Skip to main content

''நீ என்ன தொடாத... நீதான் என்ன சாவ சொன்ன...'' -நீதிமன்ற வாசலில் கைதியின் அலப்பறை!

Published on 24/06/2022 | Edited on 24/06/2022

 

'' What did you touch ... what did you say to  ... '' - Prisoner's at the court door!

 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கைதி ஒருவர் விசாரணை முடிந்து காவல் வாகனத்தில் ஏற மறுத்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

 

கடந்த வாரம் விசாரணைக் கைதி ஒருவர் போலீசாரிடம் 'டீ வாங்கி தரியா... இறங்கி ஓடி விடவா... முடிந்தால் என்னை சுட்டுப் பாருங்க'' என குதர்க்கமாக வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

 

கன்னியாகுமரி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பது வழக்கம். அதன்படி அண்மையில் போலீஸ் வேனில் கைதிகளை ஏற்றிக்கொண்டு ஆயுதப்படை காவலர்கள் பாதுகாப்புடன் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருந்தனர். அந்த கைதிகள் கூட்டத்திலிருந்த போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட திங்கள்சந்தை பகுதியைச் சேர்ந்த தனிஷ் என்ற இளைஞர், நடுவழியில் போலீசாரிடம் டீ வாங்கி கொடுக்க சொல்லி  அடம் பிடித்துள்ளார். அப்பொழுது போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த இளைஞர், போலீசார் வைத்திருந்த துப்பாக்கியை தொட்டு ''இந்த துப்பாக்கியில் குண்டு இருக்கா அண்ணா... லோடு பண்ணிருக்கியா... நாவேணா வண்டியை விட்டு இறங்கி ஓடுறேன் முடிஞ்சா என்ன சுடுங்க...'' என அலப்பறையில்  ஈடுபட்டான். ஆனால் பாதுகாப்பு கருதி நடுவழியில் வண்டியை நிறுத்தி டீ குடிக்க முடியாது என்று தெரிவித்த போலீசார், சிறைக் கைதியின் அலப்பறைக்கு எதிர்ப்பும் தெரிவிக்காமல் அவனைச் சமாதானப்படுத்த முயன்றனர். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியது.

 

police

 

இந்நிலையில் அதே கைதி கடந்த 18 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் காவல் வாகனத்தில் ஏற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சிகள் வெளியாகியுள்ளது. அந்த காணொளியில் காவல் வாகனத்தின் சக்கரத்தில் தலையை மோதி காயம் ஏற்படுத்திக்கொண்ட கைதி தனிஷ்,  ''நீங்க தான் அண்ணா இதுக்கு காரணமே...'' எனக்கூற போலீசார் ''அட வாடா...'' என கையை பிடித்து எழுப்ப,  ''அண்ணா நீ என்ன தொடாத... நீதான் என்ன சாவுன்னு சொன்ன.... நீ தொட்டா பெரிய பாவம் அண்ணா...'' என அலப்பறையில் ஈடுபட்டான். அதனைத்தொடர்ந்து போலீசார் சமாதானப்படுத்தி கைதி தனிஷை அழைத்துச் சென்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

'பஞ்சுமிட்டாய் போல தடை செய்யப்படுமா நைட்ரஜன் பிஸ்கட்?-அதிர்ச்சியை ஏற்படுத்திய சிறுவனின் வீடியோ

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
'Will Nitrogen Biscuits be Banned Like Cotton Candy'- Boy's Shocking Video

நைட்ரஜன் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் ஒருவன் துடிதுடிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் நைட்ரஜன்  பிஸ்கட்டுக்கு எதிராக பலரும் குரல் எழுப்பி வருகின்றனர்.

அண்மையில் சமூக வலைத்தளத்தில் வெளியான வீடியோ ஒன்றில் நைட்ரஜன் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் ஒருவன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்தான். இது தொடர்பான தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதில் அந்தச் சிறுவன் உயிரிழந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

திரவ நைட்ரஜனை பிஸ்கட் உடன் சேர்த்து சாப்பிடும் பொழுது புகைப்பது போன்று வாய் மற்றும் மூக்கில் இருந்து புகை வரும். இதை ஒரு ஃபன் ஆன உணவாக பல்வேறு பொது இடங்களில் மற்றும் சுற்றுலா தளங்களில் விற்கப்பட்டு வருகிறது. கோவை, திருச்சி, சென்னை தீவுத் திடல் உள்ளிட்ட பகுதிகளில் நடக்கும் பொருட்காட்சிகளில் நைட்ரஜன் பிஸ்கட் விற்கப்படுவதைப் பார்க்க முடிகிறது. திரவ நிலையில் மைனஸ் 196 செல்சியஸ் வெப்பநிலையில் இருக்கும் திரவ நைட்ரஜன் பிஸ்கட்டில் சேர்த்து பயன்படுத்துவது ஆபத்து என்கின்றனர் உணவுத்துறை வல்லுநர்கள்.

பொதுவாக உணவுப் பொருள்களை உறைய வைக்கவே ஆண்டாண்டு காலமாக திரவ நைட்ரஜன் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உணவுப் பொருட்களைப் பதப்படுத்துவதற்கு திரவ நைட்ரஜன் பயன்படுத்தப்பட்டாலும் அது ஆபத்து நிறைந்ததாகவும் உள்ளது. ஒரே நொடியில் பொருட்களை உறைய வைக்கும் தன்மை கொண்டது. திரவ நைட்ரஜனை சிறிது திரவ நிலையில் எடுத்துக் கொண்டாலும் வயிற்றில் சென்று திரவ நைட்ரஜன் எவாபரேஷன் நடைபெற்று கடும் உடல் உபாதை ஏற்படுத்துவதோடு மரணத்திற்கும் இட்டுச் செல்லும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

குறைந்த அளவில் திரவ நைட்ரஜனை குறைவாக பயன்படுத்தும் பொழுது எந்த ஆபத்தும் இருக்காது எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் வெளியாகிய  இந்த வீடியோ பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. அண்மையில் பஞ்சு மிட்டாயில் உள்ள நிறமி வேதிப்பொருள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என உறுதி செய்யப்பட்ட நிலையில் அதனை அரசு தடை செய்திருந்தது குறிப்பிடத் தகுந்தது.