Skip to main content

பள்ளி மாணவி தற்கொலை; துக்கம் விசாரிக்கச் சென்றவர்களுக்கு நேர்ந்த துயரம்

Published on 25/03/2023 | Edited on 25/03/2023

 

villupuram avudayarpattu school girl freezer box incident 

 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே ஆவுடையார்பட்டு பகுதியில் உள்ள அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் குமரன். இவரது மகள் கயல்விழி (வயது 17).  இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்துள்ளார். சரியான முறையில் படிக்காமல் கயல்விழி விளையாட்டுத்தனமாக இருந்து வந்தது குறித்து அவரது தாயார் கண்டித்துள்ளார். தாய் கண்டித்ததால் கோபமடைந்த கயல்விழி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 

தகவல் அறிந்த விக்கிரவாண்டி போலீசார் மாணவி உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி, மாணவியின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்து பிறகு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மாணவியின் உடலை வீட்டிற்கு எடுத்துச் சென்ற அவரது உறவினர்கள், ஊர் மக்கள் உறவினர்கள் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக ப்ரீசர் என்னும் சவப்பெட்டியில் வைத்துள்ளனர். அப்போது மாணவியின் உடலைப் பார்த்து கதறிய பெண்கள் சிலர் சவப்பெட்டியின் மீது கையை வைத்துள்ளனர். திடீரென அந்தப் பெட்டியிலிருந்து மின் கசிவு ஏற்பட்டு பெட்டி மீது கை வைத்து அழுது கொண்டிருந்த 9 பெண்கள் மீது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டனர். அங்கு கூடியிருந்தவர்கள் இதைக் கண்டு அதிர்ச்சியும் அடைந்தனர்.

 

உடனடியாக சவப்பெட்டிக்கு செல்லும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மின்சாரத் தாக்குதலுக்கு ஆளான பெண்களை விக்கிரவாண்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு சேர்த்தனர். இது குறித்து விக்கிரவாண்டி காவல் ஆய்வாளர் விநாயக முருகன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். துக்க வீட்டில் அழுது கொண்டிருந்த பெண்கள் மீது திடீரென மின்சாரம் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காதலன் முகத்தில் ஆசிட் அடித்த காதலி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Girlfriend threw toilet cleaning liquid on her boyfriend face

உத்தரப் பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில் சிகிடாவுனி கிராமத்தை சேர்ந்தவர்  ராகேஷ் பிந்த்(26). இவரும் அதைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண்ணும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ராகேஷ் பிந்துக்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அப்போது  கழிவறை சுத்தம் செய்யும் திரவத்தோடு(ஆசிட்)  நிச்சயதார்த்தம் நடக்கும் இடத்திற்கு வந்த லட்சுமி தனது கையில் வைத்திருந்த திரவத்தை ராகேஷ் பிந்து முகத்தில் வீசினார். இதில் அவர் முகம் மற்றும் உடலில் உள்ள சில இடங்களில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதனிடையே அங்கிருந்தவர்கள் லட்சுமியைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். தன்னைக் காதலித்து விட்டு வேறொரு பெண்ணை நிச்சயதார்த்தம் செய்ததால் திரவத்தை வீசியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து லட்சுமியைக் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.