Skip to main content

‘அறுவடைக்கு ஆட்சியரை அழைக்க இருக்கிறோம்’ - சாலை சீரமைக்க கோரி மக்கள் போராட்டம் 

Published on 13/10/2021 | Edited on 13/10/2021

 

‘We are going to call the collector for the harvest’ - People’s struggle demanding road repairs

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை நகராட்சிக்குட்பட்ட உளுந்தாண்டார்கோவில் நகரில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருக்கின்றன. இக்குடியிருப்பில் இருக்கும் மக்கள் தினசரி வேலை, பள்ளி, கல்லூரி மற்றும் பல அத்தியாவசிய பணிகளுக்கு நகரின் பிரதான சாலையைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. இந்நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக இந்த சாலை, பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்டு, குழாய்கள் புதைத்து மூடப்பட்டது. அதன்பிற்கு இந்தச் சாலையை சீரமைக்காமல், சாலையையும் அமைக்காமல் விடப்பட்டது. சிறு மழை பெய்தாலும், மழை நீரோடு மண்ணும் கலந்து சேறும் சகதியுமாக மாறுகிறது. அந்த சேறு சகதி நிறைந்த சாலையில் நடந்து செல்பவர்களும், வாகனங்களில் செல்பவர்களும் தடுமாறி விழுந்து காயங்கள் ஏற்படுகிறது. அதேபோல், மழையில்லா காலங்களில் புழுதி பறக்கும் சாலை குண்டும் குழியுமாக இருந்துவருகிறது. அதில் தடுமாறி விழுந்தும் பலருக்கு காயங்கள் ஏற்படுகிறது. 

 

‘We are going to call the collector for the harvest’ - People’s struggle demanding road repairs

 

இன்று அப்பகுதி மக்கள் சேறும் சகதியுமாக இருக்கும் சாலையில் நாத்து நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கும் தெரிவித்ததாவது, “இந்தச் சாலையை சீர் செய்யச் சொல்லி பேரூராட்சி செயல் அலுவலரிடம் பலமுறை புகாராகவும் கோரிக்கையாகவும் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது நாற்று நடும் போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறோம். இப்போதும் இந்தச் சாலையை சீரமைப்பது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், அடுத்து தற்போது நடப்பட்டிருக்கும் சம்பா நெற்பயிரின் அறுவடைக்கு மாவட்ட ஆட்சியரை அழைக்கவுள்ளோம்.” இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ளக்குறிச்சி, விழுப்புரம் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024

 

கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் மலையரசன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். திமுக கூட்டணி கட்சிகள், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெய்கணேஷ், சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம், சிபிஐ, சிபிஎம், முஸ்லீம் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் வந்தனர். 

அதேபோல் அதிமுக மாவட்டச் செயலாளரும் வேட்பாளருமான குமரகுரு கூட்டணி கட்சியான தேமுதிக நிர்வாகிகளுடன் சென்று தேர்தல் அதிகாரி ஷரவண்குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். திமுக, அதிமுக கட்சி வேட்பாளர்கள் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்ததால் இரு கட்சி மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் கூட்டம் கள்ளக்குறிச்சி நகரில் நிரம்பி வழிந்தது.

விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் துரை. ரவிக்குமார் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவரும் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பழனியிடம் வழங்கினார். ரவிக்குமாருடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமமூர்த்தி, காங்கிரஸ் கட்சியின் குலாம் மொய்தீன் உட்பட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர். 

அதேபோல் பா.ம.க. வேட்பாளர் முரளி சங்கர் பாமக மற்றும் பிஜேபி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். இவரைத் தொடர்ந்து அதிமுக சார்பில் போட்டியிடும் மாவட்ட மாணவர் அணி செயலாளர் காந்தலவாடி பாக்யராஜ், அதிமுக மாவட்டச் செயலாளர் சண்முகம், தேமுதிக மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோருடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். 

Next Story

ஏமாற்றிய வடமாநில இளைஞர்; தர்ம அடி கொடுத்த பொது மக்கள்

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Two people were arrested for deceiving people by claiming were applying jewelry polish

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள நயினார்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு வாலிபர்கள் பழைய வெள்ளி, தங்கம், கண்ணாடி பொருட்கள், ஆகியவற்றிற்கு பாலிஷ் போட்டு தருவதாக கூறி கிராம மக்களை நம்ப வைத்துள்ளனர். அப்போது ஒரிஜினல் தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்களை பொதுமக்களிடம் வாங்கிய அந்த பீகார் இளைஞர்கள் பாலிஷ் போட்டு கொடுத்துள்ளனர்.

இதை பயன்படுத்திக் கொண்டு அந்த பீகார் இளைஞர்கள் ஒரிஜினல் நகைகளை பாலிஷ் போடுவதாக வாங்கிக் மறைத்து வைத்துக்கொண்டு அதற்கு பதிலாக போலியான நகை மற்றும் பொருட்களை திருப்பிக் கொடுத்துள்ளனர். இந்த விவகாரம் ஊர்மக்களுக்கு தெரியவர இருவரையும் பிடித்து தர்ம அடிகொடுத்து நயினார்பாளையம் வி.ஏ.ஓவுக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த வி.ஏ.ஓ ரஞ்சித் குமார் பீகார் இளைஞர்களிடம் விசாரணை நடத்தினார். 

விசாரணையில், பீகார் மாநிலத்தை சேர்ந்த பப்புகுமார்(31), அமர குமார் யாதவ்(34) இருவரும் தான் என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பாலிஷ் போட வைத்திருந்த உபகரண பொருட்களுடன் இருவரையும் கீழ்குப்பம் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று ஒப்படைத்தனர். பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.