Skip to main content

திருமண வரவேற்பில் இயற்கை வாழ்வியல்! - ருசியான பயிற்சிப் பட்டறை!

Published on 22/05/2022 | Edited on 22/05/2022

 

hjk


சிவகாசி நண்பரொருவர் “இன்று (22-ஆம் தேதி) ஞாயிற்றுக்கிழமைதானே..  திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றுக்குப் போவோமே.. அது வித்தியாசமான  அனுபவமாக இருக்கும்..” என்று அழைத்தார். உடன் சென்றோம்.   ‘பாரெங்கும் முழங்கட்டும் தமிழிசை’ என்ற வாசகம் தாங்கிய வரவேற்பு  பேனரைக் கடந்து உள்ளே சென்றோம். திருமண வரவேற்பு நிகழ்ச்சி மாதிரியே  தெரியவில்லை. அங்கங்கே ஸ்டால்கள் போட்டிருந்தனர்.  நிகழ்ச்சிக்கு  வந்தவர்கள்,  ஒவ்வொரு ஸ்டாலிலும் நின்று கொடுத்ததை வாங்கிச் சாப்பிட்டனர். ‘நீரிழிவுக்கு துவர்ப்பாகச் சாப்பிடுங்கள்’ எனத்  தென்னங்குருத்தைச் சீவிக் கொடுத்தனர்.  

 

நறுக்கப்பட்ட பப்பாளிப் பழம்  மற்றும்  தர்பூசணித் துண்டுகள், அன்னாசிப் பழச் சீவல்கள், அத்திப்பழங்கள்,  கொழுக்கட்டைகள், மண் குவளையில் மழை நீர், சாத்துக்குடிச்சாறு என விதவிதமாகத் தந்தனர். நர்சரி செடி, மரக்கன்றுகள் எனக் கொடுத்தபடியே  இருந்தனர்.   மணமகனின் தந்தை மாறன்-ஜி என்பவர்,  தாய்வழி இயற்கை உணவகம்  மற்றும் இயற்கை வாழ்வியல் இயக்கத்தை நடத்துபவராம். சிவகாசி சிரிப்பு  மன்றமும் கைகோர்த்து, இத்தனை ஏற்பாடுகளையும் செய்துள்ளது என்றனர்.   இயற்கை உணவுகள் இத்தனையையும் சாப்பிட்ட பலருக்கும்,  அங்கு ஏற்பாடு  செய்திருந்த இரவுச் சிற்றுண்டியைச் சாப்பிடுவதற்கு  வயிற்றில் இடம்  இல்லாமல் போனது. மணமக்களை ஆசீர்வதித்துவிட்டு திரும்பியவர்களின்  கையில் துணிப்பை ஒன்றினைத் தந்தனர். 

 

jk

 

அந்தத் துணிப்பையில், நோட்டு புத்தகம், ஆரோக்கிய வாழ்வுக்கான  விபரங்களை உள்ளடக்கிய புத்தகம், வாயில் எண்ணெய் கொப்பளிப்பதற்கான  சாஷே பாக்கெட்டுகள், நெல்லிக்காய், இஞ்சி, சீரகம், இந்துப்பு அடங்கிய நெல்லி  சுப்பாரி, நீரில்  கண்களைக் கழுவிப் பாதுகாப்பதற்கான குவளை,   வெள்ளரிக்காய், வாழைப்பழம், தேங்காய் மற்றும் மூலிகைப் பல்பொடி எனப்  பலவும் இருந்தன.   ‘பரபரப்பாக இயங்குகிறார்கள் மக்கள். இந்நிகழ்ச்சி வாயிலாக, உடல் நலம்  காப்பதில் சிறிதேனும் விழிப்புணர்வு ஏற்படுத்த முடியுமா என யோசித்தோம்.   இந்த ஏற்பாடுகளைச் செய்தோம்..’ என்றார்,  அந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஒருவர்.   வந்தோமா, சாப்பிட்டோமா, மணமக்களுடன் நின்று போட்டோ எடுத்தோமா, கிளம்பினோமா என்ற அளவிலேயே பெரும்பாலானோர் உள்ள நிலையில்,  இயற்கை வாழ்வியலையும் ருசித்துத்தான் பாருங்களேன் எனப் பயிற்சிப்  பட்டறைபோல், அந்த வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தியது, பாராட்டுதலுக்குரிய  நற்செயலே! 


 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தின் போது மணமகனின் அநாகரிக செயல்; அதிரடி முடிவு எடுத்த மணப்பெண்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
The bride who broke off the wedding in kerala

கேரளா மாநிலம், பத்தனதிட்டம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 32 வயது வாலிபர். இவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், இவருக்கும் அதே மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மேலும், இவர்களது திருமணம் அங்குள்ள ஒரு தேவாலயத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், திருமண நாள் அன்று, மணமகன் மது குடித்துவிட்டு போதையில் மணமேடைக்கு வந்து கொண்டிருந்தார். இதனைக் கண்ட, மணப்பெண் உள்பட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். மேலும், மது போதையில் இருந்த மணமகன், பாதிரியாரிடமும், மணபெண்ணின் உறவினர்களிடம் தகராறு செய்துள்ளார். இதனைக் கண்டு கோபமடைந்த மணப்பெண், திருமணம் வேண்டாம் என்று அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதனால், அவர்களது திருமணம் பாதியில் நின்றுள்ளது.

இந்த சம்பவம் குறித்து, இரு வீட்டாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால், அங்கு கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கண்ட அங்கிருந்தவர்கள், இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், இரு வீட்டாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் மணப்பெண் குடும்பத்தினர், ‘தங்களுக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்றும், திருமணத்திற்கு பெரும் தொகை செலவு செய்ததால், அந்த தொகையை நஷ்ட ஈடாக திரும்ப தர வேண்டும். இல்லையென்றால், மணமகன் மீதும், அவரது உறவினர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தனர்.

அதற்கு, மணப்பெண் குடும்பத்தினர் செலவு செய்த தொகையான 6 லட்ச ரூபாயை நஷ்ட ஈடாக திரும்ப கொடுக்க மணமகனின் குடும்பத்தினர் ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து, அனைவரும், அங்கிருந்து கலைந்து சென்றனர். இதற்கிடையே, மது போதையில் அனைவரிடமும் தகராறு செய்ததற்காக மணமகனின் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story

திருமணத்தை மீறிய உறவு; மனைவியின் வினோத கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்ததால் விபரீத முடிவு!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Disappointing results deny the wife's strange request on extramarital affair in UP

உத்தரப் பிரதேசம் மாநிலம், கோரக்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராம் கோவிந்த். கூலித்தொழிலாளியான ராம் கோவிந்தின் மனைவி கவிதா (34, பெயர் மாற்றப்பட்டுள்ளது). திருமணமான 7 ஆண்டுகள் ஆன இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். 

இந்த நிலையில், கவிதாவுக்கு பக்கத்து ஊரைச் சேர்ந்த இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம், கவிதாவின் கணவர் ராம் கோவிந்துக்கு தெரிய வந்துள்ளது. இதனால், கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

இதில் மனமுடைந்த கவிதா, நேற்று முன் தினம் (03-04-24) தனது வீட்டு முன் உள்ள உயரழுத்த டிரான்ஸ்பார்மர் கம்பத்தில் ஏறியுள்ளார். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள், கவிதாவை கீழே இறங்குமாறு கூறியுள்ளனர். இதற்கு கவிதா மறுப்பு தெரிவித்து கம்பத்தில் ஏறியவாறு இருந்ததால், உடனடியாக இந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், உயரழுத்த டிரான்ஸ்பார்மர் கம்பத்தில் ஏறி அந்த பெண்ணை பத்திரமாக மீட்டனர். இதனை, அங்கிருந்த ஒருவர், தனது செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

இதனையடுத்து, கீழே வந்த கவிதாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், கவிதா தனது ஆண் நண்பரை தனது வீட்டில் தங்க வைக்க அனுமதிக்குமாறு தனது கணவரிடம் கோரிக்கை வைத்துள்ளார். இந்த வினோத கோரிக்கைக்கு ராம் கோவிந்த் மறுப்பு தெரிவித்து சண்டை போட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதன் காரணமாக அந்த பெண், டிரான்ஸ்பார்மர் கம்பத்தில் ஏறி தற்கொலை முயற்சி செய்துள்ளதாக தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.