Skip to main content

''எங்க போனாலும் காசு கேட்கிறாங்க'' - கலெக்டர் வாகனத்தின் முன் அமர்ந்து பெண் தர்ணா

Published on 06/02/2023 | Edited on 06/02/2023

 

"Wherever they go, they ask for money" - A woman sat in front of the collector's vehicle

 

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் பெண் ஒருவர் 'எங்கு போனாலும் பணம் கேட்கிறார்கள்; புள்ளைங்கள படிக்க வைக்க முடியல' என அழுது ஆர்ப்பாட்டம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

 

கரூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த நடுத்தர வயது பெண் ஒருவர், அங்கு நிறுத்தப்பட்டிருந்த மாவட்ட ஆட்சியரின் காரின் முன் அமர்ந்து ஆவேசத்துடன் தர்ணாவில் ஈடுபட்டார். அப்பொழுது அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த பெண் போலீசார் அப்பெண்ணை அகற்ற முயன்ற நிலையில் அழுது கதறிய அந்த பெண் கத்திக் கூச்சலிட்டார். அதனால் போலீசாரே என்ன செய்வது என்று தெரியாமல் அமைதியாகி நின்றனர். அதன் பிறகு தலையில் அடித்துக் கொண்டு அழுத அந்த பெண்ணை அழைத்துச் சென்று குடிக்க தண்ணீர் கொடுத்து தேற்றினர்.  

 

தொடர்ந்து பேசிய அந்த பெண்மணி, ''புன்னம்சத்திரம் பெரியரங்கம்பாளையத்தில் இருந்து வரேன். மூணு வருஷத்துக்கு சேர்த்து என்னோட பெரிய பையனுக்கு கல்வி உதவி தொகை 60 ஆயிரம் வந்திருக்கிறது அம்மா நேர்ல வாங்க பேசிக்கலாம் என்று சொன்னார்கள். நேரில் வந்து கேட்டால் அந்த மாதிரி ஒரு திட்டமே இல்லை என்று சாதிக்கிறார்கள். என்னுடைய கணவர் இறந்துவிட்டார். நாங்கள் கலப்பு திருமணம் செய்து கொண்டோம். ஆதரவற்ற விதவை சர்டிபிகேட் இருந்தால் ஆயாம்மா வேலை போட்டு தருவேன் என்றார்கள். அதையும் போட்டுக் கொடுக்கவில்லை. பொறம்போக்கு நிலம் தருகிறேன் என்றார்கள். அதையும் கொடுக்கவில்லை.

 

எனக்கு மருத்துவ பிரச்சனைகள் இருக்கு. நான் நாலு ஆபரேஷன் பண்ணி இருக்கேன். என் பிள்ளைங்க அரசு பள்ளியில் படிக்குது. எங்களுக்கு ஒண்ணுமே கொடுக்க மாட்டேங்கிறாங்க. என்னுடைய பிள்ளைகளை நல்லா படிக்க வைக்கணும்னு ஆசை இருக்கிறது. ஆனால் வசதி இல்லை. எதுவுமே இல்லை என்கிட்ட. எங்க போனாலும் பணம் கேட்கிறார்கள். நான் எங்கே தான் போகட்டும். சாப்பாட்டுக்கே ரேஷன் அரிசி தான் வாங்கி சாப்பிடுறேன். நீங்க எல்லாரும் வந்து ஊர்ப்பக்கம் விசாரிச்சு பாருங்க. எங்க ஊர்க்கார அண்ணா ஒருத்தர்தான், வாம்மா புதுசா நல்ல கலெக்டர் வந்து இருக்காரு. ஒரு தடவை பெட்டிஷன் கொடுத்துட்டு பாக்கலாம்ன்னு கூட்டிட்டு வந்தார். இல்லைன்னா நான் வந்து இருக்க மாட்டேன்'' என அழுது புலம்பினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.