Skip to main content

குடமுழுக்கு விழாவில் திருட்டு; 3 பெண்கள் கைது 

Published on 03/02/2023 | Edited on 03/02/2023

 

vilupuram district temple function police 

 

விழுப்புரம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அபிராமேஸ்வரர் கோவில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.  இந்தக் கூட்டத்தைப் பயன்படுத்தி, பெண்களிடம் செயின் பறிக்கும் நோக்கத்துடன் சுற்றி வந்துள்ளனர் மூன்று பெண்கள்.  இந்தப் பெண்கள் பண்ருட்டி அருகே உள்ள தொரப்பாடி கிராமத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவரிடமிருந்து பர்ஸ் மற்றும் செயின் ஆகியவற்றைத் திருட முயன்றுள்ளனர். அப்போது சுதாரித்துக் கொண்ட மோகன்ராஜ் மூன்று பெண்களையும் மடக்கிப் பிடித்து அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசாரிடம் ஒப்படைத்தார்.

 

இவர்கள் மூவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் நடத்திய விசாரணையில் மூவரும் கோயம்புத்தூர் மாவட்டம் பாப்பநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த ராஜி என்பவர் மனைவி மேகலா(வயது 45),  ஜோசப் மனைவி மஞ்சு (வயது 47), ஐயப்பன் மனைவி காளியம்மாள் (வயது 46) என்பது தெரிய வந்தது. இவர்கள் மூவரும் இதுபோன்று குடமுழுக்கு விழாக்கள் மற்றும் கோயில் தேர் திருவிழாக்களில் கூடும் பெண்கள் கூட்டத்தில் புகுந்து செயின் பறிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளதும், இவர்கள் மீது பல்வேறு காவல் நிலையங்களில் செயின் பறிக்கும் வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது. இவர்கள் மூவர் மீது வழக்குப் பதிவு செய்த விழுப்புரம் போலீசார் மூவரையும் நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்துள்ளனர்.

 

சில தினங்களுக்கு முன்பு மயிலம் அருகே நடைபெற்ற கோயில் குடமுழுக்கு விழாவில் பெண்களிடம் செயின் பறிக்கும் போது பிடிபட்ட ஐந்து பெண்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த பரபரப்பு ஓய்வதற்குள் அடுத்த செயின் பறிக்கும் சம்பவத்தில் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளது விழுப்புரம் மாவட்ட மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Next Story

தவறி விழுந்த தச்சு தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Tragedy of the fallen carpenter

தஞ்சை சிங்கபெருமாள்குளம் மெயின் ரோடு ரெட்டி பாளையத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மகன் ராஜேந்திரன் (வயது 49). தச்சு தொழிலாளி. இவரது மனைவி ஹேமா (வயது 44). திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. ராஜேந்திரன் திருவரங்கம் மாம்பழ சாலையில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் தங்கி இருந்து தச்சு வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் வேலையின் போது தவறி கீழே விழுந்தார். இதில் காயப்பட்ட அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் ஆனால் சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து திருவரங்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.