Skip to main content

'இவர்களையும் அரசின் கண்ணுக்கு காட்டுவோம்'-வைரமுத்து கருத்து! 

Published on 27/10/2021 | Edited on 27/10/2021

 

 'We will show them to the eyes of the government' - Vairamuthu comment!

 

கடந்த 25.10.2021 அன்று டெல்லியில் நடைபெற்ற 67வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்ததற்காக நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. இதற்கு முன்பு தமிழில் எல்.வி. பிரசாத், நடிகர் சிவாஜி கணேசன், இயக்குநர் கே. பாலச்சந்தர் ஆகியோருக்கு வழங்கப்பட்ட நிலையில், இம்முறை ரஜினிகாந்திற்கு இந்த விருது வழங்கப்பட்டது.

 

உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது பெற்றதற்கு பல்வேறு  கலைஞர்கள், பிரபலங்கள் நடிகர் ரஜினிகாந்திற்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கவிஞர் வைரமுத்து விருதுபெற்ற நடிகர் ரஜினிகாந்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்...

 

 'We will show them to the eyes of the government' - Vairamuthu comment!

 

'பால்கே விருது பெற்றதில்
கலை உலகுக்கே
பெருமை சேர்த்துள்ளார்
நண்பர் ரஜினிகாந்த்.
ஊர்கூடி வாழ்த்துவோம்.

கமல்ஹாசன் - பாரதிராஜா - இளையராஜா என்று
பால்கே விருதுக்குத் 
தகுதிமிக்க பெருங்கலைஞர்கள் தமிழ்நாட்டில் 
மேலும் திகழ்கிறார்கள் என்பதையும் 
ஒன்றிய அரசின்
கண்களுக்குக் காட்டுவோம்' 

என்று நெகிழ்ச்சியாகத் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

“கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்” -  கவிஞர் வைரமுத்து

Published on 13/11/2023 | Edited on 13/11/2023

 

Vairamuthu has demanded that education should be transferred to state list

 

நீட் விலக்கை வலியுறுத்தி 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்திட்டு குடியரசுத் தலைவரிடம் ஒப்படைக்க, கையெழுத்தியக்கத்தை இளைஞரணி செயலாளர் மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த மாதம் துவக்கி வைத்தார். அதன் பணிகள் தற்போது தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடந்து வரும் நிலையில், இன்று கவிஞர் வைரமுத்து நீட் தேர்வுக்கு எதிராக கையொப்பமிட்டுள்ளார்.  

 

அதற்கு முன்பு பேசிய அவர், நீட் என்பது மாணவர்களுக்கு எதிரானது; சமூக நீதிக்கு எதிரானது என்ற கருத்து நகரம் முதல் கிராமம் வரை பரவி இருக்கிறது. நீட் என்பது மாணவர்களுக்கு இழைக்கப்படுகிற கல்வி அநீதி அல்லது எதிர்கால அநீதி என்பதில் உணர்ந்தவர்கள் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. ஏனென்றால் நீட் தேர்வில் எழுதுகிற மாணவனுக்கு எழுதும் தேர்வில் ஒரு  சமநிலை இல்லை; மாணவர்கள் தேர்வு எழுதி எழுதியே தங்களது வாழ்வில் பாதியை கரைத்து விடுகிறார்கள் என்பதை   இந்த சமூகம் நினைவில் கொள்ள வேண்டும். அதனால் நீட்டுக்கு எதிராக; நீட் விலக்கிற்காக நாங்கள் இங்கே கையெழுத்திடுகிறோம்” என்றார். இதனைத் தொடர்ந்து தற்போது அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில்,

 

“‘நீட் விலக்கு நம் இலக்கு’
இயக்கத்தில் நானும் 
கையொப்பமிட்டேன்.

 

“நீட் என்பது 
கல்விபேதமுள்ள தேசத்தில் 
ஒரு சமூக அநீதி என்றேன். 

 

நீட்தேர்வு 
மருத்துவத்தில் 
சேர்த்துவிடுவதற்கு மாறாகச்
சிலரை
மரணத்தில் சேர்த்துவிடுவதை 
அனுமதிக்க முடியாது என்றேன்

 

நீட் விலக்கு மசோதாவில் 
குடியரசுத் தலைவர் 
கையொப்பமிட வேண்டும் மற்றும் 
கல்வியை மாநிலப் பட்டியலுக்கு 
மாற்ற வேண்டும்" என்று 
கோரிக்கை வைத்தேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

இளையராஜாவாக நடிக்கும் தனுஷ் - வேகமெடுக்கும் பயோ-பிக்

 

ilaiyaraaja biopic update

 

இயக்குநர் பால்கி, கடந்த சில மாதங்களுக்கு முன், ஒரு ஆங்கில இணையதளத்தில் இளையராஜா பயோ பிக் உருவாக ஆர்வமாக இருப்பதாக தெரிவித்தார். அந்த பேட்டியில், "இளையராஜாவின் வாழ்க்கை கதையை தனுஷை வைத்து படமாக எடுப்பது என் கனவு. 3 தசாப்தங்களாக இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என 1000 படங்களுக்கு மேல் பின்னணி இசையமைத்த இளையராஜா போல் தனுஷின் முகம் இருக்கும்.

 

லண்டன் பில்ஹார்மோனிக் இசைக்குழுவிற்காக சிம்பொனியை வாசித்த முதல் ஆசிய நபர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. தனுஷ் மேஸ்ட்ரோவாக நடிப்பது எங்கள் இருவருக்குமே கனவு நினைவாகும் தருணம். மேலும் தனுஷின் 40வது பிறந்தநாளில், இந்த படத்தை நான் எடுத்தால், அது தனுஷுக்கு நான் கொடுக்கும் மிகப்பெரிய பரிசாக இருக்கும். ஏனென்றால் என்னைப் போலவே ராஜா சாரின் மிகப்பெரிய ரசிகர்களில் அவரும் ஒருவர்" என்றார். 

 

இந்த நிலையில் இளையராஜா கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு அக்டோபரில் தொடங்கவுள்ளதாகவும் 2025 நடுவில் வெளியாகவுள்ளதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை கனெக்ட் மீடியா மற்றும் மெர்குரி குரூப் என இரண்டு நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கவுள்ளனர். இயக்குநர் பற்றி எந்த விவரமும் குறிப்பிடவில்லை. விரைவில் அது வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.