Skip to main content

300 அடி உயரத்திலிருந்து பெயர்ந்து விழுந்த ராட்சத பாறை - இடிபாடுகளில் சிக்கியவர்களின் கதி என்ன? 

Published on 15/05/2022 | Edited on 15/05/2022

 

What is the fate of those trapped in the giant rock fall that shifted from a height of 300 feet?

நெல்லை அருகே கல்குவாரியின் ராட்சத பாறைகள் 300 அடி உயரத்திலிருந்து பெயர்ந்து விழுந்ததால் இடிபாடுகளில் 6 பேர் சிக்கிக் கொண்ட சம்பவம் மாவட்டத்தில் திகிலைக் கிளப்பியுள்ளது.

 

நெல்லை மாவட்டத்தின் முன்னீர்பள்ளம் காவல் லிமிட்டில் வருகிற பொன்னாக்குடி கிராமத்தின் பின்பக்கமுள்ளது அடைமிதிப்பான் குளம். இங்குள்ள குன்றின் கல்குவாரியை எடுத்திருப்பவர் சங்கர். கல்குவாரியின் பாறைகளை வெடிவைத்து தகர்த்து, அதனைக் கிரஸ்ஸர் மூலம் பல சைசிலான ஜல்லிக் கற்கள் தயார் செய்வதுடன் எம்சாண்ட் தயாரிக்கவும், அனுப்பப்படுவதால் அந்தக் குவாரியில் இரவு பகல் என்று தொழிலாளர்கள் பணியிலிருந்திருக்கிறார்கள்.

 

இதனிடையே நேற்று (14/05/2022) வழக்கம் போல் இரவு நேரம் விதிகளை மீறி பாறைகளைப் பிளப்பதற்காக கல்குவாரியில் அடிப்புறத்தின் பல இடங்களில் துளையிட்டு கனமான அளவு வெடி வைத்து தகர்த்திருக்கிறார்கள். வெடியின் தாக்கம் பாறையின் 300 அடி உயரமுள்ள உச்சிப்பகுதி வரை ஊடுருவியிருக்கிறது என போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது. வெடிவைத்த பின்பு இரவு சுமார் 12.00 மணியளவில் சிதறிய பாறைகளின் கற்களை அள்ளி லாரிகளில் லோடு செய்கிற பணியில் மூன்று பெரிய ஹிட்டாச்சிகள் மற்றும் அதனைக் கொண்டு செல்வதற்காக மூன்று லாரிகளும் பணியிலிருந்திருக்கின்றன. 

What is the fate of those trapped in the giant rock fall that shifted from a height of 300 feet?

அதுசமயம் 300 அடி உயரத்திலிருந்து பெரிய பாறை திடீரென்று சரிந்து கீழே பணியிலிருந்த ஹிட்டாச்சிகள் மற்றும் லாரிகளின் மீது விழுந்து அமுக்கியிருக்கிறது. தொடர்ந்து பாறைகள் சரிந்து விழுந்ததில் அவை சிக்கிக் கொண்டன. அதோடு மூன்று ஹிட்டாச்சிகளின் 3 ஆபரேட்டர்கள், மூன்று லாரி டிரைவர்கள் என 6 பேர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனராம். இதுகுறித்த தகவலறிந்த மறுகணம் நடு இரவு 12.30 மணியளவில் மாவட்ட எஸ்.பி.யான சரவணன் முன்னீர்பள்ளம் காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளைத் துரிதப்படுத்தினர்.

 

மாவட்டத்தின் தீயணைப்பு மீட்புப் படையினரும் தீவிரமாகச் செயல்பட்டு இடிபாடுகளுக்கிடையே சிக்கிக் காயமடைந்த முருகன், விஜய் 2 பேரை மீட்டனர். மற்றவர்களை மீட்பதற்கு விழுந்த பாறைகள் தடையாய் இருப்பதால் அதனை அப்புறப்படுத்த தூத்துக்குடியிலிருந்து ராட்சத இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. உயரத்திலிருந்து பாறைகள் தொடர்ந்து விழுந்துகொண்டிருப்பதால் மீட்பதில் சிரமம் ஏற்பட்டு தற்காலிகமாக மீட்பு பணிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. மேலும் இடிபாடுகளில் சிக்கியவர்களில் மூன்று பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அரக்கோணத்திலிருந்து ஆய்வாளர் விவேக் ஸ்ரீவாஸ்தவா தலைமையிலான தேசிய மீட்புப் படையினர் வந்து கொண்டிருக்கின்றனர். விரைவில் மீட்டுவிடுவோம் என்கின்றனர் ஸ்பாட்டிலுள்ள காவல் துறை அதிகாரிகள்.

 

விதிப்படி, ஒவ்வொரு 15 மீட்டர் ஆழத்திற்கும் பாதை போன்ற ரேம்ப் அமைக்க வேண்டும். அப்படி அமைக்கும்பட்சத்தில் திடீரென்று விழுகிற பாறைகள் அதன் மேல் விழுந்து விடும். தொழிலாளர்களுக்கும் பாதுகாப்பாக இருக்கும். தொழிலாளர்களும் தப்பித்துவிடுவார்கள். ஆனால் அப்படி அமைக்கப்படாமல் விதியை மீறி 300 அடிக்கு கீழே போயிருக்கிறார்கள். இதற்கு யார் அனுமதித்தார்கள். மேலும் தற்போது மைன்ஸ் துறையினர் குவாரிகளை ஆய்வு செய்ய வேண்டிய காலமிது. அவர்கள் முறைப்படி ஆய்வு செய்திருந்தால் இத்தனை பெரிய விபத்து ஏற்பட்டிருக்காது என்கிறார்கள் ஏரியாவாசிகள்.

What is the fate of those trapped in the giant rock fall that shifted from a height of 300 feet?

இந்த விபத்து பற்றி அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காயம்பட்ட இருவருக்கும் உடனடியாக தலா ரூபாய் 1 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார். 

 

கல்குவாரிகளின் விதிமீறலே விபத்திற்கு காரணம் என்கிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.