Skip to main content

“அரசியல் மறுமலர்ச்சிக்காகவும் தொடர்ந்து பாடுபட உறுதியேற்போம்” - தமிமுன் அன்சாரி 

Published on 28/02/2022 | Edited on 28/02/2022

 

"We are determined to continue working for the political renaissance" - Tamimun Ansari

 

மனிதநேய ஜனநாயக கட்சியின் ஏழாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு அக்கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “சேவை அரசியலை முன்னிறுத்தி பிப்ரவரி. 28.2016ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மனிதநேய ஜனநாயக கட்சி, ஏழாம் ஆண்டில் பயணத்தை தொடங்குகிறது. அதிகாரமற்ற மக்களை அரசியல்படுத்துவதும், புறக்கணிக்கப்படும்  மக்களுக்கு சுயமரியாதை சிந்தனையை ஊட்டுவதும், வெறுப்பு அரசியலுக்கு மாற்றாக சமூக நீதி அரசியலை கட்டியமைப்பதும்தான் இதன் லட்சியங்களாக இருக்கின்றன.

 

நீதிக்காகவும்; உண்மைக்காகவும், இழப்புகளையும்; எதிர்ப்புகளையும் பற்றி அஞ்சாது செயல்படும் அரசியல் துணிச்சல்தான் எங்களின் விலை மதிக்க முடியாத சொத்தாக இருக்கிறது. சூழ்ச்சிகளும், தந்திரங்களும் பாராட்டுக்குரிய செயல்களாக மாறிப் போய்விட்ட அரசியல் உலகில்;  நேர்மையும், கொள்கையும் படைக் கருவிகளாக இருப்பதில் எமக்கு ஒரு திருப்தி இருக்கிறது.

 

பல்லாயிரக்கணக்கான துடிப்புமிக்க தொண்டர்கள், நிர்வாக கட்டமைப்புகள், உள்ளாட்சி மன்றங்களில் மக்கள் பிரதிநிதிகள், 13 ஆம்புலன்ஸ் சேவை ஊர்திகள், தமிழகமெங்கும் கொடிக்கம்பங்கள், பரவலாக மக்கள் சந்திப்புக்கான அலுவலகங்கள் என உயிரோட்டத்தோடு கடந்த ஆறாண்டு காலமாக; அன்றாடம் பணியாற்றி வருவது மக்களின் நெருக்கத்தையும், நேசத்தையும் பெற்று தந்திருக்கிறது. 

 

ஏழாம் ஆண்டில் பயணத்தை தொடங்கும் இத்தருணத்தில் மனித நேய ஜனநாயக கட்சியின் சொந்தங்களுடன் வாழ்த்துக்களையும், மகிழ்ச்சிகளையும் பகிர்ந்துக் கொள்வதில் பூரிப்படைகிறோம். எங்களுக்கு துணையாக இருந்து வரும் பொதுமக்கள், அரசியலாளர்கள், ஊடகத்துறையினர், சமூகநீதியாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், பல்துறை அதிகாரிகள் என அனைவருக்கும் நன்றிகளை தெரிவிப்பதுடன், தொடர்ந்து பேராதரவை தருமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

 

பிப்ரவரி 28,2022 தேதியை 'மஜக கொடி நாள்' என அறிவித்து மனிதநேய சொந்தங்கள் தமிழகமெங்கும் கட்சி கொடிகளை ஏற்றிடுமாறு அறிவுறுத்தியுள்ளோம். இந்நாளில் ஃபாசிசம், பயங்கரவாதம், வன்முறை, ஒடுக்குமுறை ஆகியவற்றுக்கு எதிராகவும், அரசியல் மறுமலர்ச்சிக்காகவும் தொடர்ந்து பாடுபட உறுதியேற்போம் என கேட்டுக் கொள்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஆப்பிரிக்கா வானத்தின் நட்சத்திரம் விழுந்தது... யூசுப் அல் கர்ளாவி மரணம்” - தமிமுன் அன்சாரி 

Published on 27/09/2022 | Edited on 27/09/2022

 

Yusuf Al Garlawi tamimun ansari

 

ஆப்பிரிக்கா தந்த மேதைகளில் ஒருவரும், பன்னாட்டு அறிஞருமான யூசுப் அல்-கர்ளாவி (96) அவர்கள் இன்று மரணமடைந்தார். அவரது இழப்பு ஆழ்ந்த துயரத்தை தருகிறது என்று மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி இரங்கல் தெரிவித்துள்ளார். 

 

இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது; “ஆப்பிரிக்கா தந்த மேதைகளில் ஒருவரும், பன்னாட்டு அறிஞருமான யூசுப் அல்-கர்ளாவி (96) அவர்கள் இன்று மரணமடைந்தார் என்ற செய்தி ஆழ்ந்த துயரத்தை தருகிறது. முரண்பாடுகளில் உடன்பாடு என்ற கொள்கையுடன் கருத்து இணக்கத்தை வலியுறுத்தி அவர் எழுதிய நூல்களும், ஆற்றிய உரைகளும் காலம் தோறும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் தாக்கம் உடையவை. 

 

காலத்தின் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் அவர் வழங்கிய மார்க்க வழிகாட்டல்களும், இறைத்தூதரின் போதனைகளின் ஊடாக அவர் சுட்டிக்காட்டிய விஷயங்களும் ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளையும் கடந்து மேலை நாட்டார்களையும் கவர்ந்தது. பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த சிந்தனையாளர்களும், அவர் எடுத்துரைத்த கருத்துக்களை வழி மொழிந்தனர். சமகால சிக்கல்களை எளிதாக அணுகி, பாறைகளை போல தோற்றமளித்த விவகாரங்களில், பனித்துளிகளை போல தீர்வுகளை தந்தவர் என்ற அடிப்படையில் அவரது இழப்பு ஆன்மிக உலகிற்கு பேரிழப்பாகும். 

 

நேர நிர்வாகம், நாம் பிரித்து விட வேண்டாம், முஸ்லிம்கள் எதில் கவனம் செலுத்த வேண்டும்.?, திருக்குர்ஆன் கூறும் பொறுமை, இளைஞர்களே... நாங்கள் உங்களிடம்  எதை எதிர்பார்க்கிறோம்.? முரண்பாடுகளில் உடன்பாடு, இஸ்லாம் நடுநிலை மார்க்கம், உள்ளிட்ட இவரது 120 நூல்களின் அணிவகுப்புகள் பிரமிப்புகளை தருபவை.

 

மாணவர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய, எது முதலில்.? என்ற நூல் மிகப்பெரிய அறிவுக்கொடையாகும். 'சமூக பிரச்சினைகளை தீர்ப்பதில் ஜகாத்தின் பங்கு' என்ற இவரின் ஆய்வு கட்டுரை வறுமை ஒழிப்பை பற்றி பேசியது குறிப்பிடத்தக்கது. ஃபத்வாக்கள் மற்றும் ஆராயச்சிக்கான ஐரோப்பிய மையத்தை இயக்கியதும், அல்ஜெரியா, எகிப்து, கத்தார் ஆகிய நாடுகளில் அறிவொளி பணிகளை நிறுவனமயப்படுத்தியதும், மார்க்க விவகாரங்களில் சீர்திருத்த அணுகுமுறைகளை மேற்கொண்டதும் இவரது ஆளுமைகளை பறைசாற்றியது. 

 

பாலஸ்தீன மக்களின் விடுதலைக்காகவும், சுதந்திர வாழ்வுக்காவும் அவரது இதயம் துடித்த கொண்டே இருந்தது. உலகெங்கும் பரவிய தீவிரவாதத்தையும், தீவிரவாத குழுக்களையும் கடுமையாக எதிர்த்த இவரது துணிச்சலும்  பாராட்டத்தக்கது. Other Side of news என்று உலகை உலுக்கி வரும் அல்ஜெஸீரா பன்னாட்டு ஊடகத்தை உருவாக்கியதில் இவரது பங்களிப்பு அளப்பரியதாகும். இது குரலற்ற மக்களின் குரலை ஒளிபரப்புகிறது. இதன் உருவாக்கத்தில் ஆணிவேராக திகழ்ந்த யூசுப் அல் கர்ளாவியை ஆசிய, ஆப்பிரிக்க மக்கள் நன்றியுடன் நினைவு கூறுவார்கள் என்பதில் ஐயமில்லை. 

 

தான் பிறந்த எகிப்து நாட்டில் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்திட அவர் ஆற்றிய பணிகள் அவரை நாடு துறக்க செய்தது. பிறந்த மண்ணிலிருந்து அகதியாய் செல்ல வழிவகுத்தது. அவர் தொடர்ந்து கத்தாரில் முகாமிட்டு உலகெங்கும் அறிவொளியை சமரசமின்றி, இடையுறாது  பரப்பி வந்தார். அவரது காணொளிகளை வலை தளங்களில் லட்சக்கணக்காணோர் தினமும் கண்டு பயனடைகிறார்கள். மாணவர்களாக மாறி மகிழ்கிறார்கள். இன்று அவர் நம்மிடமிருந்து விடைபெற்றிருக்கிறார். 

 

ஆப்பிரிக்க வானின் நட்சத்திரம் விழுந்து விட்டது. வளைகுடாவில் ஒளி வீசிய முத்து மீண்டும் சிப்பிக்குள் சென்று விட்டது. ஓரிறை உலகம் ஒப்பற்ற மேதையை இழந்திருக்கிறது. பக்குவமும், முதிர்ச்சியும், இணக்கமான சிந்தனைகளும் நிறைந்த ஒருவரை இழந்த வருத்தம் வாட்டுகிறது. இறைவன் அவரது பிழைகளை மன்னித்து, அவரது மறு உலக வாழ்வு சிறப்புற பிரார்த்திக்கிறோம். ஆறுதலை பகிர்ந்து கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

Next Story

“ஊடகவியலாளர்களின் ஜனநாயக உரிமைகளுக்கு குரல் கொடுப்போம்”  - மு.தமிமுன் அன்சாரி

Published on 20/09/2022 | Edited on 20/09/2022

 

“Let's give voice to the democratic rights of journalists” - M. Tamimun Ansari

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே இயங்கிவரும் சக்தி மெட்ரிக்குலேஷன் பள்ளியில் மாணவி ஒருவர் மர்மான முறையில் உயிரிழந்தார். இது தொடர்பான செய்திகளை நமது நக்கீரனில் தொடர்ந்து விசாரணை செய்து வெளியிட்டுவருகிறோம். அந்த வகையில் நேற்று நமது முதன்மைச் செய்தியாளர் பிரகாஷ் மற்றும் ஒளிப்பதிவாளர் அஜித்குமார் ஆகியோரை பள்ளி தாளாளர் ரவிக்குமாரின் சகோதரர் அருண் சுபாஷ் உட்பட 10 பேர் வழிமறித்து கொலைவெறித் தாக்குதல் நடத்தினர். இந்த வழக்கில் தற்போது 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றனர்.

 

அந்த வகையில் மஜக பொதுச்செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான மு.தமிமுன் அன்சாரி, தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் மர்ம மரணத்தின் பின், செய்திகளை புலனாய்வு செய்த 'நக்கீரன்' இதழின் மூத்த செய்தியாளர் பிரகாஷ், ஒளிப்பதிவு கலைஞர் அஜீத் குமார் ஆகியோர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை மஜக வன்மையாக கண்டிக்கிறது. ஊடகவியலாளர்களின் ஜனநாயக உரிமைகளுக்கு குரல் கொடுப்போம்” என்று பதிவிட்டுள்ளார்.