றும் அவரது கணவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் உறங்கிக் கொண்டிருந்தபோது, காலை 5 மணியளவில் வெளியே கட்டப்பட்ட ஆடு மாடு உள்ளிட்ட கால்நடைகளின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. உடனே வசந்தா வெளியே வந்து பார்த்த பொழுது காட்டு யானை தும்பிக்கையால் ஆட்டைத் தாக்கியது கண்டு அதிர்ந்தார். வசந்தாவையும் காட்டு யானை தாக்கியுள்ளது. இதில் வசந்தா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அதேபோல் ஆடும் உயிரிழந்துள்ளது.

 

இந்த பகுதி ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு உட்பட்ட ஆற்காடு வனச்சரகப் பகுதி என்பதால் ஆற்காடு வனத்துறையினர் அந்த யானையைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மகிமண்டலம் காப்புக்காடு பகுதியில் தற்போது அந்த யானை இருக்கலாம் என வனத்துறையினர் யூகித்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

சேறும், சகதியுமான சாலை; சீரமைக்க வலியுறுத்தி நாற்று நட்டு போராட்டம்

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

People struggle to repair the mud and muddy road

 

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 48வது வார்டு சின்ன அல்லாபுரம் அம்பேத்கர் நகர், கே.கே. நகர், பனந்தோப்பு ஆகிய பகுதிகளில் 1000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. மாநகரில் உள்ள இந்த குடியிருப்புப் பகுதியில் தெரு விளக்கு, சாலை வசதி, மழைநீா் வடிகால் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத நிலையில், இதுதொடா்பாக பலமுறை வார்டு கவுன்சிலர்களுக்கும், மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையருக்கும் இப்பகுதி மக்கள் பலமுறை முறையிட்டும் அவர்கள் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.

 

இந்நிலையில், கடந்த சில நாட்களாகப் பெய்த மழையால் குடியிருப்புக்குச் செல்லும் அனைத்துச் சாலைகளும் சேறும் சகதியுமாகவும், குண்டும் குழியுமாகவும் மாறி ஆங்காங்கே குளம் போல் மழை நீர் தேங்கிக் கிடக்கிறது. இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்குவதும், நடந்து செல்லும் பலரும் சாலையில் வழுக்கி விழுந்து காயமடைவதும் எனத் தொடர்கதையாக ஆகிறது.

 

இதனால், ஆத்திரமடைந்த இப்பகுதி பெண்கள், ஆண்கள் என 30க்கும் மேற்பட்டவர்கள் முக்கிய சாலையில் சேறும் சகதியுமான இடத்தில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் விரைந்து சாலை அமைத்துத் தரும்படி அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

குள்ளநரி கறி விருந்து; கம்பி எண்ணும் இளைஞர்! 

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

Youth arrested under Wildlife Protection Act in trichy

 

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், வயலூர் அருகே இனாம்புலியூர் கிராமத்தில் குள்ளநரி தோல் விற்பனை செய்வதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

 

அதனைத் தொடர்ந்து திருச்சி மண்டல தலைமை வனப் பாதுகாவலர் சதீஷின் வழிகாட்டுதலின் படியும், திருச்சி மாவட்ட வன அலுவலர் சுமேஷ் சோமன் உத்தரவின் படியும், திருச்சி வனச் சரக அலுவலர் கோபிநாத் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

 

இத்தனிப்படையினர், கடந்த நவம்பர் 29 அன்று இனாம்புலியூர் கிராம தெற்கு மேட்டுத் தெருவைச் சேர்ந்த சி. லட்சுமணன் என்பவரின் மகன் ல. அய்யர் (26) என்பவரது வீட்டை சோதனை செய்தனர். அப்போது குள்ளநரியின் தோல் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது  கண்டுபிடிக்கப்பட்டது. 

 

இது குறித்து அய்யரிடம் நடத்திய விசாரணையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக இனாம்புலியூர் கிராம காட்டுப் பகுதியில் வேட்டை நாயை வைத்து குள்ளநரியை வேட்டையாடி மாமிசத்தை சாப்பிட்டு, தோலை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. 

 

அதனைத் தொடர்ந்து அய்யர் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அய்யரை திருச்சி குற்றவியல் நீதிமன்ற நடுவர் எண் 5 முன்பு ஆஜர்படுத்தினர். நீதிமன்றம் அவரை 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து அய்யர், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்