Skip to main content

சோளப் பயிருக்கு வேலி போட்ட உரிமையாளர்; திடீரென புகுந்த காட்டு யானை - பதை பதைக்கும் சிசிடிவி காட்சி

Published on 22/11/2022 | Edited on 22/11/2022

 

 wild elephant entering town CCTV footage viral

 

கோவை மாவட்டம் துடியலூர் அடுத்துள்ள வரப்பாளையம், பொன்னூத்து போன்ற கிராமப் பகுதிகள் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. அது மட்டுமல்லாமல், கேரள வனப்பகுதியை ஒட்டியுள்ள இந்தப் பகுதிகளில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகளவில் காணப்படும் எனக் கூறப்படுகிறது. இதில் யானைகள் இரவு நேரங்களில் உணவிற்காக வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய தோட்டங்களிலும், குடியிருப்புப் பகுதியிலும் புகுந்து வருவது வழக்கமான ஒன்றாகும்.

 

இந்நிலையில், கடந்த 18 ஆம் தேதி அதிகாலை 5 மணியளவில் வரப்பாளையம் கிராமத்திற்குள் காட்டு யானைகள் புகுந்ததாக அப்பகுதி விவசாயிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையறிந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் ராமசாமி என்பவர் தனது தோட்டத்தில் சோளம் பயிரிடப்பட்டிருந்ததால் அதனைப் பாதுகாக்க வீட்டு வாசலில் மின் வேலிகள் அமைத்துக் கொண்டிருந்தார். அவை செயல்படுகிறதா எனத் தெரிந்துகொள்ள வீட்டின் முன் பகுதியில் நின்றுகொண்டு அந்த மின் வேலிகளைச் சோதனை செய்ய முயன்றுள்ளார்.

 

அப்போது, எதிர்பாராத சமயத்தில் அவ்வழியாக திடீரென வந்த காட்டு யானை ராமசாமியைத் தாக்க வந்துள்ளது. பின்னர், காட்டு யானையைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ராமசாமி, தட்டுத் தடுமாறி வீட்டிற்குள் ஓடி வந்தார். அதன்பிறகு, ராமசாமியின் அலறல் சத்தம் கேட்டு வீட்டுக்குள்ளிருந்து ஓடி வந்த நபர் பட்டாசு வெடித்து யானையை விரட்டினார். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சோசியல் மீடியாவில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில் ''நாள்தோறும் காட்டு யானைகள் எங்கள் ஊருக்குள் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்தி வருகிறது. வனப்பகுதியிலிருந்து வெளியே வரும் காட்டு யானைகளால் எங்களது வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்படுவதாக” அப்பகுதி விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

யானை துரத்தி வந்ததில் ஆடு மேய்க்கும் தொழிலாளி கீழே விழுந்து படுகாயம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 goat herdsman fell down after being chased by an elephant

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சுட்ட குண்டா, இருளர் வட்டம் பகுதியை சேர்ந்தவர் சின்னதுரை (40) இவர் 20க்கும் மேற்பட்ட ஆடு மற்றும் மாடுகளை வைத்து வனப்பகுதியை  ஒட்டியுள்ள விவசாய நிலம் மற்றும் வனப்பகுதியில் தினமும் மேய்த்து வந்துள்ளார். வழக்கம் போல் இன்று ஆடு மாடுகளை வனப்பகுதிக்கு ஓட்டி சென்ற அவர் தமிழக ஆந்திர எல்லையான சுட்டகுண்டாவிலிருந்து பெத்தூர்  செல்லும்  சுனை என்ற வனப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது யானை துரத்தி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்து ஓட்டம் பிடித்த அவர் கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார்.

பின்னர் தனது  வீட்டிற்கு செல்போன் மூலம் தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து அவரது குடும்பத்தினர் வனத்துறை மற்றும் உமராபாத் காவல் துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் காயமடைந்த அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வரப்பட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கால் மற்றும் முதுகு பகுதியில் ஏற்பட்டுள்ள காயத்திற்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் .

மேலும் ஆம்பூர் வனச்சரக அலுவலர் பாபு மற்றும் உமராபாத் காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Next Story

வெள்ளியங்கிரி மலை ஏறிய இளைஞருக்கு நேர்ந்த துயரம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tragedy befell the young man who climbed the Velliangiri mountain

கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது டிரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர்.

மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர். இந்நிலையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறி சாமி தரிசனம் செய்துவிட்டு, கீழே இறங்கியபோது 7 வது மலையில் திருப்பூரை சேர்ந்த வீரக்குமார் (வயது 31) என்பவர் கடந்த 18 ஆம் தேதி தவறி விழுந்தார். இதனால் அவரின் கை மற்றும் வயிற்றுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

உடல்நலக் குறைவால் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய 7 பேர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக் உயர்ந்துள்ளது. முன்னதாக சித்ரா பவுர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களை ட்ரோன் மூலம் கண்காணிக்க வனத்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது எனவும், கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் காட்டுத் தீயை கண்காணிக்கவும் ட்ரோன்களை பயன்படுத்த வனத்துறை முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.