Skip to main content

அத்துமீறினாரா அதிகாரி? முதல்வர் வரை சென்றுள்ள புகார்!

Published on 27/10/2021 | Edited on 27/10/2021

 

th

 

திண்டுக்கல் மாநகரில் உள்ள தொழிற்பேட்டை அருகே இருக்கும் ராயல் சிட்டி நகரில், பொதுமக்கள் குடியிருப்பு அமைந்திருக்கும் சாலைக்குள் அரசு அதிகாரிகளுடன் வந்த பொக்லைன் இயந்திரம், அந்தத் தெருவில் வீடுகளுக்கு முன் இருந்த மரங்கள், செடிகள், வீட்டின் வாசற்படி, கழிவுநீர்க் குழாய், குடிநீர்க் குழாய் ஆகியவற்றை இடித்துத் தள்ளியது. இந்தக் காட்சியைக் கண்ட அத்தெரு மக்கள் பதறிப்போயினர். ஏன் இந்த நடவடிக்கை என மக்கள் அங்கு வந்திருந்த அரசு அதிகாரிகளிடம் கேட்க, போக்குவரத்துக்கு இடையூறாக சாலையை ஆக்கிரமித்துள்ளது. இதுகுறித்து புகாரும் வந்துள்ளதால் இடிக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டது. 

 

அதே குடியிருப்பின், கடைசி வீட்டில் திண்டுக்கல் மாவட்ட சுகாதார துணை இயக்குநர் (D.D.) வரதராஜன் என்பவர் குடியிருக்கிறார். அவர்தான் இந்தப் புகாரைத் தெரிவித்திருக்கிறார் என்று அறிந்த அத்தெரு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் போலீசார் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபடு அவர்களைக் கலைய வைத்தனர். 

 

இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், "இங்கு கடந்த பத்து வருடங்களாகவே சாக்கடை, சாலை வசதிகள் இல்லாததால் இப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் கழிவுநீர் உறைகுழி அமைத்து, அந்த நீரை உறிஞ்சுவதற்காக சிறு சிறு செடிகள், மரங்களை வீட்டுக்கு முன்பாக வைத்திருக்கிறோம். இது போக்குவரத்திற்கு இடையூறின்றிதான் இருக்கின்றது. 

 

Violated officer? Complaint that has gone up to the Chief Minister!

 

இங்கு சாலையும் குண்டும் குழியுமாக இருக்கிறது. கடந்த சில நாட்களாகப் பெய்துவந்த மழையால் சாலையில் செல்ல முடியாத நிலையில்தான் இருக்கிறோம். இருந்தபோதிலும், எப்படியோ சமாளித்துக்கொண்டுதான் இருக்கிறோம். ஆனால், டி.டி., தனது காரில் வேகமாகச் சென்றுவருவது வழக்கம். இந்த நிலையில்தான் தற்போது ஏற்பட்ட சிறு பள்ளங்களும், வீடுகளுக்கு முன் இருக்கும் மரங்களும் அவருக்கு இடையூறாக இருக்கிறது என தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து மாநகராட்சி கமிஷனர் சிவ சுப்பிரமணியத்திடம், ‘எங்கள் பகுதியில் ஆக்கிரமிப்பு இருப்பதால் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கிறது. அதை உடனே அகற்ற வேண்டும்’ என புகார் கொடுத்துள்ளார் டி.டி. வரதராஜன்.

 

இதனைத் தொடர்ந்து கமிஷனரும், மாநகராட்சி அலுவலர்களுடன் பொக்லைன் இயந்திரத்தை இந்தக் குடியிருப்பு பகுதிக்கு அனுப்பி வீடுகளுக்கு அருகிலிருந்த மரங்கள், வீட்டின் வாசற்படி, கழிவுநீர்க் குழாய், குடிநீர்க் குழாய் ஆகியவற்றை கண்மூடித்தனமாக  அதிரடியாக இடித்துத் தள்ளினர்" என்று தெரிவித்தனர். மேலும், டி.டி வரதராஜன் குறித்து தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் மற்றும் மாவட்ட ஆட்சியர் விசாகன் ஆகியோருக்குப் புகார் மனு அளித்துள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். 

 

இந்தச் சம்பவம் குறித்து நாம் சுகாதாரத்துறை துணை இயக்குநர் வரதராஜனை தொடர்புகொண்டோம். அப்போது அவர், “நான், பாதையை ஆக்கிரமித்து சிலர் இடையூறாக கழிவுநீர் உறை மற்றும் மரங்கள் வைத்துள்ளதாக மட்டும்தான் புகார் அளித்தேன். மாநகராட்சி சார்பில்தான் எல்லாவற்றையும் அகற்றியுள்ளனர்” என்று தெரிவித்தார். 

 

Violated officer? Complaint that has gone up to the Chief Minister!
                                                  ஆட்சியர் விசாகன்

 

அப்பகுதி மக்கள் அளித்த புகாரின் அடிப்படையில், இன்று (27.10.2021) டி.டி. வரதராஜன் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களிடம் மாவட்ட ஆட்சியர் விசாகன் விவரங்கள் பெறவிருப்பதாகவும் தெரிகிறது.

 

சுகாதாரத்துறை துணை இயக்குநர் வரதராஜன் பழனி, திண்டுக்கல், தேனி, சங்கரன்கோயில், திருநெல்வேலி, திண்டுக்கல் என அடிக்கடி பணி இடமாறுதலுக்கு உட்படுத்தப்படுபவராகவும் இருந்துவருகிறார் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எல்லாருமே திருடங்கதான்... சொல்லப் போனா...' - பாடலுக்கு நடனமாடியபடி வந்த சுயேச்சை வேட்பாளர்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Independent candidate danced to the song 'ellarume Thirudangathan... sollpona...'

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில் இன்று மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது. நேற்று முக்கிய கட்சிகளின் பிரமுகர்கள் முதல் சுயேச்சை வேட்பாளர்கள் எனப் பலர் இறுதி நாள் என்பதால் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய வரும் சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் சிலர் நூதன முறைகளில் வந்து வேட்புமனு தாக்கல் செய்வது முன்னரே பல தேர்தல்களில் நடந்துள்ளது.

தேர்தல் நேரங்களில் இதுபோன்ற நூதன சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் திண்டுக்கல்லில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சுயேச்சை வேட்பாளர் ஒருவர் 'எல்லாருமே திருடங்கதான் சொல்லப்போனால் குருடங்கதான்' என்ற பாடலை ஒலிக்கவிட்டபடி சாலையில் நடனமாடிக்கொண்டே வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Next Story

காற்றில் பறக்கும் தேர்தல் விதிமுறை-நிலக்கோட்டையில் அதிகாரிகளின் மெத்தனம்

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
Is there an election? Or not?- Complacency of authorities in Nilakottai

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று பிற்பகல் நாட்டின் 18 வது நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. மொத்தமாக ஏழு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு என தீவிரம் காட்டி வரும் நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை தொகுதியில் தேர்தல் நடைமுறைகள் அமல்படுத்துவதில் அரசு அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.

நிலக்கோட்டை பேருந்து நிலையம் அருகே நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதியின் அலுவலகம் உள்ளது. பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு நேற்று தேர்தல் தேதி அறிவித்தும் கூட இதுவரை சீல் வைக்கப்படவில்லை. எம்.எல்.ஏ தேன்மொழி ஆதரவாளர்கள் வழக்கம்போல்  சட்டமன்ற அலுவலகத்தை பூட்டிச் சென்ற பூட்டு மட்டுமே அங்கு காட்சிப் பொருளாக தொங்குகின்றதே தவிர தேர்தல் விதி முறைகளின்படி அந்த அலுவலகத்திற்கு அதிகாரிகள் சீல் வைக்காமல் மெத்தனப் போக்கை கடைபிடித்து வருகிறார்கள்.

இதே போல் தொகுதி முழுவதும் கொடிக் கம்பங்கள் அகற்றப்படவில்லை ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என அனைவரும் சாலையில் வைத்துள்ள பேனர்கள் அப்படியே இருக்கிறது. தொகுதியில் தேர்தல் நடக்கிறதா? இல்லையா? என பொதுமக்கள் கேட்கும் அளவிற்கு அதிகாரிகளின் செயல்பாடு மெத்தனமாக உள்ளதாகக் குற்றச்சாட்டும் எழுந்து வருகிறது.