Skip to main content

கணவனின் திருமணத்தை மீறிய உறவைக் கண்டித்த மனைவி; அடுத்து நடந்த சோகம்!

Published on 20/07/2024 | Edited on 20/07/2024
A wife who condemned her husband's adulterous relationship

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (32). இவர் எலெஜ்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், மணிகண்டனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

அவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில், திருமணத்தை மீறிய உறவாக மாறியது. இந்த விவகாரம், மணிகண்டனின் குடும்பத்துக்கு தெரியவர, தனது பெண் தோழியோடு எடப்பாடி அருகே வளையசெட்டியூர் பகுதியில் வசித்து வந்துள்ளார். இதனிடையே, தனது கணவர் காணாததைக் கண்டு அதிர்ச்சியடைந்த மணிகண்டனின் மனைவி மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். 

பின்னர், மணிகண்டன் வளையசெட்டியூர் பகுதியில் இருப்பதை அறிந்த அவரது மனைவி அந்த இடத்துக்கு சென்று மணிகண்டனின் தகாத உறவைக் கண்டித்ததோடு மட்டுமல்லாமல் தன்னோடு வரும்படி அழைத்துள்ளார். இதில் கோபமடைந்த மணிகண்டன் வீட்டை விட்டு வெளியேறி அருகே உள்ள மதுபானக் கடை அருகில் விஷம் குடித்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த உறவினர்கள், மணிகண்டனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவன் வைத்திருந்த தகாத உறவை மனைவி கண்டித்ததால், எலெக்ட்ரீசியன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்