Skip to main content

பெண்களைக் கொலை செய்துவிட்டு கொள்ளையடித்த கும்பல்! 

Published on 08/12/2021 | Edited on 08/12/2021

 

viluppuram theft and woman case police caught one

 

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது கண்டப்பன் சாவடி. இந்த ஊரைச் சேர்ந்தவர் தஷ்ணமூர்த்தி, இவரது மனைவி 80 வயது சரோஜா, இவரது மகள் 60 வயது பூங்காவனம். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு பூங்காவனத்தை அம்மணங்குப்பம் என்ற கிராமத்தில் தங்கவேலு என்பவருக்குத் திருமணம் செய்துகொடுத்தனர். அவர்களுக்குத் தற்போது 29 வயதில் வள்ளி என்ற மகள் உள்ளார். கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மகள் வள்ளியுடன் பூங்காவனம் தனது தாய் சரோஜா உடன் வசித்துவருகிறார். 

 

நேற்று முன்தினம் (06.12.2021) வள்ளி மட்டும் தனது உறவினர் வீட்டுக்குச் சென்றதால் சரோஜா, பூங்காவனம் ஆகிய இருவரும் அன்று இரவு வீட்டில் படுத்துத் தூங்கியுள்ளனர். மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் அவர்கள் இருவரும் வீட்டைவிட்டு வெளியே வரவில்லை. இதனால் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சந்தேகமடைந்து, சரோஜா வீட்டுக்குள் சென்று பார்த்துள்ளனர். அங்கே சரோஜாவும் அவரது மகள் பூங்காவனமும் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர். 

 

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், அதுகுறித்து கண்டமங்கலம் போலீசாருக்குத் தகவல் அளித்தனர். அத்தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அதில் நேற்று முன்தினம் அதிகாலை 3 மணி அளவில் சரோஜா வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள், தாய், மகள் இருவரையும் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளனர். அதலிருந்து தப்பிக்க அவர்கள் போராடியுள்ளனர். இதனால் அவர்களை அடித்துக் கொலை செய்துவிட்டு, அவர்கள் அணிந்திருந்த ஒரு பவுன் செயின், கம்மல் ஆகியவற்றைத் திருடிக்கொண்டு சென்றுள்ளனர் என்று தெரியவந்துள்ளது. மேலும், இதுகுறித்து கண்டமங்கலம் போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. பாண்டியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தியுள்ளனர்.

 

அதேபோன்று அப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு மழை பெய்துகொண்டிருந்தபோது அங்குள்ள செங்கல் சூளையில் கல்லிறக்கும் வேலையில் ஈடுபட்டிருந்த நாகலிங்கம், அவரது மனைவி அம்சம்மாள் ஆகிய இருவரும் அங்குள்ள குடிசையில் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தனர். அந்தக் குடிசைக்குள் புகுந்த மர்ம நபர்கள் அம்சம்மாளை வன்கொடுமை செய்ய முயன்றதாகவும், அவர் கத்திக் கூச்சல் போட்டதும் மர்ம நபர்கள் அவரை பலமாக தலையில் தாக்கிவிட்டு தப்பி ஓடியுள்ளதாகவும் தெரிகிறது. இதில் படுகாயமடைந்த அம்சம்மாள் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். 

 

இந்த இரு சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் ஒரே குழுவைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வுசெய்துவருகின்றனர். அதேபோல், இப்பகுதியில் உள்ள கலித்திறம் பட்டு, வம்பு பட்டு ஆகிய கிராமங்களில் உள்ள அம்மன் கோவில், அய்யனார் கோவில் ஆகிய கோவில்களில் உள்ள உண்டியலை உடைத்து, கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவமும் நடந்துள்ளது. இதனையும் அதே குழுவைச் சேர்ந்தவர்கள் செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். 

 

இந்த நிலையில், தனிப்படை போலீசார் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள ஒட்டனந்தல் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்பவரது மகன் 30 வயது கவிதாஸ் என்பவரை கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து கொலை செய்யப்பட்ட சரோஜா, பூங்காவனம் ஆகியோர் அணிந்திருந்த நகைகளைக் கைப்பற்றியுள்ளனர். இவர் அந்தப் பெண்களைக் கொலை செய்த கொலையாளி என்று போலீசார் உறுதி செய்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.