Skip to main content

கூலிப்படையினர் அட்டகாசம்; ஆள்மாறி அரிவாள் வெட்டு

Published on 22/05/2022 | Edited on 22/05/2022

 

 

villupuram incident rowdy police investigation

 

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகில் உள்ளது ஆகூர். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் யமராஜன். இவரது மகன் கோபாலகிருஷ்ணன் (வயது 30) கூலி வேலை செய்துவருகிறார். நேற்று முன்தினம் (20/05/2022) இரவு தந்தை, மகன் இருவர் மட்டுமே வீட்டில் இருந்துள்ளனர் அவர்களது குடும்பத்தினர் அனைவரும், உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வெளியூர் சென்ற நிலையில், அன்று இரவு வீட்டிற்கு அருகில் உள்ள கொட்டகையில் கோபாலகிருஷ்ணன் தனியாக உறங்கி கொண்டிருந்தார். 

 

அப்போது, அங்கு திடீரென வந்த மர்ம கும்பல் ஒன்று கொட்டகையில் உறங்கிக் கொண்டிருந்த கோபாலகிருஷ்ணனை தூக்கிச்சென்று, அவரை அரிவாளால் முகம் தலை உட்பட உடலில் பல பகுதிகளில் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றது. இதில், நிலைதடுமாறிய கோபாலகிருஷ்ணன் வீட்டுக்கு வந்து விழுந்துள்ளார். அவர் உடல் முழுவதும் சேறும், சகதியும் ரத்தமும் ஆக வழிந்துள்ளது. 

 

இதை பார்த்து பதறிப்போன அவரது தந்தை எமராஜன், மகனின் நிலையைக் கண்டு அலறி கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர், அவர்கள் கோபாலகிருஷ்ணனை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு சென்று சேர்த்துள்ளனர். மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இது குறித்து ரோசனை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர் அப்பகுதியினர்.

 

அதன் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், அப்பகுதி பொதுமக்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தினர். அப்போது அப்பகுதி மக்கள் சென்னை பகுதியைச் சேர்ந்த மர்ம நபர்கள் ஆட்டோவில் இரண்டு பேரும் இருசக்கர வாகனத்தில் 3 பேரும் இப்பகுதிக்கு வந்ததாகக் கூறியுள்ளனர். கோபாலகிருஷ்ணனின் சகோதரர் சசிகுமார் என்பவரை முன்விரோதம் காரணமாக வெட்டுவதற்காக, அந்த கும்பல் வந்திருக்கலாம் எனவும், அவர் வெளியூர் சென்றிருந்த நிலையில் அவரது சகோதரர் கோபாலகிருஷ்ணனை ஆள் மாறி வெட்டி விட்டு தப்பி இருக்கலாம் எனவும், காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். 

 

அவர்கள் ஆட்டோவில் வந்து சென்றதை காவல்துறையினருக்கு பொதுமக்கள் தெரிவித்ததின் பேரில் தீவிர கண்காணிப்பில் காவல்துறையினர் ஈடுபட்டனர். அப்போது வெள்ளிமேடு பேட்டை போலீசார் சந்தேகத்திற்கிடமான ஒரு இளைஞரை பிடித்து விசாரணை செய்தனர். அவர் சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த கல்யாணபுரம் பகுதியில் ஆட்டோ ஓட்டி வரும் ரஞ்சித்குமார் என்பவரின் மகன் பிரேம்குமார் (வயது 23) என்பது தெரிய வந்துள்ளது. 

 

கோபாலகிருஷ்ணனை வெட்டிய வழக்கில் இவரை வெள்ளிமேடு பேட்டை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். அவரிடமிருந்த ஆட்டோவையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் கோபாலகிருஷ்ணனை வெட்டிவிட்டு தப்பி ஓடிய கும்பலை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.