Skip to main content

தமிழகத்தில் பரவலாக கொட்டித்தீர்க்கும் மழை

Published on 18/09/2023 | Edited on 18/09/2023

 

Widespread rain in Tamil Nadu

 

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பொழிந்து வருகிறது. குறிப்பாக காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பொழிந்து வருகிறது. காஞ்சிபுரத்தில் ஓரிக்கை, செவிலிமேடு, ஏனாத்தூர், அய்யம்பேட்டை, வாலாஜாபாத், குருவிமலை ஆகிய பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. அதே போல் நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான முதலைப்பட்டி, நல்லிபாளையம், வகுரம்பட்டி பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. திருச்சி மாவட்டம் மணப்பாறை நகரம், பொய்கைபட்டி, கல்பாளையம்தான்பட்டி ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பொழிந்து வருகிறது.

 

செங்கல்பட்டு மாவட்டம் பரனுர், மகேந்திரா சிட்டி, திம்மாவரம், பாலூர், வேண்பாக்கம், வல்லம், ஆலப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. மதுரையில் அண்ணாநகர், பெரியார் பேருந்து நிலையம், கோரிப்பாளையம், மேலூர், அழகர் கோவில், வல்லாளப்பட்டி, மேலவளவு, தும்பைபட்டி, சிட்டம்பட்டி, வெள்ளரிப்பட்டி, திருப்பரங்குன்றம், அவனியாபுரம், வில்லாபுரம், சிந்தாமணி, சாமநத்தம், பனையூர் பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. தென்காசியில் குற்றாலம், செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. சென்னையில் தி.நகர், மேற்கு மாம்பலம், கோடம்பாக்கம், கே.கே.நகர், வடபழனி, ஆலந்தூர், நந்தனம், அசோக் நகர், ஈக்காட்டுதாங்கல், எம்.ஆர்.சி.நகர், பட்டினம்பாக்கம், மந்தைவெளி, மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு’ - வானிலை மையம் அறிவிப்பு

Published on 10/12/2023 | Edited on 10/12/2023
Chance of rain in 8 districts Meteorological Department Notification

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (21.10.2023) தொடங்கியதிலிருந்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

அதே சமயம் தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சென்னை உள்ளிட்ட மழை பாதித்த இடங்களில் வெள்ள நீர் வெளியேற்றப்பட்டு, பல இடங்களில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்லத் திரும்பி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நீலகிரி, ராமநாதபுரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு!

Published on 10/12/2023 | Edited on 10/12/2023
Chance of heavy rain in 4 districts of Tamil Nadu

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சென்னை உள்ளிட்ட மழை பாதித்த இடங்களில் வெள்ள நீர் வெளியேற்றப்பட்டு, பல இடங்களில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்லத் திரும்பி வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள 4 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ராமநாதபுரம், தூத்துகுடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னையில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.