Skip to main content

‘ஏரிக்கரையைச் சுரண்டி சாலை அமைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ - கிராம மக்கள் போராட்டம்

Published on 27/04/2023 | Edited on 27/04/2023

 

Villagers struggle Action should be taken  lake  built the road

 

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த கரிக்கலாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தன் மற்றும் திருநாவுக்கரசு ஆகிய இருவரும் கடந்த மார்ச் மாதம் கரிக்கலாம்பாடி கிராமத்தில் உள்ள 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரியின் 35 அடி அகலம் கொண்ட ஏரிக்கரையை ஜேசிபி இயந்திரம் கொண்டு சுரண்டி சாலை அமைத்து உள்ளதாக கூறப்படுகிறது. 

 

இது குறித்து கிராம பொதுமக்கள் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கீழ்பென்னாத்தூர் வட்டாட்சியர் அலுவலகம், பொதுப்பணித்துறை அலுவலகம், கீழ்பென்னாத்தூர் காவல் நிலையம், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் புகார் தெரிவித்தனர். மேலும் புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஏற்கனவே கரிக்கலாம்பாடி கிராம நிர்வாக அலுவலகத்தில் மார்ச் மாதத்தில் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.

 

Villagers struggle Action should be taken  lake  built the road

 

ஆனால் அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்து, கரிக்கலாம்பாடி கிராம மக்கள் நீதி கேட்டு தொடர் முழுக்க போராட்டத்தினை அறிவித்து இன்று நடைபெறுவதாக இருந்தது. இதற்காக கீழ்பென்னாத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகே கரிக்கலாம்பாடி சேர்ந்த ஊர் பொதுமக்கள் சுமார் 100 பேர் ஒன்று திரண்டு வட்டாட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி செல்ல இருந்தனர். இதனை அடுத்து, திருவண்ணாமலை டிஎஸ்பி குணசேகரன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பேரணியை கைவிட செய்தனர். அதனை தொடர்ந்து, துணை ஆட்சியர் (பயிற்சி) கலைவாணி தலைமையில்  காவல்துறை ஆய்வாளர் கோவிந்தசாமி, பொதுப்பணித்துறை அலுவலர்கள் முன்னிலையில் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

 

இந்த பேச்சுவார்த்தையின் பொழுது கரிக்கலாம்பாடி பொதுமக்கள், 15 நாட்களுக்குள்ளாக ஏரிக்கரையை சுரண்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் பழைய படி ஏரிக்கரையை பலப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அவ்வாறு நடவடிக்கை எடுக்க விட்டால் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட போவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kalachetra former teacher arrested on complaint

அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.