Skip to main content

அரசு நிவாரண பொருட்கள் கிடைப்பதில் காலதாமதம் ஏன்? வேதனையில் மக்கள்!! 

Published on 19/06/2021 | Edited on 19/06/2021
Why the delay in getting government relief items? People in pain

 

தமிழக முதல்வர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றுக்கொண்டவுடன் கரோனா நிவாரண நிதியாக நான்காயிரம் ரூபாய் பணம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என அறிவித்தார். அதன்படி கடந்த மாதம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனா நிவாரண நிதியாக முதல் தவணை 2000ரூ வழங்கப்பட்டது. இரண்டாவது தவணை தொகை 2000 ரூபாய் பணம் அதனுடன் குளியல் சோப், துணி சோப்பு, டீ தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள், புளி, கடுகு, சீரகம், கடலைப்பருப்பு, சர்க்கரை, கோதுமை, உப்பு, ரவை, உளுந்து ஆகிய 14 பொருட்கள் அடங்கிய தொகுப்பு பை ஒன்றும் வழங்கப்படும் என்று அறிவித்தார். கடந்த 15ஆம் தேதி முதல் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவித்ததோடு சென்னையில் முன்கூட்டியே அதை துவக்கி வைத்தார்.

 

முதல்வர் பொதுமக்கள் மிகுந்த ஆவலோடு கரோனா நோய் பாதிப்பு காரணமாக வேலை வாய்ப்பின்றி, வருமானமின்றி தவித்து வரும் இந்த நேரத்தில் அரசு வழங்கும் இந்தப் பணமும் மளிகைப் பொருட்களும் மிகவும் உதவியாக இருக்கும் என்று ஆவலோடு எதிர்நோக்கி காத்து இருந்தனர். தமிழகத்தில் பரவலாக பணமும் மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கப்பட்டது. ஆனால் கடலூர் மாவட்டத்தில் இரண்டாவது தவணையாக பணம் 2000 ரூபாய் மட்டுமே அனைத்து குடும்ப அட்டைதாரருக்கும் வழங்கப்பட்டது. பெரும்பாலான ரேஷன் கடைகளில் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புபை வழங்கப்படவில்லை. மாவட்டத்தில் 1420 ரேஷன் கடைகள் செயல்படுகின்றன. இந்தக் கடைகள் மூலம்  ஏழு லட்சத்து 48 ஆயிரம் ரேஷன் கார்டுகளுக்கு  அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி அரசு அறிவித்த படி 7 லட்சத்து 48 ஆயிரம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா ஒரு மளிகை பொருட்கள் அடங்கியதொகுப்புபை வழங்கப்பட வேண்டும்.

 

Why the delay in getting government relief items? People in pain

 

ஆனால் இதுவரையில் சுமார் இரண்டரை லட்சம் பைகள் மட்டுமே கடைகளுக்கு வந்துள்ளன. சில கடைகளில் முழுமையான குடும்ப அட்டைதாரர்களுக்கு பைகள் முழுமையாக வழங்கப்பட்டுள்ளன. 2000 பணத்துடன்  முழுமையாக பைகள் வராத பாதிக்கு மேற்பட்ட கடைகளில் சுத்தமாக  பைகள் வந்து சேரவில்லை. பல்வேறு ஊர்களில் தொகுப்பு பை வழங்குவதுண்டு. மாவட்டத்தில் உள்ள கிராம மக்கள் ரேஷன் கடை ஊழியர்களிடம் சென்று மளிகை பொருட்கள் பைகளை ஏன் தரவில்லை? நீங்கள் வைத்துக் கொண்டு கொடுக்க மறுக்கிறீர்களா? அதிகாரிகளிடம் புகார் செய்வோம் என்று கோபத்துடன் கேள்வி கேட்டு வருகின்றனர். ரேஷன் கடை ஊழியர்கள் பொறுமையாக அரசிடமிருந்து எங்களுக்கு இன்னும் பைகள் வந்து சேரவில்லை வந்ததும் அனைவருக்கும் தலா ஒரு பை உறுதியாக வழங்கப்படும் என்று ரேஷன் கார்டுதாரர்களிடம் பதில் கூறி சமாளித்து வருகிறார்கள். மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு பை கடைகளுக்கு வந்து சேர்வதில் ஏன் கால தாமதம் என விசாரித்தபோது அரசு மளிகை பொருட்கள் தொகுப்பு தயாரித்துக் கொடுக்கும் படி 2.3. கம்பெனிகளுக்கு ஒப்பந்தம் செய்துள்ளதாம்.

 

அந்த கம்பெனிகளில் இருந்து தொகுப்பு பைகள் தயாரித்து அனுப்புவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளதாக சில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரே நேரத்தில் உதவித் தொகையையும் தொகுப்பு பையையும் வழங்கினால் எங்களுக்கு வசதியாக இருக்கும் பணம் வாங்குவதற்கு பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து வாங்குகிறோம் இன்னும் ஒரு முறை தொகுப்பு பை வாங்குவதற்காக பல மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இது எங்களுக்கு கால விரயத்தை உண்டாக்குகிறது என வேதனை தெரிவிக்கிறார்கள். எனவே தவணை முறையில் உதவித்தொகை தொகுப்புபை வழங்குவதை தவிர்த்து ஒரே முறையில் சம்பந்தப்பட்ட கார்டுதாரர்களுக்கு தவணைத் தொகையும் மளிகை தொப்பையையும் கிடைக்கச் செய்திருந்தால் மிகவும் பயனாக இருந்திருக்கும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். அரசு மளிகைப் பொருட்களுக்கு டெண்டர் விடும் கம்பெனிகளிடம் குறிப்பிட்ட நாட்களுக்குள் 'முழுமையான பைகளை சப்ளை செய்ய வேண்டும் என்று ஒப்பந்தம் செய்யும்போது  உறுதியாக  கூறியிருக்க வேண்டாமா என்கிறார்கள் பயனாளிகள். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

1857 கி.மீ. சைக்கிள் ஓட்டும் போட்டியில் வென்ற கொரியத் தமிழர்

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
Korean Tamil wins cycling competition

உலகம் முழுவதும் தமிழர்கள் வேலைக்கு சென்றிருக்கிறார்கள். ஆனால், பணிபுரியும் நாட்டில் இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்து, சாதனை புரிபவர்கள் மிகவும் சிலரே இருக்கிறார்கள். அப்படி பல துறைகளிலும் இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் சாதனை புரிந்த தமிழர்களைக் கவுரவிக்க, தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் விழா நடத்தி விருது வழங்குகிறது.

2023 ஆம் ஆண்டுக்கான அயலகத் தமிழர் விருது வழங்கும் விழா 2024 ஜனவரியில், சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது.  மூன்றாம் ஆண்டாக நடைபெற்ற இந்த அயலகத் தமிழர் மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அறிவியல், தொழில், சமூக சேவை, விளையாட்டு என 8 பிரிவுகளின் கீழ் பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்ட 14 அயலகத் தமிழர்களுக்கு விருதுகளை வழங்கினார். இதில் 58 நாடுகளில் இருந்து தமிழ் வம்சாவளியினர், அமைச்சர்கள், கல்வியாளர்கள், கவிஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 218 உலகத் தமிழ்ச் சங்கங்களைச் சேர்ந்த அயலகத் தமிழர்கள் பங்கேற்றனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் விருதுபெற்ற 14 அயலகத் தமிழர்களில், அவர்களில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகேயுள்ள குதிரைகுத்தி கிராமத்தைச் சேர்ந்த முனைவர் குருசாமி ராமன் தனித்த சிறப்புடையவர். இவருக்கு விளையாட்டில் சாதனை புரிந்த தமிழர் பிரிவில், தமிழ்நாடு அரசின் கணியன் பூங்குன்றனார் விருது, தங்கப் பதக்கத்துடன் பாராட்டுப் பத்திரமும் வழங்கப்பட்டது.

Korean Tamil wins cycling competition

முனைவர் குருசாமி ராமன், கொரியாவில் 1857 கிலோமீட்டர் தூரமுள்ள சைக்ளிங் கிராண்ட் ஸ்லாம் போட்டியில் வெற்றிபெற்ற முதல் இந்தியத் தமிழர் என்ற பெருமையைப் பெற்றவர். இதன்மூலம், தமிழ்நாட்டுக்கும், கொரியாவில் வசிக்கும் தமிழர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.குதிரை குத்தி கிராமத்தைச் சேர்ந்த குருசாமி – மாரியம்மாள் தம்பதியின் மகனாக, பின்தங்கிய கிராமத்தில் பிறந்த முனைவர் ராமன் தென் கொரியாவில் உள்ள யெங்ணம் பல்கலைக்கழகத்தில் ஜினோமிக்ஸ் பிரிவில் ஆராய்ச்சியாளராகவும் உதவி பேராசிரியராகவும் தென் கொரியாவில் உள்ள யெங்ணம் பல்கலையில் கடந்த பத்து வருடங்களாக பணிபுரிகிறார். முனைவர் ராமன், மனைவி பொன் அருணா மற்றும் மகள் அதிராவுடன் தென் கொரியாவில் வசித்து வருகிறார்.

Next Story

“பள்ளிவாசல், தர்காக்களுக்கு மானியத் தொகை ரூ.10 கோடியாக உயர்வு” - முதல்வர் அறிவிப்பு

Published on 17/02/2024 | Edited on 17/02/2024
Rs. 10 crore increase in grant to schools, dargahs says CM stalin

சென்னை தலைமை செயலகத்தில் சிறுபான்மையினர் நலன் குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்த பின் பேசிய முதல்வர் ஸ்டாலின், “ஒன்றிய அமைச்சர் ஒருவர் திராவிட மாடல் தான் பிரிவினையை தூண்டுவதாக கூறியிருக்கிறார். எல்லோருக்கும் எல்லாம் என்ற நோக்கத்தில் தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. திராவிட மாடல் பிரிவினையை தூண்டுவதாக கூறுவதைவிட நகைச்சுவை வேறு ஏதும் இருக்க முடியாது. இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க சட்ட இயற்றியது திராவிட மாடல். பள்ளி கல்லூரிகளில் படிக்கும் இஸ்லாமிய பெண்களுக்கான விடுதிகள் திறக்கப்பட்டுள்ளன. இஸ்லாமிய மாணவ மாணவிகளுக்கு தமிழ்நாடு மேம்பாட்டுக் கழகம் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 

பள்ளிவாசல், தர்காக்களுக்கு வழங்கப்படும் மானியத்தொகையை ரூ.10 கோடியாக உயர்த்தப்பட்டது. உலமா ஓய்வூதியம் பெறுவோர் இறந்தால் அவரது குடும்பத்தினருக்கு குடும்பம் ஓய்வூதியம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்களுக்கு ரூ.5.45 கோடி செலவில் மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. திமுக அரசு பதவியேற்றதும் முதல்முறையாக மின் மோட்டார் வசதியுடன் கூடிய ஆயிரம் தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. தமிழ்நாட்டில் இருந்து ஹஜ் பயணம் செய்வோருக்கு ஆண்டுதோறும் நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது” என்றார்.