Skip to main content

உயிருக்கு பயந்து வீடுகளில் ஒளிந்த 30 போலிசாரை காப்பாற்றியது யார்? ஆவேசமாக கேட்கும் ராஜேஸ்வரி

Published on 27/05/2018 | Edited on 27/05/2018
po p[

 

மக்கள் திரள் போராட்டம் நடக்கும் இடங்களுக்கெல்லாம் சென்று கலந்து கொள்வது சமூக செயற்பாட்டாளர்களின் பங்கு.. அப்படித்தான் தோழர் ராஜேஸ்வரியும் 22 ந் தேதி காலை தூத்துக்குடி சென்றுள்ளார். அவர் கண்ட காட்சிகளை நம்மிடம் விவரித்தார்..
  நான்., திருநெல்வேலியில் தங்கியிருந்து அன்று காலை 11 மணிக்கு தூத்துக்குடி போன போது ஆட்சியர் அலுவலகம் கடந்து பாலம் அருகே போராட்ட மக்களை மறித்தார்கள் நானும் அந்த இடத்தில் இறங்கினேன். அந்த மக்களை ஆட்சியர் அலுவலகம் போக வேண்டாம் என்று ஒரு மைதானம் நோக்கி திருப்பினார்கள். ஆனால் மக்கள் திரும்பல. ஆனால் அதற்கு முன்பே பல கிராம மக்கள் வந்த வாகனங்களை ஒரு மைதானம் நோக்கி திருப்பி விட்டிருந்தது தெரிந்தது.


 அங்கிருந்து ஆட்சியர் அலுவலகம் நோக்கி மக்களோடு போனேன். அங்கே முன்னதாகவே ஆட்சியர் அலுவலக மாடியிலும் மரங்களுக்கு பின்னாலும் இருந்து துப்பாக்கி சத்தம் கேட்டததை அறிந்தோம். அதாவது மக்கள் ஆட்சியர் அலுவலகம் போகும் முன்பே காவலர்கள் சிசிடிவி கேமராவை இயங்காமல் செய்துவிட்டு அங்கே தயாராக இருந்திருக்கிறார்கள்.  கல், கட்டை, லத்தி அடியில் மக்கள் சிதறினார்கள். என்னுடன் வந்த பெண்ணுக்கு காயம் ஏற்பட்டது. அவரை மீட்டு தூக்கும் போதும் மறுபடியும் அடி விழுந்தது. மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு மறுபடியும் பாலம் அருகே வந்தோம்.

 

 போலிசார் கட்டை, கல்லை எடுத்து தயாராக நின்று தாக்கினார்கள்.  அங்கு வந்த மக்கள் திரள் பலரை காப்பாற்றியது.

 

அங்கிருந்து திருநெல்வேலி சாலையில் ஒரு வீட்டில் அடைக்கலம் புகுந்தோம்.. தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில்  காவல்துறை தடியடி  நடத்தி மக்களை விரட்டியடித்த போது எங்களுக்கு அடைக்கலம் கொடுத்த இரண்டு வீட்டிற்குள்ளும் போலீஸ்காரனுங்க கையெடுத்து கும்பிட்டு அடைக்கலம் கேட்டதால் கிட்டத்தட்ட 30 பேலீஸ்காரங்களுக்கு அந்த மக்கள் அடைக்கலம் கொடுத்து,  பாதுகாப்பாக வைத்திருந்தார்கள்.  அவர்கள் நினைத்திருந்தால் அராஜகத்திற்கு பதிலடி கொடுத்திருப்பாங்க தானே???

 

நான் அவர்களிடம் இவர்களை ஏன் இங்கு தங்க வச்சீங்கன்னு கேட்டதற்கு, கையெடுத்து கும்பிட்டு கெஞ்சுனாங்க அதான் தங்க வச்சேன்னு அந்த வீட்டுக்காரங்க சொன்னாங்க, அவர்கள் திருச்சி, திருநெல்வேலியில் இருந்து வரவழைக்கப்பட்டவர்கள் அவர்களுக்கு எதுவும் தெரியாதுன்னு கெஞ்சுனாங்க அதான் அடைக்கலம் கொடுத்தேன்னு சொன்னாங்க...

 

அவர்களை அந்த மக்கள் உடம்பில் ஒரு கீறல் இல்லாமல் பாதுகாப்பாக அனுப்பிருக்காங்க, ஆனால் அங்க எங்க மக்களை மனிதாபிமானமில்லாமல் அடிச்சு கொல்றீங்களே மனசாட்சின்னு ஒன்னு இருக்கா? உங்களுக்கும் சேர்த்து தான் அவர்கள் உயிரை விட்டிருக்காங்கன்னு நாங்க சொன்னோம்...  

 

அதில் மூன்று பேர் எங்களுக்கு போலீஸ் வேலையும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம், வேலையை விட்டுவிடப் போறோம் எங்களுக்கு எங்கள் உசுரு தான் முக்கியம்ன்னு சொன்னாங்க... 

 

அதெப்படி உங்க உசுர காப்பாத்திக்க 15 அடி சுவரில் ஏறி குதிச்சு வீட்டுக்குள் ஓடி ஒளிஞ்சீங்க? சுவர் ஏறி குதிச்ச போது உங்களுக்கு அந்த வீட்டுக்காரங்க எல்லோரும் கை கொடுத்து இறக்கி விட்டாங்களே... இதுதான் எங்க மக்களுக்கும் உங்களுக்கும் உள்ள வித்தியாசம்... என்று சொன்ன போது தலைகுனிந்தார்கள் அந்த காவலர்கள். பிறகு போலிஸ் வந்த போது அடைக்கலம் கொடுத்த தம்பதிகளை படம் எடுத்துக் கொண்டு எங்களை காத்த தெய்வம் இவர்கள் என்று சொல்லி சென்றார்கள் என்றார் படபடப்போடு.
 

சார்ந்த செய்திகள்

Next Story

சாத்தான்குளம்... மேலும் 3 காவலர்களை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி...

Published on 20/07/2020 | Edited on 20/07/2020
sathankulam

 

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மேலும் 3 காவலர்களை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அனுமதி கோரிய நிலையில் மூவரையும் வரும் 23-ம் தேதிவரை 3 நாட்கள் காவலில் எடுக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

 

சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகள் ஜெயராஜ், அவர் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் ஊரடங்கின்போது, கூடுதல் நேரம் கடையை திறந்து வைத்திருந்ததாக போலீஸாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர். சாத்தான்குளத்தில் இருந்து கோவில்பட்டிக்கு கொண்டு செல்லப்பட்ட இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

 

நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ போலீஸார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், தலைமை காவலர் முருகன், முதல்நிலை காவலர் முத்துராஜா, சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரை, தலைமை காவலர் சாமிதுரை, முதல் நிலைக் காவலர்கள் வெயில்முத்து, செல்லதுரை, தாமஸ் பிரான்க்ளின் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 பேரை 3 நாட்கள் சிபிஐ போலீஸார் காவலில் எடுத்து விசாரித்தனர்.

 

இந்நிலையில் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில், மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தலைமை காவலர் சாமிதுரை, முதல்நிலை காவலர்கள் செல்லதுரை, வெயில்முத்து ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ முடிவு செய்தது.

 

இதையடுத்து 3 பேரையும் 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிகோரி மதுரை தலைமை குற்றவியல் நடுவர் மன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் இன்று (ஜூலை 20) காலை மனு தாக்கல் செய்தனர்.

 

இந்த மனு நீதிபதி ஹேமந்த்குமார் முன்னிலையில் இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதியின் முன் தலைமை காவலர் சாமிதுரை, முதல்நிலை காவலர்கள் செல்லதுரை, வெயில்முத்து ஆகியோர் ஆஜர்படுத்தப்பட்டனர். 

 

மூவரையும் வரும் 23-ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதியளித்து நீதிபதி உத்தரவிட்டார். ஜூலை 23 மாலை மருத்துவப் பரிசோதனை முடித்து மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி கூறினார். இதனையடுத்து, மூவரும் மருத்துவப் பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

 

 

Next Story

பொய் வழக்கு! 2 பெண் போலீசார் உட்பட 3 போலீசாருக்கு ரூ.30,000 அபராதம்! மனித உரிமை ஆணையம் அதிரடி!

Published on 01/06/2020 | Edited on 01/06/2020
tiruchirappalli  - Policemen - Fined - central bus stand




தொட்டியம் அருகே உள்ள கமலாபுரத்தை சேர்ந்தவர் பிரபு. இவர் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2012ம் ஆண்டு ஜீலை மாதம் 6ம் தேதி இரவு தனது சொந்த ஊர் செல்வதற்காக திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருக்கிறார். அப்போது இரண்டு பெண் போலிஸ் ஏட்டுக்கள் வந்தனர். அவர்கள் பிரபுவிடம் விசாரித்து கொண்டிருந்தனர். 

 

அப்போது விரிவுரையாளர் பெண் போலிசாரின் விசாரணைக்கு பதில் சொல்ல திடீர் என பெண் போலிஸ் “என்ன உட்கார்ந்து கொண்டே பதில் சொல்ற, எழுந்து நிற்க மாட்டியா?” என லத்தியால் அடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதன் பின் அங்கே ரோந்து பணியில் இருந்த அந்த ஏரியா எஸ்.ஐ. பால்ராஜ்யை வரவழைத்து பொதுமக்கள் முன்னிலையில் பயங்கரமாக தாக்கி அவர் மீது ஈவ்டீசிங் வழக்கு பதிவு செய்து அனுப்பி இருக்கிறார்கள்.

 

சம்மந்தம் இல்லாமல் தான் தாக்கப்பட்டதால் கடும் மன உளைச்சக்கு ஆளானார் விரிவுரையாளர் பிரபு. பின்னர் நடந்தது விஷயங்கள் அனைத்தையும் மனம் நொந்து போய் மாநில மனித உரிமை ஆணையத்திற்கு புகார் அளித்தார். இது குறித்து முழுமையாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய மாநகர காவல்துறை ஆணையருக்கு உத்தரவிட்டு இருந்தது.

 

மாநகர காவல் துணை ஆணையர் அளித்த விசாரணை அறிக்கையில் அதிருப்தி அடைந்த மனித உரிமை ஆணையம் தானே முன் வந்து நேரடியாக விசாரணை செய்தது.

 

விசாரணையில் முடிவில் விரிவுரையாளர் பிரபுக்கு 30,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், அந்த தொகையை பிரபுவை தாக்கிய பெண் ஏட்டுக்கள் உமாமகேஸ்வரி, ஹேமலதா, வழக்கு பதிவு செய்த அப்போதைய எஸ்.ஐ. பால்ராஜ் ஆகியோரிடம் இருந்து தலா 10,000 ரூபாய் வீதம் வசூல் செய்ய வேண்டும் என்று மாநில மனித  உரிமை ஆணையர் (பொறுப்பு) ஜெயந்திரன் உத்தரவிட்டார். 

 

போலி வழக்கு தொடர்பாக திருச்சி போலிசாருக்கு 30,000 ரூபாய் அபராதம் கட்டுமாறு தண்டனை கொடுக்கப்பட்டது, போலிசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.