Skip to main content

அமைச்சருக்கு இரட்டை வரவேற்பு! இது அதிமுக கூத்து..!

Published on 11/11/2018 | Edited on 13/11/2018

 

ve

     

விளாத்திகுளம் இடைத் தேர்தலில் சீட் பெறுவதில் மாஜி எம்.எல்.ஏக்கள் மார்க்கண்டேயனும், சின்னப்பனும் காய் நகர்த்தி வருவதையும், மார்க்கண்டேயனுக்கு எதிராக அமைச்சர் கடம்பூர் ராஜூ போர்க்கொடி தூக்கி இருப்பதையும் ஏற்கனவே நக்கீரனில் சுட்டிக்காட்டி இருந்தோம். இந்த நிலையில் நேற்று (10-11-2018) நடைபெற்ற தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் அவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் பட்டவர்த்தனமாக வெளிப்பட்டிருக்கிறது.

 

v


    தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டையில் நடைபெற்ற தேர்தல் ஆலோசனை கூட்டத்திற்கு பங்கேற்க மதுரையில் இருந்து காரில் வந்த அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு, புதூர் பாண்டியாபுரம் அருகே உள்ள சுங்கச்சாவடி அருகே, மாவட்ட செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன், அமைச்சர் கடம்பூர் ராஜூ, மாஜி எம்.எல்.ஏக்கள் சின்னப்பன், மோகன் ஆகியோர் வரவேற்பு கொடுத்தனர். சுங்கச்சாவடி வடக்குப்புறம் அமைச்சர் தரப்பின் வரவேற்பை ஏற்றுக் கொண்டு புதுக்கோட்டை நோக்கி சென்ற வேலுமணிக்கு சுங்கச்சாவடியின் தெற்குபுறம் முன்னாள் அமைச்சரும் ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏவுமான சண்முகநாதன், மாஜி எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் ஆகியோர் சால்வை போர்த்தி வரவேற்பு அளித்தனர். 500 மீட்டர் இடைவெளிக்குள் நடந்த இந்த இரட்டை வரவேற்பை வேலுமணியே ரசிக்கவில்லையாம்.


    இதைத் தொடர்ந்து தேர்தல் ஆலோசனைக் கூட்டத்திலும் மார்க்கண்டேயனுக்கும், கடம்பூராருக்கும் இடையே வார்த்தை போர் வெடிக்க ஒரு கட்டத்தில், கூட்டத்தில் இருந்து மார்க்கண்டேயன் வெளியேறிவிட்டாராம். 2 பேரும் அனுசரிச்சுப் போங்கப்பா என்று வேலுமணி அறிவுரை கூறிவிட்டு கோவைக்கு புறப்பட்டு சென்றிருக்கிறார். அதிமுக அணிகள் இணைந்தாலும், இன்னும் மனங்கள் இணையவில்லை என்பது தூத்துக்குடி சம்பவம் ஓர் எடுத்துக்காட்டு.!


 

சார்ந்த செய்திகள்

 

Next Story

'அதிகாரிகள் சரியாக வேலை செய்வதில்லை'-எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு

Published on 06/05/2024 | Edited on 06/05/2024
'Officials are not working properly'-SP Velumani alleges


கோவையில் கடுமையான உள்ள தண்ணீர் தட்டுப்பாட்டை நீக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், ''கோவை மாவட்டத்தில் அவினாசி தொகுதியில் அன்னூர் பிளாக் வருகிறது. பொள்ளாச்சி தொகுதி, வால்பாறை தொகுதி, கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர், சூலூர், கோவை வடக்கு, தெற்கு, சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், மேட்டுப்பாளையம் இப்படி முழுமையாக 12 தொகுதிக்கு கடுமையான குடிநீர் பிரச்சினை இருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்த பொழுது அதிகமான கூட்டுக் குடிநீர் திட்டங்களைக் கொடுத்தோம். கோவையில் மூன்றாவது கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது.

அதனை சரியாக வேகமாக முடித்து இருந்தால் கண்டிப்பாக இன்று இந்தப் பிரச்சனை இருந்திருக்காது. முழுமையாக விவசாயிகளை வைத்து மண்ணெடுக்கப்பட்டது. குளங்கள் தூர்வாரப்பட்டது. டேமில் மண்ணெடுத்து ஸ்டோரேஜ் அதிகம் செய்தோம். நீர் மேலாண்மை திட்டம் அதிகமாக செயல்படுத்தப்பட்டது. ஆனால் இப்பொழுது யாருமே இந்தத் திட்டங்களைக் கண்டு கொள்வதில்லை. வாரம் வாரம் விவசாயிகளின் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தக் கூட்டத்திற்கு பேசுவதோடு சரி எந்த முக்கியத்துவம் இல்லை. கோயம்புத்தூரில் பில்லூர் அணை, சிறுவாணி அணை, ஆழியாறு அணை இந்த மூன்றும் தான் முக்கியமான குடிநீர் ஆதாரம். இந்த அணை எல்லாம் தூர்வாரி இருக்க வேண்டும். ஆனால் இன்று எதுவுமே இல்லை. நகராட்சி, மாநகராட்சி என எந்த அதிகாரிகளுமே சரியாக வேலை செய்வதில்லை''என்றார்.

Next Story

திருச்சி தொகுதி அதிமுக சீட் யாருக்கு? - உச்சத்தில் விஜயபாஸ்கர் - தங்கமணி மோதல்!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024

 

Trichy Constituency ADMK seat for whom? Vijayabaskar - Thangamani conflict at the peak!

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதிமுக கூட்டணியில் திருச்சி தொகுதி யாருக்கு என்ற முட்டல் மோதல்கள் பலமாக உள்ளதாம். தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்றச் சங்கம் ஆர்.வி. பரதன், தனக்கு திருச்சி அல்லது பெரம்பலூர் தொகுதி கொடுத்தால் தமிழ்நாடு முழுவதும் எங்கள் ஆட்கள் கட்சிக்காக வேலை செய்வார்கள் என்று எடப்பாடி கே. பழனிசாமியிடம் கோரிக்கையோடு போக, திருச்சி தொகுதிப் பொறுப்பாளரான மாஜி தங்கமணியும் ஆமோதித்துள்ளார். ஆனால் திருச்சி தொகுதியை கறம்பக்குடி குளந்திரான்பட்டு மணல் கரிகாலனின் சகோதரரான புதுக்கோட்டை மாவட்ட அதிமுக இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் கருப்பையாவுக்கே கொடுக்க வேண்டும் என்று புதுக்கோட்டை வடக்கு மா.செ. விஜயபாஸ்கர் மதியம் வரை எடப்பாடியிடம் வலியுறுத்தி வருகிறார்.

இந்நிலையில் தான், திருச்சியை தங்கள் கூட்டணியில் உள்ள தேமுதிகவுக்கு ஒதுக்குவது வரை போன எடப்பாடி, தேமுதிகவுக்கு தஞ்சை தொகுதியை கொடுத்துவிட்டு திருச்சியை நிலுவையில் வைத்துள்ளார். தொகுதிப் பொறுப்பாளரான தான் பரிந்துரை செய்த வேட்பாளருக்கு சீட் கிடைக்கவிடாமல் தான் பரிந்துரைக்கும் பாசறை கருப்பையாவுக்கு சீட் வாங்க மோதும் விராலிமலை விஜயபாஸ்கரிடம், உங்கள் பொறுப்பு தொகுதியை மட்டும் கவனியுங்கள். என் பொறுப்பு தொகுதிக்குள் வரவேண்டாம் என்று தங்கமணி விராலிமலை விஜயபாஸ்கரிடம் பேசியுள்ளதாகக் கூறப்படுகிறது.

திருச்சி தொகுதி சீட்டுக்காக அதிமுக மாஜிக்களின் மோதல்கள் உச்சத்தில் இருப்பதால் விடியும்போது சீட் யாருக்கு என்று முடிவெடுப்பார் எடப்பாடி என்கிறார்கள் விவரமறிந்த ர.ர.க்கள். பரதனிடம் பேசிய எடப்பாடி, நாளைய விடியல் நல்லதாக இருக்கும் என்ற நம்பிக்கை கூறி இருப்பதாகவும் பேசுகின்றனர். அதே நேரத்தில் மா.செ. விஜயபாஸ்கர், சீட் எனக்குத்தான் வாங்கித் தருவார் நான் தான் வேட்பாளர் என்று கட்சியினரிடம் சொல்லி வாழ்த்துகளையும் பெற்று வருகிறார் பாசறை கருப்பையா.