Skip to main content

வீரப்பன் பற்றிய இணையத்தொடர்; வெளியிடத் தடை விதித்து பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு

Published on 15/03/2023 | Edited on 15/03/2023

 

Web series on Veerappan; Bangalore court orders ban on publication

 

இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் வீரப்பன் குறித்து உருவாக்கிய "வீரப்பன் - கொலைக்கான பசி" என்ற வெப்சீரிஸ்ஸை வெளியிட பெங்களூரு 12வது முதன்மை அமர்வு நீதிமன்றம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

வீரப்பன் குறித்து "வீரப்பன் - கொலைக்கான பசி" என்ற வெப்சீரிஸ்ஸை பெங்களூருவைச் சேர்ந்த இயக்குநரும் தயாரிப்பாளருமான ஏ.எம்.ஆர்.ரமேஷ் உருவாக்கி வருகிறார். இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் உருவாகி வரும் “வீரப்பன் - கொலைக்கான பசி” என்ற வெப்சீரிஸ் வரும் ஜுலை மாதம் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 

இந்நிலையில், நக்கீரன் இதழின் நிறுவனர் மற்றும் தலைமை ஆசிரியர் சார்பில் பெங்களூருவில் உள்ள 12வது முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வெப்சீரிஸ்ஸை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது. 

 

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது நக்கீரன் ஆசிரியர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நடேசன், வீரப்பனை சந்தித்து போராடி ராஜ்குமாரை மீட்டவர் நக்கீரன் ஆசிரியர் என்று நீதிபதியிடம் வாதிட்டார். மேலும், வீரப்பனை பலமுறை சந்தித்து மீட்புப் பணியை நிறைவேற்றியது மட்டுமில்லாமல், வீரப்பன் குறித்து முழு தகவலையும் இந்த உலகுக்கு அளித்தவர் நக்கீரன் ஆசிரியர். “வீரப்பன் - கொலைக்கான பசி” என்ற இணையத் தொடரை உருவாக்கும் ஏ.எம்.ஆர்.ரமேஷ் எனது கட்சிக்காரரைத் தொடர்பு கொண்டு இதுவரை வீரப்பன் குறித்து உண்மையான தகவல்களைப் பெறவில்லை. ஆகையால், ரமேஷ் உருவாக்கி வரும் வீரப்பன் குறித்த இணையத் தொடரில் எனது கட்சிக்காரர் குறித்து பல அவதூறு செய்திகள் இடம்பெற்றுள்ளதா என சந்தேகம் எழுந்துள்ளது. இதன் காரணமாக இந்த இணையத் தொடரை முழுவதுமாக தனது கட்சிக்காரருக்கு திரையிட்டுக் காட்ட வேண்டும். அதன் பிறகே தொடரை வெளியிட வேண்டும். அதுவரை இந்த தொடர் வெளியாக உடனடியாக தடை விதிக்க வேண்டும் என வழக்கறிஞர் நடேசன் வாதிட்டார்.

 

இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனுதாரரான நக்கீரன் ஆசிரியரிடம் எடுக்கப்பட்டுள்ள இணையத் தொடரை முழுவதுமாக (அனைத்து மொழிகளிலும்) திரையிட்டுக் காட்டிய பிறகு வெளியிட வேண்டும் என்றும் அதுவரை இந்த தொடரை வெளியிட தற்காலிக தடை விதிப்பதாகவும் தீர்ப்பு வழங்கினார்.

 

கடந்த பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி சிவசுப்பிரமணியன் என்பவர் வீரப்பன் குறித்து ஆங்கிலத்தில் எழுதிய புத்தகத்தை வெளியிடுவதாக அறிவித்து இருந்த நிலையில், நக்கீரன் ஆசிரியர் தாக்கல் செய்திருந்த மனுவை ஏற்று புத்தகம் வெளியிடத் தடை விதிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சட்டை பட்டன் போடாவிட்டால் அனுமதி இல்லை? மெட்ரோ நிலையத்தில் அரங்கேறிய சம்பவம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
The injustice done to the person who came without buttoning the suit in bangalore metro rail

கர்நாடக மாநிலம், பெங்களூரு நகரில் மெட்ரோ ரயில் சேவைகள் இயங்கி வருகிறது. இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி ராஜாஜி நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில், முதியவர் ஒருவர் அசுத்தமான ஆடைகளுடன் மெட்ரோ ரயிலில் பயணிக்க, முறையான பயணச்சீட்டு வைத்துக் கொண்டு வந்துள்ளார். அப்போது பாதுகாப்பு மேற்பார்வையாளர் ஒருவர், அங்கு வந்திருந்த ரயில் பயணிகளிடம் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது அவர், அசுத்தமான ஆடைகளுடன் முதியவர் வந்ததால், அவரை ரயிலில் பயணிக்க அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனைக் கண்ட சக பயணிகள், பாதுகாப்பு மேற்பார்வையாளரிடம், முறையான பயணச்சீட்டு வைத்திருந்த போதும், முதியவர் ரயிலில் அனுமதிக்கப்படாதது ஏன்? என்று கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வந்தது. மேலும், பெங்களூரு மெட்ரோ ரயில் ஊழியருக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இதனையடுத்து, இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திய பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகம், முதியவரை தடுத்து நிறுத்திய பாதுகாப்பு மேற்பார்வையாளரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது. இந்த நிலையில், அந்த சம்பவத்தை போல் மீண்டும் ஒரு சம்பவம் பெங்களூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் நிகழ்ந்துள்ளது.

கர்நாடக மாநிலம், தொட்டகல்லாசந்திரா மெட்ரோ ரயில் நிலையத்தில் நேற்று (09-04-24) கசங்கிய நிலையில் அணிந்திருந்த சட்டையும், சில பட்டன்கள் போடாமலும் ஒரு நபர் ரயிலுக்காக காத்திருந்தார். அப்போது, அவரைத் தடுத்து நிறுத்திய மெட்ரோ அதிகாரிகள், ‘சட்டையின் பட்டனை தைத்து மாட்டிக்கொண்டு சுத்தமான ஆடை அணிந்துவர வேண்டும், இல்லையென்றால் ரயில் நிலையத்திற்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம்’ என்று கூறியதாகக் கூறப்படுகிறது.

இதனைக் கண்ட அங்கிருந்த சக பயணிகள், அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பயணிகளில் ஒருவர், இந்த சம்பவத்தை தனது செல்போன் மூலம் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு, அங்கு நடந்த சம்பவத்தை பற்றி கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Next Story

150 அடி தேர் கவிழ்ந்து விபத்து; வெளியான பரபரப்பு காட்சி

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
150 feet chariot overturned accident; Exciting scene released

திருவிழாவில் பக்தர்களால் வடம் பிடித்து இழுத்துச் செல்லப்பட்ட 150 அடி உயரம் கொண்ட தேர் சாய்ந்து விழும் பரபரப்பு வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் பகுதியில் உள்ள ஹூஸ்கூர்  என்னும் கிராமத்தில் தேர் திருவிழா இன்று நடைபெற்றது. மூன்று நாட்கள் நடைபெறும் கோவில் திருவிழாவில் இரண்டாவது நாளான இன்று தேர் திருவிழா நடைபெற்றது. சுமார் 150 அடி உயரம் கொண்ட அலங்கரிக்கப்பட்ட தேரை பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக தேர் சாய்ந்து விழுந்தது. தேர் சாய்ந்து விழுவதை சுதாரித்துக்கொண்ட பக்தர்கள் உடனடியாக அங்கிருந்து ஓடியதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆனால் இதில் ஏராளமான பக்தர்கள் காயத்துடன் மீட்கப்பட்டு அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், 150 அடி தேர் சாய்ந்து விழுந்த இந்த விபத்து சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.